புதன், 7 மார்ச், 2018



பசுமையான துளசிச் செடியை கனவில் கண்டால்? - ஜோதிடர் பதில்கள் !!
ஜோதிடர் பதில்கள் பகுதி - 1 !

1. பசுமையான துளசிச் செடியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 செய்யும் காரியங்களில் எண்ணிய எண்ணம் ஈடேறும்.

🌟 பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும்.

🌟 மேலும், பொருட்சேர்க்கை உண்டாகும்.

2. காகம் தலையில் தட்டி சென்றால் என்ன பலன்?

🌟 காகம் தலையில் தட்டி சென்றால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

🌟 ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

🌟 வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை.

3. இறந்தவர் தான் இறக்கும் தருவாயில் அணிந்திருந்த ஆடை மற்றும் படுக்கையுடன் வீட்டினுள் நுழைவது போன்று கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இம்மாதிரி கனவு வருவது இறந்தவருக்கு சிரார்த்த பூஜைகள் செய்யாமல் இருப்பதைக் சுட்டிக்காட்டுகிறது. எனவே, அவர்களை வழிபட்டு அவர்களுக்கான தர்ப்பணத்தை உரிய காலத்தில் செய்து வர சுபிட்சம் உண்டாகும்.

4. வீட்டின் மீது இடி விழுவதுபோல் கனவு கண்டால் நன்மையா? தீமையா?

🌟 வீட்டின் மீது இடி விழுவதுபோல் கனவு கண்டால் இன்னல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

🌟 நெருங்கிய நபர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியுடன் செயல்பட வேண்டும்.

🌟 ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை.

5. ஆமையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ஆமையை கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும்.

🌟 தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் பெருகும்.

🌟 வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக