சனி, 16 ஜூன், 2018

ரஜ்ஜூ பொருத்தம்

ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எதற்காக?
பத்து பொருத்தங்களில் முக்கியமாக கருதப்படும் பொருத்தங்களில் ரஜ்ஜுப் பொருத்தம் பற்றி விரிவாக பார்க்கலாம். ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன? பொதுவாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமண வயதில் இருக்கும் தம் மகள் அல்லது மகனின் சந்தோஷம்தான் முக்கியமாக கருதுகின்றனர். மேலும், திருமணம் என்றாலே வாழையடி வாழையாக தங்கள் பரம்பரை செழிக்கவும் தங்கள் பிள்ளைகள் பிள்ளைப் பேறுடனும் மற்றும் எந்த குறையும் இன்றி நீண்ட காலம் வாழவும் ஆசைப்படுகின்றனர். அத்தகைய திருமணம் நன்கு அமைய திருமணப் பொருத்தம் பார்க்கின்றனர். செவ்வாய் தோஷம், பாவ சாம்ராஜ்யம், தசா புத்தி சந்திப்பு போன்றவைகள் நன்கு அமைந்வதுடன், அடுத்து பத்து பொருத்தங்கள் பார்த்து விட்டு அதில் ரஜ்ஜுப் பொருத்தம் இல்லை என்றால் அதனை ரஜ்ஜு தட்டுகிறது என்று ஒதுக்கி விடுகின்றார்கள். அது என்ன ரஜ்ஜு பொருத்தம் அதற்கான காரணம்தான் என்ன? என்பது பலருக்கு புரியாத புதிராகவே உள்ளது. அது எப்படி பார்ப்பது எதற்காக பார்ப்பது என்பதனை தெரிந்து கொண்டால் அதன் முக்கியத்துவம் நமக்கு விளங்கும்.
8136ff8568c2f8baac03272dd15e4c0c
ரஜ்ஜுப் பொருத்தம்
ரஜ்ஜுப் பொருத்தம் என்பது 10 விதப் நட்சத்திரப் பொருத்தங்களில் ரஜ்ஜுப் பொருத்தமே சிறப்புடையதாக கருதப்படுகிறது. இப்பொருத்தம் பார்ப்பது எதற்காக எனில் மனைவி கணவனுடன் நீண்ட காலம் சந்தோஷமாக வாழும், பாக்கியத்தை அதாவது நீண்ட காலம் வாழும் ஆயுளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. மற்றும் எதனையெல்லாம் பாதிக்கும் என்பதனை இங்கு காணலாம்.
முதலில் ரஜ்ஜுப் பொருத்தம் எப்படிப் பார்ப்பது-?
நட்சத்திர மண்டலத்தை ஒரு மனிதனாக உருவகப்படுத்திக் கொண்டு அவன் பாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தையும் தொடையில் பரணி வயிற்றில் கார்த்திகை, கழுத்தில் ரோகினி, தலையில் மிருகசீரிடம் என நட்சத்திரங்களை ஏறுமுகமாக வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேல் நோக்கி செல்பவைகளை ஆரோகணம் என்றும், கீழ்நோக்கி வருபவைகளை அவரோகணம் என்றும் கொள்வர்.
தலை (சிரசு):
மிருகசீரிடம் சித்திரை, அவிட்டம்.
கழுத்து (கண்டம்)
ரோகினி, திருவாதிரை, அஸ்தம், ஸ்வாதி, திருவோணம். சதயம்.
வயிறு (உதரம்) கார்த்திகை, புனர்புசம், உத்திரம், விசாகம், உத்ராடம், பூரட்டாதி
பாத (பாதம்) அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி.
இதற்கான நன்மைகள் என்ன?
ஆண் பெண் இருவரும் ஒரே ரஜ்ஜுவில் வரக்கூடாது. ஆண் பெண் இருவரும் சிரசில் அமைந்தால் ஆண் மகனையும் கண்ட ரஜ்ஜுவில் அமைந்தால் பெண்ணையும் உதரப் பகுதியில் குழந்தையையும் பாதிக்கும். தொடைப் பகுதியில் அமைந்தால் பாத ரஜ்ஜுவில் அமைந்தால் வீண் அலைச்சலும் ஏற்படும்.
 ஆண் பெண் இருவரும் ஒரே திசையில் பிறந்திருக்க கூடாது என்பது இப்பொருத்தத்தின் சூட்சுமம் ஆகும்.
 இருவரின் ஆயுள் மற்றும் குடும்ப மகிழ்ச்சியையும் இது குறிப்பிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக