வெள்ளி, 27 ஏப்ரல், 2018

நரசிம்ம ஜெயந்தி



இன்று நரசிம்ம ஜெயந்தி : நரசிம்மர் வழிபாடு நினைத்ததை நிறைவேற்றும் !
நரசிம்ம ஜெயந்தி...!!
👉 திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் சிறப்பு வாய்ந்த அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். திருமாலின் அவதாரங்களில் இது நான்காவது அவதாரமாகும். தன் பக்தனின் சொல்லைக் காப்பாற்றவே, விஷ்ணு இந்த அவதாரத்தை நிகழ்த்தினார்.

நரசிம்ம அவதாரம் :

👉 அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனை துன்புறுத்தி வந்தான்.

👉 இரண்யன், அடேய் பிரகலாதா! எங்கேயடா இருக்கிறான் உன் விஷ்ணு? என்று கேட்கிறான்.


👉 தந்தையே! அவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான். எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருக்கின்றான் எனச் சொல்ல இந்த தூணில் இருக்கிறானா, என இரண்யன் தூணை உடைக்க நிகழ்ந்ததே நரசிம்ம அவதாரமாகும்.

👉 பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார்.

நரசிம்ம ஜெயந்தி :

👉 இன்று (28.04.2018) நரசிம்ம ஜெயந்தி அனைத்து நரசிம்மர் கோவில்களிலும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நரசிம்ம ஜெயந்தி வழிபாடு :

👉 நரசிம்மர் வழிபாட்டிற்கு உகந்த நேரம் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையாகும்.

👉 வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் நரசிம்ம ஜெயந்தி அன்று விரதமிருந்து நரசிம்மரை வழிபட்டால் அனைத்து பலன்களையும் பெறலாம்.


👉 நரசிம்மருக்கு சிவப்பு வண்ண மலர்கள், சர்க்கரை பொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுத்து வழிபடலாம்.

👉 விஷ்ணுவுக்கு ஏற்ற மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றையும் நரசிம்மருக்கு படைத்து வழிபாடு செய்வது சிறப்பு.

நரசிம்ம ஜெயந்தி வழிபாட்டின் பலன்கள் :

👉 பாவங்களில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.

👉 'ஓம் நமோ நாராயணாய" எனக் கூறி வழிபட்டால் நாம் செய்த பாவங்களில் இருந்து மோட்சம் அளிப்பார்.

👉 நரசிம்மரை வழிபட்டால் கடன் சுமை குறையும், திருமணத்தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக