வியாழன், 29 நவம்பர், 2018

மேஷம்
வீர பராக்கிரமம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே... இது நாள் வரை உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் இருந்த ராகு 3ம் இடத்திலும் 10ம் இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் இடப்பெயர்ச்சி அடைய உள்ளனர். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார்.
"ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும். காரியங்களுண்டாம்,அன்னதானங்களுண்டாம்.வாகு மதி மணமுண்டாம்,வரத்து மேல் வரத்துண்டாம்" என்ற ஜோதிட பாடல் படி ராகு இப்பொழுது யோகத்தை வழங்க போகிறார். கடந்த ஓன்றறை ஆண்டுகளாக வரன் தேடியும் அமையாத திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும்.
செய்யும் தொழிலிலோ பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும்.புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். இது வரை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள்.செல்வாக்கு உள்ள பிரமுகர்கள் தொடர்பு கிடைக்கும்.அதனால் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும்.குடும்பத்தில் நீண்ட நாள் பிரச்சனைகள் திரும்.
மனிதர்களுக்கு மோட்சத்தை கொடுக்க கூடிய கேது 9ல் வருவதால் உங்களுடைய பிரச்சனைகளுக்காக கோயில் பூஜை பரிகாரம் செய்தும் நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டிர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய வருமானமும் கிடைக்கும். பெண்களுக்கு புத்திர ஸ்தானம் 9ம் பாவம், அந்த 9ம் இடத்திற்கு கேது வருவதால் புத்திர பாக்கியமும் அதனால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் உற்றார் உறவினர் பகை மறந்து சந்தோசமாக இணையலாம். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு அவசியம்.

திங்கள், 26 நவம்பர், 2018

மேஷம்
விடா முயற்சியே விஸ்வரூப வெற்றி என்பதை உணர்ந்து கொண்ட மேஷ ராசிக்காரர்களே. இந்த ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. சுப கிரகமான குருபகவான் எட்டாம் வீட்டில் இருந்தால் அவர் பார்க்கும் வீடுகள் உங்களுக்கு பணவரவையும் லாபத்தையும் தரும். மார்ச் மாதம் முதல் அவர் அதிசாரமாக தனுசு ராசிக்கு செல்கிறார். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அரசாங்க விஷயங்கள் அனுகூலமாக முடியும். தந்தை ஆதரவாக இருப்பார். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.10.4.19 முதல் 8.8.19 வரை வக்ரகதியிலும் செல்வதால், அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டாகும்.
அக்டோபர் மாதம் நிகழ உள்ள குருப்பெயர்ச்சி அதி அற்புதமான யோகங்களை தரப்போகிறது. பாக்கிய ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் சஞ்சாரத்தினால் நீங்கள் வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. பொருளாதார நிலை படு சூப்பராக இருக்கும் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை காலி செய்ய பல வழிகள் இருந்தாலும் அதை சுப விரைய செலவாக மாற்றி விடுங்கள்.
ராகு கேது பெயர்ச்சியினால் நன்மைகள் நடைபெறும். 3ம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். பெண்களுக்கு புத்திர ஸ்தானம் 9ஆம் பாவம், இந்த இடத்திற்கு கேது வருவதால் புத்திர பாக்கியமும் அதனால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாதித்தியம் கிடைக்கும்

சனி, 24 நவம்பர், 2018

தெரிந்து கொள்வோம்

Google.com/+bharathegopu

கப்கேக், ஓரியோ, ஜெல்லி பீன் போன்றவை ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். சரி அப்படியென்றால் ஸ்டாக் ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு ஒன், ஆண்ட்ராய்டு கோ என அழைக்கப்படுபவை என்ன? என்பதுதான் பலருக்கும் குழப்பமாக இருந்திருக்கும். எளிமையாகச் சொல்லவேண்டுமானால் ஓரியோ, ஜெல்லி பீன் போன்றவை உணவுப்பொருள்கள் என்று எடுத்துக்கொண்டால் ஸ்டாக் ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு ஒன், ஆண்ட்ராய்டு கோ ஆகியவற்றை அவற்றின் சுவையாக எடுத்துக்கொள்ளலாம். இந்தச் சுவைகளில் இருக்கும் வித்தியாசங்கள் என்னவென்று பார்ப்பதற்கு முன்பு எப்படி நம் மொபைல்களுக்கு ஆண்ட்ராய்டு மென்பொருள் வந்துசேருகிறது என்பதைப் பார்ப்போம்.

ஸ்டாக் ஆண்ட்ராய்டு
கூகுள் தனது ஆண்ட்ராய்டு வெர்ஷன்களின் Source Code-களை பொதுவெளியில் வெளியிடும். இவை Open source Project என்பதால் இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளமுடியும். மொபைல் நிறுவனங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு தோற்றத்திலும் வசதிகளிலும் மட்டும் சிறுசிறு மாற்றங்களைச் செய்து தங்கள் மொபைல்களில் அவற்றைச் செயல்படுத்தும். சாம்சங்கின் டச் விஸ், HTC-யின் சென்ஸ், ஒன்ப்ளஸ் ஆக்சிஜன்OS என மொபைல்களில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்களின் UI மென்பொருள்கள் இப்படித்தான் தயாராகிறது. ஆனால், இப்படி மாற்றங்கள் செய்து வெளியிடுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் பெர்ஃபார்மன்ஸ் குறையலாம், பாதுகாப்பில் பிரச்னைகள் வரலாம், அப்டேட்கள் உடனடியாகக் கிடைக்காது. சில சமயங்களில் தயாரிப்பு நிறுவனங்கள் தரும் UI-க்களே மோசமாக இருக்கும்.

இதனால் கூகுள் சில மாற்றங்களுடன் தங்களது ஆண்ட்ராய்டு ஒன் மற்றும் ஆண்ட்ராய்டு கோ எடிஷன்களை வெளியிடத் தொடங்கியது. இவை என்னவென்று பார்ப்போம்.

ஸ்டாக் ஆண்ட்ராய்டு

மாற்றங்கள் எதுவுமே செய்யப்படாமல் கூகுள் எப்படி வெளியிடுகிறதோ அப்படியே இருப்பதுதான் ஸ்டாக் ஆண்ட்ராய்டு. இதில் இருக்கும் முக்கியமான நன்மையாகப் பார்க்கப்படுவது கூகுள் ஏதேனும் அப்டேட் வெளியிட்டாலோ, பாதுகாப்பு வசதிகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்தாலோ இந்த மொபைல்களுக்கு உடனடியாக  அவை கிடைத்துவிடும். மற்ற மொபைல்களில் வாங்கும்போதே தேவையில்லாத செயலிகள் சில இருக்கும், இவற்றை சில நேரங்களில் அன்இன்ஸ்டால் செய்யவும் முடியாது. நேரடியாக வருவதால் ஸ்டாக் ஆண்ட்ராய்டில் அப்படி ஒன்றுகூட இருக்க வாய்ப்பில்லை. நெக்சஸ் மற்றும் பிக்ஸல் மொபைல்கள் கூகுளிடமிருந்து வருவதால் இந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டுதான் அவற்றில் இருக்கும். இதைத்தவிர வெகுசில மொபைல்கள் மட்டும் ஸ்டாக் ஆண்ட்ராய்டுடன் வரும். ஆனால் ஓரளவு நல்ல ஹார்டுவேர் கொண்ட மொபைல்களில்தான் இது இலகுவாக இயங்கும். மற்ற போன்கள் இதில் இயங்கச் சற்றுத் திணறும்.

ஆண்ட்ராய்டு ஒன்

2014-ல் அறிமுகமான இது ஆரம்பவிலை மொபைல்களுக்கும் இந்தக் கலப்படமில்லாத ஆண்ட்ராய்டு சேவையை வழங்கும் நோக்கில் கூகுளால் வடிவமைக்கப்பட்டது. ஆனால், இன்று அதைத்தாண்டி மிட்-ரேன்ஜ் மொபைல்கள் வரை வளர்ந்துள்ளது ஆண்ட்ராய்டு ஒன். இதன்மூலம் பிரீமியம் மொபைல்கள் மட்டுமன்றி சாதாரண விலை மொபைல்களுக்கும் ஆண்ட்ராய்டு முழுமையாகக் கொண்டுசெல்ல வழிவகை செய்யப்பட்டது. இதிலும் அப்டேட்கள் உடனுக்குடன் கிடைக்கும். ஸ்டாக் ஆண்ட்ராய்டுக்கும் இதற்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் இது கூகுளின் `ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் ப்ராஜெக்ட்'-டில் வராது. ஒப்பந்தத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும்தான் இந்த ஆண்ட்ராய்டு ஒன் சேவை. இதிலும் தேவையில்லாத செயலிகள் மற்றும் தோற்ற மாற்றங்கள் பெரிதாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ளும் கூகுள்.

Android One
ஆண்ட்ராய்டு கோ

இதுவும் ஆண்ட்ராய்டு ஒன் உருவாக்கப்பட்ட அதே நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுதான். எப்படி ஃபேஸ்புக் செயலுக்கு மாற்றாகக் குறைந்த அளவு டேட்டாவைச் செலவழிக்கும் ஃபேஸ்புக் லைட் செயலி இருக்கிறதோ அதே போன்றுதான் `ஆண்ட்ராய்டு கோ'வும். குறைந்த விலை மொபைல்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இது 512 MB அல்லது 1 GB RAM-மிலும் எந்த ஒரு பிரச்னையுமின்றி இயங்கவல்லது. மேலும் கூகுள் செயலிகளின் லைட் வெர்ஷன்கள் ஆண்ட்ராய்டு கோ மொபைல்களுக்குக் கிடைக்கும். இவை 5 MB முதல் 10 MB தான் இருக்கும். ஆனால் முழு வசதிகளையும் இதில் எதிர்பார்க்கமுடியாது. ஸ்டோரேஜை முடிந்த அளவு சேமிப்பதே இதன் முக்கியக் குறிக்கோள். இப்போது ஆண்ட்ராய்டு ஒன், மிட்-ரேன்ஜ் மொபைல்களின் மீது முழுவதுமாக தன் கவனத்தைத் திருப்பிவிட்டநிலையில் ஆண்ட்ராய்டு கோ முழுவதுமாக குறைந்த விலை மொபைல்களில் மட்டும் கவனம் செலுத்தும்.

Android Go
இதில் எது பெஸ்ட் என்ற கேள்விக்குச் சரியான பதிலே இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மொபைல் வகைக்கேற்ப மாற்றியமைக்கப் பட்டிருக்கும். இதுதவிர வரும் மொபைல்களுடன் வரும் மற்ற ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள் எல்லாம் அந்தந்த நிறுவனங்களால் Customize செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு OS-களே!

வெள்ளி, 2 நவம்பர், 2018

பொருத்தம்

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போதே, பெண்ணின் ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கையை வைத்து குடும்பத்திற்கு சரிப்பட்டு வருமா என்று கேட்கின்றனர். பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை கூடவே ராகு இருந்தால் அந்த பெண்ணையே வேண்டாம் என்று ஒதுக்கும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள்.


ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற நிலை யாருக்கு அமையும், செகண்ட் சேனல், கள்ளத் தொடர்பு யாருக்கு ஏற்படும் என்பதை ஜாதகத்தில் கிரகங்களின் நிலையை வைத்து அறிந்து கொள்ளலாம். பெண்ணின் கற்பை ஜாதகத்தில் பார்க்கும் ஜோதிடர்கள், ஆணின் கற்பு நிலை பற்றி கண்டு கொள்வதில்லை.


திருமணத்துக்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிப்பார்கள். ஒன்று செவ்வாய் தோஷம், மற்றொன்று ராகுகேது தோஷம். செவ்வாய் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12ல் இருந்தால் தோஷம். ராகுகேது லக்னம், 2, 7, 8ல் இருந்தால் தோஷம். இந்த இடங்கள் எல்லாம் காதல் சுகத்தையும், குடும்ப தாம்பத்ய சுகத்தையும், இல்லற வாழ்க்கையையும் குறிக்கும் இடங்களாகும். எனவேதான் தோஷம் உள்ள ஜாதகமாக பார்த்து சேர்த்தார்கள். அப்படி பார்க்காமல் சேர்ப்பதால்தான் நிர்மலா தேவி போலவோ, கல்யாண மன்னன் போலவோ கணவன், மனைவி அமைந்து வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுகிறது.


பாவிகளுடன் இணைந்த சுக்கிரன்

லக்னம், ராசி, மூன்றாமிடமாகிய போகஸ்தானம், ஏழாமிடமாகிய களத்திரஸ்தானம், பன்னிரெண்டாம் இடமாகிய அயனசயன ஸ்தானம் ஆகிய ஒன்றில் சுக்கிரன் இருந்து பாவிகளாகிய சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன் இணைவதோ அல்லது பார்வை பெறுவதோ ஒருவரின் காம உணர்வை அதிகமாக்கி விடும்.

தடம் மாறும் உறவுகள்

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனோடு சனி இணைந்து இருந்தால் மாறுபட்ட நிலையில் உறவு முறை கொள்வார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணி இருந்தாலும் ஒரு கிரகத்தின் தசா புத்தி நடக்கும் போது இது போன்ற கள்ளத் தொடர்புகள் எற்படுகின்றன. கள்ளக்காதலின் வேகத்தில் கணவனை மனைவியோ, மனைவியை கணவனோ கொலை செய்யும் நிலை கூட சிலருக்கு ஏற்படுகிறது.

மரணத்திற்கு காரணம்

ஒரு ஆணின் ஜாதகத்தில் மனைவியை குறிக்கக் கூடிய லக்னத்திற்கு ஏழாம் இடத்து அதிபதியும், மனைவிக்கு காரகம் வகிக்கும் சுக்கிரனும் ஆயுள் ஸ்தானத்திற்கு விரைய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இடத்தில் இருந்தாலோ, இந்த வீட்டுக்கு அதிபதியான கிரகங்களுடன் தொடர்பு பெற்று இருந்தாலோ அந்த ஜாதகனின் ஆயுள் முடிவதற்கு மனைவியே காரணம் ஆவாள்.

பெண்ணின் ஜாதகம்

பெண்ணின் ஜாதகத்தில் நான்காம் இடம் என்பது கற்பு நிலையை குறிக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும்.

கிரகங்களின் சேர்க்கை

ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், ராகுகேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், ஒழுக்க குறைபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். ஏழாம் வீட்டில் சூரியன் புதன் சேர்க்கை, ஏழாம் அதிபதி சுக்கிரன் ஆறாம் வீட்டில் சனி, குரு உடன் சேர்ந்து இருப்பது. 4 ஆம் வீட்டில் ராகு இருப்பது அந்தந்த தசா புத்தி காலத்தில் தடுமாற்றத்தை தரும்.

எல்லை மீறும் காமம்

ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தால் அந்த தசாபுத்தி காலத்தில் தடுமாற்றம் ஏற்படும். ஒருவருக்கு சுக்கிரதிசை நடக்கும் போது காம உணர்ச்சி அதிகமா இருக்கும். ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். அதே ராசியில் சுக்கிரன் இருந்தால், காமம் எல்லை மீறும். விருச்சிகத்தில் சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். எந்த எல்லைக்கும் போக தயங்கமாட்டார்கள். இப்படி கிரக சேர்க்கை அமைந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அம்பாளையும், செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடலாம். கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.