வியாழன், 9 ஆகஸ்ட், 2018

குரு பகவான் மந்திரம்:

ஓம் ஸுராச்சார்ய வித்மஹே ஸுராஸேரேஷ்டாய
தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்
பிரதோஷம் என்பது சிவபெருமானுக்குரிய வழிபாட்டு தினமாகும். அதுவும் ஆடி மாத பிரதோஷம் அதிக ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். பிரதோஷம் வாரத்தின் மற்ற தினங்களை போல வியாழக்கிழமையில் வருவது சிறப்பானதாகும். இத்தினத்தில் மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோவிலுக்கு சென்று சிவ பெருமானையும், பார்வதியையும் வழிபட்ட பின்பு நவகிரகங்கள் சந்நிதியில் குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து, விளக்கேற்றி வழிபட உங்களின் எதிர்காலம் குறித்த பயங்கள் நீங்கும். உடல் மற்றும் மனம் திடம் பெரும். நீங்கள் விரும்பிய காரியங்கள் நிறைவேற தொடங்கும்.
Sivan temple
பிரதோஷ தினத்தில் நந்தி பகவான் தனது குரு மற்றும் இறைவனான சிவ பெருமானை பூஜித்து வணங்குகிறார். வியாழனன்று வரும் பிரதோஷ தினத்தில் நவகிரகங்களில் முழு சுப கிரகமான தேவர்களுக்கு குருவாகிய பிரகஸ்பதி அல்லது குரு பகவானை வழிபடுவதால் நமக்கும் குருவருள் கிடைத்து அவரால் பற்பல நன்மைகள் ஏற்பட வழி பிறக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக