இந்த மூன்று சிலைகளை பூஜை அறையில் வைத்தாலே போதுமானது !!
ஐஸ்வர்யம் கிடைக்க இந்த மூன்று சிலைகளை பூஜையறையில் வையுங்கள் !!

🌟 நாம் குடியிருக்கும் வீட்டில் இப்பொழுதெல்லாம் பூஜையறை என்றே தனியொரு அறையை கட்டி விடுகிறோம். அப்படி இல்லாத பட்சத்தில் செல்ப், கபோடு போன்ற அமைப்புகளை உருவாக்கி அதனுள் பூஜைறையை வைத்துக் கொள்கிறோம்.
🌟 பூஜையறை என்றால் அதில் அனைத்து தெய்வங்களின் படங்களும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பெரும்பாலான வீடுகளில் உள்ள பூஜையறைகள் பல தெய்வ சிலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பலரும் பல வித்தியாசமான மற்றும் அழகிய தெய்வ சிலைகளை வாங்கி வந்து பூஜையறையில் வைப்பார்கள். தெய்வ சிலைகள் வீட்டில் இருப்பது மிகவும் நல்ல விஷயமாகும்.
🌟 அதிலும் இந்த மூன்று தெய்வங்களின் சிலைகள் உங்கள் வீட்டில் இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டமும், ஐஸ்வர்யமும் கிடைக்கும்.
🌟 அதாவது, மஞ்சள் அல்லது தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர் சிலையை வைத்திருந்தால், வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கும்.
🌟 ஆலமரம், மாமரம் அல்லது வேப்ப மரத்தாலான விநாயகர் சிலையை பூஜையறையில் வைத்திருப்பது மிகவும் நல்லது. இத்தகைய சிலையை வீட்டில் வைத்திருந்தால், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சந்தோஷமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
🌟 பூஜையறையில் சிவபெருமான் தியானம் செய்வது போன்ற சிலையை வைத்திருப்பது மிகவும் நல்லது. ஆனால், சிவபெருமான் நடனம் ஆடுவது போன்ற சிலையை வைத்திருக்கக்கூடாது.
🌟 ஒன்றிற்கு மேற்பட்ட சிவனின் சிலைகள் பூஜையறையில் இருந்தால், அது வீட்டில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். எனவே, ஒரே ஒரு சிவனின் சிலையை மட்டும் வைத்து வணங்குங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக