வெள்ளி, 6 ஏப்ரல், 2018

குழந்தைக்கு பெயர் சூட்ட

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற நம் வாழ்வில் கிடைக்கும் பதினாறு பேறுகளில் நன் மக்கட்பேறே மிகச் சிறப்பானதாகும். அறிவிற்சிறந்த, நற்பண்புடன் கூடிய பிள்ளைகளைப் பெறுவது என்பது மாபெரும் வரம் அல்லவா? அப்படி, தவமாக தவமிருந்து பெற்றெடுக்கும் குழந்தைச் செல்வம் என்பது எத்தகைய பாக்கியமோ, அதேபோன்று அந்த குழந்தைக்கு   நல்லதொரு பெயர் அமைவதும் பெரும் கொடுப்பினை ஆகும்.

குழந்தை பிறந்தவுடன், எந்தப் பெயர் வைத்தால் அக்குழந்தையின் வருங்காலம் சிறப்பாக, அதிர்ஷ்டமானதாக அமையும் என்று ஆய்வு செய்வதும், சிறப்பான பெயர் அமையவேண்டும் என்பதும் பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். அதைப் பூர்த்தி செய்யவே இந்த கட்டுரை.
ஜென்ம நட்சத்திரப்படி பெயர் சூட்டுவது, நட்சத்திர நாம எழுத்துப்படி பெயர் வைப்பது, நியூமராலஜிப்படி பெயர் வைப்பது என பல வழிகள் உண்டு. குழந்தை பிறந்த நட்சத்திரப்படி பெயர் வைப்பதே தொன்றுதொட்டு இருந்துவரும் மரபாகும். 
12 ராசிகள், 27 நட்சத்திரங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு ‘நாம நட்சத்திர’ எழுத்துக்கள் உண்டு. அதன்படி பெயர்  அமைப்பது  விசேஷமாகும்.

பஞ்சாங்கத்தில் நாம நட்சத்திர எழுத்து என்று இருக்கும். அதில் ஒருவர் பிறந்த நட்சத்திரத்துக்கு நான்கு எழுத்துக்கள்  தரப்பட்டிருக்கும். அந்த எழுத்தில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக வைத்துக்கொள்ளலாம். 

குறிப்பாக, ஒருவரது பிறந்த நட்சத்திரம் அசுவினி என்று எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு. அசுவினியைப் பொறுத்தவரையிலும் முதல் பாதத்துக்கு ‘சு’ என்ற எழுத்தும், 2-ஆம் பாதத்துக்கு ‘சே’ என்ற எழுத்தும், 3-ஆம் பாதத்துக்கு ‘சோ’ என்ற எழுத்தும், 4-ம் பாதத்துக்கு, ‘லா’ என்ற எழுத்தும் நட்சத்திர எழுத்தாக வரும். அதன்படி, ஒருவர் அசுவினி 1-ஆம் பாதத்தில் ஜனித்தவர் என்றால், அவருடைய பெயரின் முதல் எழுத்து, ‘சு’ என்று ஆரம்பித்தால் சிறப்பாகும். இப்படி ஒவ்வொரு நட்சத்திர பாதத்துக்கும் ஏற்றப்படி பெயர் முதல் எழுத்தை அமைத்துக் கொள்வது  விசேஷமாகும். 

அதேபோல், ஒருவர் தம் மூதாதையரின் பெயர்களையும் வைத்துக்கொள்ளலாம். மிகச் சிறந்த அறிஞர்கள், வாழ்வில் வளம் பெற்றவர்கள், முக்கியஸ்தர்களாக இருந்தவர்கள் ஆகியோரது பெயர்களையும் வைத்துக்கொள்ளலாம். 

அடுத்து, பிறந்த தேதியின் அடிப்படையில் பெயர் சூட்டுவது குறித்து அறிவோம். பிறந்த தேதியின் எண்ணே பிறவி எண் ஆகும். பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டி வரும் ஒற்றை எண்ணே ‘விதி  எண்’ ஆகும். பிறவி எண்ணும், விதி எண்ணும் விதிப்படியே நமக்கு அமையும். அவற்றை நாம் தேடிப் பெற முடியாது; மாற்றிக்கொள்ளவும் முடியாது. அவை இயற்கையாக, நம் முன்ஜன்ம புண்ணிய, பாவ கர்மாக்களைக் கொண்டு அமைவதாகும். பிறவி எண்ணுக்கும் விதி எண்ணுக்கும் பொருத்தமான எண்ணை நம் பெயர் எண்ணாக வைத்துக் கொண்டால்  அதிர்ஷ்டத்தைப் பெருக்கிக்கொள்ளலாம். அதாவது, பிறவி எண்ணுக்கும் விதி எண்ணுக்கும் பொருத்தமான நட்பு  எண்ணைப் பெயர் எண்ணாக அமைப்பார்கள்.
ஆஸ்ட்ரோ  நியூமராலஜிபடி-  ஜாதகத்தில் அக்குழந்தையின் பிறந்த தேதி, மாத, வருட, நேரத்தைப் பொறுத்து... ராசி, லக்னப்படி எந்தக் கிரகம் வலுவாக, யோக பாக்கியங்களைத் தரும் நிலையில் உள்ளது என்பதை ஆராய்ந்து, அந்தக் கிரகத்தின் எண்ணைப் பெயர் எண்ணாக அமைத்துக்கொள்வதும் அதற்கேற்ற பெயரை தேர்வு செய்வதும் சிறப்பு.

உதாரணமாக, பிறவி எண் 1-ஆகவும், விதி எண் 3-ஆகவும் உள்ள ஒருவருக்கு பெயர் எண் 1, 3, 9-ஆக அமைவது சிறப்பு. இந்த மூன்று எண்களில், எண் 1-க்கு உரிய சூரியன், 3-க்கு உரிய குரு, 9-க்கு உரிய செவ்வாய் ஆகிய கிரகங்களில் எந்தக் கிரகத்தால் ஜாதகருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என ஆராய்ந்து, அந்த கிரகத்துக்கு உரிய எண் பெயர் எண்ணாக வரும்படி  பெயரை  தேர்வு செய்வதால், வாழ்வில் சுபிட்சம் கூடும்; சுப பலன்கள் அதிகம் கிடைக்கும்.
ஆங்கில எழுத்துக்கள் இருபத்தாறுக்கும் உரிய எண்கள் இங்கே தரப்பட்டுள்ளன. 
A I J Q Y - 1. 
B, K, R - 2, 
C, G, L , S - 3. 
D, M, T - 4.  
E, H, N, X - 5.
U, V, W - 6. 
O, Z - 7, 
F, P - 8. 
இந்த எழுத்துக்களைக் கொண்டு ஒருவரது பெயர் எண்ணை அறியலாம். இந்த எண்கள் சீரோ முறைப்படி தரப்பட்டுள்ளன.
குழந்தையின் பெயர் இனிஷியலுடன் (தகப்பனார் பெயரின்  முதல் எழுத்து) சேர்த்துப் பார்க்கவேண்டும். அதாவது அசுவினி 1-ஆம் பாதத்தில் பிறந்த குழந்தைக்குப் பெயரின் முதல் எழுத்து ‘சு' என வருவது நாம நட்சத்திர  எழுத்தாகும். குழந்தையின் அப்பாவின் பெயர் தர் எனக் கொள்வோம். குழந்தையின் பெயர் சுப்பிரமணியன் என்றால்
S. SUBRAMANIAN என்ற பெயர் வரும். 

S. S U B R A M A N I A N

3  3 6 2 2 1 4 1 5 1 1 5 =34 வரும்.  
பெயரின் கூட்டு ஒற்றை எண் 7 ஆகும். பெயரின் கூட்டு ஒற்றை எண் 2, 4, 7, 8-ஆக அமைவது கூடாது. பிறவி எண்: குழந்தை பிறந்த தேதி 30-12-2014 எனக் கொள்வோம். குழந்தை பிறந்த தேதி எண் 3. அதாவது  30-ன் ஒற்றை எண். இது, குருவுக்கு உரிய எண். விதி எண்: 4. இது ராகுவின் எண். 
பெயர் எண் 1, 3, 9-ஆக அமைவது சிறப்பு. சிலர், குலப் பெயரையும் சேர்த்துக்கொண்டு பெயர் அமைப்பார்கள். ஆகவே, அதற்குரிய எண்களையும் சேர்த்துக் கொண்டு பார்ப்பது நல்லது. 
அதேபோன்று சில பொதுவான விஷயங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது, பெயரில் ash, thi என்று வராமல் இருப்பது சிறப்பாகும். பெயர் ‘A’ என்ற எழுத்தில் முடிவது விசேஷமாகும். 

ஜாதகப்படி எந்த எண்ணுக்கு அதிக பலம் உள்ளது என்பதை அறிந்து, அந்த எண்ணில் குழந்தையின் பெயர் அமைவது  விசேஷ மாகும். லக்னப்படி பார்ப்பதே நல்லது. 
பெயர் கூட்டு எண் 1=ஆக வருமானால் 37-ம் 46-ம் விசேஷமானவை. 
3-ஆக வருமானால் 21, 30, 66 விசேஷமானவை.

5-ஆக வருமானால் 23, 32, 41 அதிர்ஷ்டமானவை. 

6-ஆக வருமானால் 24, 33, 42 விசேஷமானவை. 

9-ஆக வருமானால் 27, 45, 54, சிறந்தவை. 
பொதுவாக பிறவி எண் (பிறந்த தேதி எண்ணின் ஒற்றை எண்), விதி எண் (பிறந்த தேதி, மாதம், வருடம் இவற்றின் கூட்டு ஒற்றை  எண்) பெயர் எண் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று நட்பாக இருப்பது விசேஷமாகும். அப்படி அமையப் பெற்றவர்கள் பெரும் தனவான் ஆவார்கள். சகல பாக்கியங்களும் அவர்களுக்குக் கிடைக்கும். முக்கியஸ்தர் ஆக முடியும்.
பிறவி எண், விதி எண், பெயர் எண்களுக்கு உரிய கிரகங்கள் ஜாதகத்திலும் சிறப்பான நிலையில் இருப்பார்களானால் இரட்டிப்பு நற்பலன்கள் உண்டாகும். 
 
இனி, 27 நட்சத்திரங்களுக்கும் உகந்த பெயர் முதல் எழுத்துக்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.
அசுவினி:  கேது நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் சு, சே, சோ, லா ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
பரணி:  இதில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர அதிபதி ஆவார். லி, லூ, லே, லோ ஆகியவற்றில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்.
கிருத்திகை: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் அ, இ, ஊ, ஏ ஆகியவற்றில் ஒன்றை முதலெழுத்தாக ஏற்கலாம்.
ரோகிணி: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நட்சத்திர அதிபதி. ஒ, வ, வி, வூ ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்.
மிருகசீரிஷம்: இதில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திர அதிபதி ஆவார். வே, வோ, கா, கி, ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
திருவாதிரை:  இதில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி ராகு. இவர்கள் கு, க, ஞா, சா ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்.
புனர்பூசம்:  இதில் பிறந்தவர்களுக்கு குரு நட்சத்திர அதிபதி. இதில் பிறந்தவர்கள் கே, கோ, ஹ, ஹி ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
பூசம்: இதில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி சனி. இவர்கள் ஹீ, ஹே, ஹோ, ட ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
ஆயில்யம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் டி, டு, டே, டோ ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
மகம்:  இதில் பிறந்தவர்களுக்கு கேது நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் ம, மி, மு, மே ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்
பூரம்:  இதில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன்  நட்சத்திர அதிபதி.இதில் பிறந்தவர்கள் மோ, ட, டி, டு ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்.
உத்திரம்: இதில் பிறந்தவர்களுக்கு சூரியன் நட்சத்திர அதிபதி ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் டே, டோ, ப,பி ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
அஸ்தம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் பு, ஷ, ட ஆகிய எழுத்துகளில் ஒன்றை முதலெழுத்தாக ஏற்கலாம்.
சித்திரை: இதில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் பே, போ, ர, ரி ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
சுவாதி: இதில் பிறந்தவர்களுக்கு ராகு நட்சத்திர அதிபதி ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரு, ரே, ரோ, தா ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
விசாகம்:  இதில் பிறந்தவர்களுக்கு குரு நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் தீ, து, தே, தோ ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
அனுஷம்: இதில் பிறந்தவர்களுக்கு சனி நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் ந, நி, நு, நே ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
கேட்டை: இதில் பிறந்தவர்களுக்கு புதன்  நட்சத்திர அதிபதி.  நோ, ய, யி, யு ஆகியவை உகந்தவை.
மூலம்: இதில் பிறந்தவர்களுக்கு கேது நட்சத்திர அதிபதி. யே, யோ, ப, பி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
பூராடம்: இதில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர அதிபதி. பு, த, ப, ட ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
உத்திராடம்: இதில் பிறந்தவர்களுக்கு சூரியன் நட்சத்திர அதிபதி. பே, போ, ஜ, ஜி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
திருவோணம்: இதில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நட்சத்திர அதிபதி.  கி, கு, கே, கோ ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
அவிட்டம்: இதில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திர அதிபதி. க, கி, கு, கே ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
சதயம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு  நட்சத்திர அதிபதி ஆவார். கோ, ஸ, ஸி, ஸு ஆகியன உகந்த முதலெழுத்துக்கள் ஆகும்.
பூரட்டாதி: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு  நட்சத்திர அதிபதி. ஸே, ஸோ, த, தி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
உத்திரட்டாதி:  இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி நட்சத்திர அதிபதி. து,ஸ, ச, த ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
ரேவதி: இதில் பிறந்தவர்களுக்கு புதன் நட்சத்திர அதிபதி. தே, தோ, ச, சி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள் ஆகும்.

சஷ்டி திதி சிறப்பு

சஷ்டி திதியில் என்னென்ன செய்யலாம்?
சஷ்டியின் சிறப்புகள்.!

சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கிறது. இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.

அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஆறாவது நாள் சஷ்டி ஆகும். ஷட் எனும் வடமொழிச் சொல் ஆறு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட காலக்கணிப்பில் ஆறாவது நாளாக வருவதால் இந்த நாள் சஷ்டி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

அமாவாசையை அடுத்துவரும் சஷ்டியைச் சுக்கில பட்ச சஷ்டி (அ) வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்தவரும் சஷ்டி கிருஷ்ண பட்ச சஷ்டி (அ) தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழி எழுந்தது. திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.

சஷ்டியின் சிறப்புகள் :

👉 சஷ்டி முருகனுக்குரிய சிறப்பு நாளாகும். ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி கந்த சஷ்டி ஆகும். இந்த கந்த சஷ்டி விழாவானது முருகக்கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும்.

👉 சஷ்டி திதியில் வேலைக்கு சேருதல், வீடு வாகனம் வாங்குதல், மருத்துவ தொழில் தொடங்குதல் போன்றவை செய்ய உகந்த நாளாகும்.

👉 சஷ்டி விரதம் இருந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன் தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.

👉 சஷ்டியில் விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற்று வாழ்வில் அனைத்து செல்வ வளமும் பெறலாம்.

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம் நெஞ்சிற்
பதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்து ஒங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந் தனை.

வியாழன், 5 ஏப்ரல், 2018

இந்து சாஸ்திரங்கள்

இந்து சாஸ்திரத்தில், மனிதன் ஒருவன் பிறப்பதற்கு முன்பிருந்தே பல்வேறு சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இறப்புக்குப் பின்னும் அவை தொடரும். இதுபோன்ற சடங்குகளையும், நாம் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் விஷயங்கள், வீடு கட்டுவது, தொழில் துவக்கம் முதலான நற்காரியங்களையும் உரிய நாட்களைத் தேர்வு செய்து அன்று ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன ஞான நூல்கள். அவை தரும் விளக்கங்களின்படி, எந்தெந்த விஷயங்களை எந்தெந்த நாட்களில் நிகழ்த்தலாம் என்பது குறித்து அறிந்துகொள்வோம்.
குழந்தைக்கு எப்போது பெயர் சூட்டலாம்?
தந்தை குழந்தையின் பெயரை அதன் காதில் மூன்று முறை கூறவேண்டும். அப்போது உறவினர்கள் அதை திரும்பச் சொல்லவேண்டும். அந்த தருணத்தில் குழந்தையின் உள்ளங்கையில் தங்கக்காசு ஒன்றை வைப்பார்கள். குழந்தை பிறந்து 10, 11, 12 அல்லது 16ம் நாளில் பெயர் சூட்டலாம்.
பெயர் சூட்டுவதற்கு உகந்த சுப கிழமைகள்: திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி.
திதி: ரிக்தா திதிகள் (4, 9, 14வது திதிகள்) அஷ்டமி தவிர மற்றவை.
நட்சத்திரம்: சர, ஸ்திர, துரித, சாது நட்சத்திரங்கள் முறையே புனர்பூசம், சுவாதி, திருவோணம், அவிட்டம், சதயம், ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அசுவினி, பூசம், அஸ்தம், மிருகசீரிடம், சித்திரை, அனுஷம் அல்லது ரேவதி சிறந்தவை.
யோகம்: விஷ்கம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வ்யாகாதம், வஜ்ரம், வ்யதிபாதம், பரிகம் மற்றும் வைதிருதி தவிர பிற யோகங்கள் சிறந்தவை.
கரணம்: சகுனி, விஷ்டி தவிர பிற கரணங்கள் சிறந்தவை.
மேற்கண்ட யோகம் மற்றும் கரணம் அனைத்தும் சுப காரியங்களுக்கும் விலக்கப்பட்டவை. இவை தவிர மற்ற யோகங்கள், கரணங்கள் மற்றும் கிழமைகள் சிறந்தவை.
மேலும் மேற்கண்ட பஞ்சாங்க விஷயங்கள் அல்லாமல் சடங்கு வைக்கும் நாளில் பஞ்சக சுத்தி, ஜாதகரின் ஜாதகத் தன்மை, கிரகண தோஷங்கள், சங்கராந்தி மற்றும் சந்தியாகாலம் போன்றவற்றையும் கவனித்து முகூர்த்தம் குறிக்கவேண்டும்.
அன்ன ப்ராசனம் எப்போது?
இது குழந்தைக்கு முதல் முறையாக திட உணவு ஊட்டும் சடங்கு. ஆண் குழந்தைக்கு 6, 8 அல்லது 10வது மாதங்களிலும், பெண் குழந்தைக்கு 5, 7, 9 அல்லது 11வது மாதங்களிலும் இந்தச் சடங்கை செய்யலாம்.
திதி: 2, 3, 5, 7, 10, 13 அல்லது பௌர்ணமி சிறந்தது.
நட்சத்திரம்: அனைத்து சர, சாது, ஸ்திர மற்றும் துரித நட்சத்திரங்கள் சிறந்தவை.
முடி காணிக்கை எப்போது செலுத்தலாம்?
இது முதல்முறையாக முடி காணிக்கை செலுத்தும் சடங்கு ஆகும். இதை நிகழ்த்துவதற்கு 2, 3, 5, 7, 10, 11 அல்லது 13ம் திதி சிறந்தது.
நட்சத்திரம்: சர மற்றும் துரித நட்சத்திரங்கள் சிறந்தவை.
காது குத்துதல்
திதி: ரிக்தா திதிகள் (4, 9, 14) 8 மற்றும் அமாவாசை தவிர மற்றவை.
நட்சத்திரம்: சாது, துரித நட்சத்திரங்கள், புனர்பூசம், திருவோணம் மற்றும் அவிட்டம் சிறந்தவை.
புத்தாடை அணிய உகந்த நேரம்...
திதி: ரிக்தா திதிகள் மற்றும் அமாவாசை தவிர மற்றவை.
நட்சத்திரம்: சர, ஸ்திர, சாது, துரித மற்றும் விசாகம் சிறந்தவை.
பிறந்த நாள் கொண்டாட்டம்
நாம் பிறந்த ஆங்கில தேதி அல்லது தமிழ் தேதியில் பிறந்தநாள் கொண்டாடக் கூடாது. நாம் பிறந்த சந்திரமான மாதம் மற்றும் நட்சத்திர நாளில்தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும்.
பஞ்சாங்கங்களில் சைத்ர, வைசாக, பால்குன என சந்திரமான மாதங்களைக் காணலாம். தமிழ் வருட பங்குனி மாத அமாவாசை முடியும் நேரத்தில் சந்திரமான சைத்ர மாதம் தொடங்கும். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அமாவாசைகளில் அடுத்தடுத்த மாதங்கள் தொடங்கும். இந்த சந்திரமான மாதத்தையும் ஜனன நட்சத்திரத்தையும் ஜாதகரின் ஜாதகத்தில் குறித்துத் தருவது புண்ணியமாகும்.
சில நேரங்களில், ஒரே தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசைகள் ஏற்பட்டு ஒரே பெயரில் இரண்டு சந்திரமான மாதங்கள் ஏற்பட்டுவிடும். இதில் முதல் மாதத்தை அதிக மாதம் என்றும், மற்றொன்றை நிஜ மாதம் என்றும் சொல்வர். இந்நிலையில் நிஜமாதத்தில் வரும் ஜனன நட்சத்திர தினத்தில் பிறந்தநாள் கொண்டாட வேண்டும்.
மேலும் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். நமது ஜனன நட்சத்திரம் முதல் நாள் தொடங்கி மறு நாள் வரை இருக்க வாய்ப்பு உண்டு. இந்த நிலையில், எந்த நாளில் சூரிய உதயம் முதற்கொண்டு 2 மணி, 24 நிமிடங்கள் வரை ஜனன நட்சத்திரம் உள்ளதோ, அந்த நாளில் பிறந்தநாள் கொண்டாடவேண்டும். பிறந்தநாள் விழா, வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல. அந்த விண்ணுக்கும் நம் உயிருக்கும் உள்ள தொடர்பை புதுப்பித்துக்கொள்ளும் ஒரு சடங்கு. இந்த நாளில்  பெற்றோர், பெரியோரிடம் ஆசி பெறுதல், புனித இடங்களுக்குச் சென்று வருதல், தான தர்மம் செய்தல், பறவைகள், விலங்குகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு தானம் வழங்குதல் போன்ற தர்ம காரியங்களைச் செய்ய வேண்டும். அவர்கள் வயிறும் மனமும் குளிர்ந்தால், நமது வாழ்வும் வளமும் வளரும் என்பது உறுதி.
மேலும் இந்நாளில் விநாயகர் பூஜை, விஷ்ணு பூஜை, பகவதி சேவை செய்ய வேண்டும். மாணவர்கள் சரஸ்வதி பூஜை, வித்ய கோபால மந்திர அர்ச்சனை, மிருத்யுஞ் ஜெயன பூஜை செய்யவேண்டும்.
பிறந்த நாள் இன்னின்ன கிழமைகளில் அமைந்தால் இன்னின்ன பலன்கள் என்றொரு கருத்து உண்டு.
ஞாயிறு: நீண்ட தூர பயணம்
திங்கள்: நல்ல உணவு கிடைத்தல், தான்ய விருத்தி
செவ்வாய்: உடல் நலம் பாதித்தல்
புதன்: கல்வியில் ஆர்வம்
வியாழன்: ஆடை ஆபரணச் சேர்க்கை
வெள்ளி: அனைத்து வழிகளிலும் அதிர்ஷ்டம்.
சனி: பெற்றோருக்கு பாதிப்பு.
பிறந்த நாளில் உபநயனம், திருமணம், மருத்துவ சிகிச்சை, முதலியவற்றை செய்யக் கூடாது. பிறந்தநாள் எந்த கிழமைகளில் அமைகிறதோ அந்த கிழமைக்கு உரிய கிரகத்தை வழிபட, குறைகள் நீங்கி நிறைகள் கூடும்.
வித்யாரம்பம்
திதி: ரிக்தா திதிகள், 8 மற்றும் 15 தவிர மற்றவை சிறந்தவை.
நட்சத்திரம்: சர, சாது, துரித நட்சத்திரங்களும் ரோகிணி, திருவாதிரை, உத்திரம் மற்றும் விசாகமும் சிறந்தவை.
விற்பனை மற்றும் வர்த்தகம் குறித்த விவரங்கள்
மிகப்பெரிய அளவில் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிடல் மற்றும் செயல்படல், ஒப்பந்தங்களில் கையெழுத் திடல், விளம்பரப்படுத்துதல் போன்றவற்றையும் உரிய திதி, நட்சத் திரங்களில் துவங்குவது விசேஷம்.
திதிகள்: 1, 2, 3, 5, 7, 10, 11, 13 மற்றும் பௌர்ணமி சிறந்தது.
நட்சத்திரம்: சாது, துரித நட்சத்திரங்கள் சிறந்தவை.
புதிதாக கடை திறப்பதற்கு, ரிக்தா மற்றும் கிருஷ்ணபட்ச அஷ்டமி தவிர மற்ற திதிகள் சிறந்தவை. சாது, துரித நட்சத்திரங் கள் சிறந்தவை.
மருத்துவம்...
ஜனன நட்சத்திரம் அல்லது அதற்கு 3, 5 அல்லது 7வது நட்சத்திர தினங்களில் (ஜன்ம, விபத்து, ப்ரத்யக், வதம்) உடல்நலம் பாதித்தால் மிக கவனத்துடன் சிகிச்சை பெற வேண்டும்.
பய மற்றும் உக்கிர நட்சத்திர நாட்களில் உடல்நலம் பாதிக்கக் கூடாது. மேலும் மேற்படி நட்சத்திர நாட்களுடன் சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமையும் அமைந்துவிட்டால் மிகவும் எச்சரிக்கையுடன் சிகிச்சை பெற வேண்டும். நாட்பட்ட பிணிகளுக்கு சர, ஸ்திர, சாது மற்றும் துரித நட்சத்திரங்களில் சிகிச்சை பெற துவங்குவது சிறப்பு.
வழக்கு தொடுத்தல்
உரிமையை நிலைநாட்டுவதற்காக வழக்குகள் தொடுக்கும் அன்பர்கள் ரிக்தா திதி தவிர மற்ற திதிகளைத் தேர்வு செய்யலாம். சாது, துரித, ஸ்திர நட்சத்திரங்கள், ரோகிணி, உத்திரம், அவிட்டம் சிறந்தவை.
கடன் வாங்குதல்
நல்ல காரியங்களுக்காகவும், தவிர்க்க இயலாத தேவைகளுக்கா கவும் கடன் வாங்கும்போது ரிக்தா திதி தவிர மற்ற திதிகளில் அணுகலாம். கார்த்திகை, புனர்பூசம், மூலம், அவிட்டம் தவிர மற்றவை சிறந்தவை. ஜனன நட்சத்திரம் ஆகாது.
வீடு பழுது பார்க்க...
திதி: ரிக்தா திதி தவிர மற்றவை சிறந்தவை.
நட்சத்திரம்: கார்த்திகை, பூசம், மகம், பூரம், அஸ்தம், மூலம் மற்றும் ரேவதி தவிர மற்றவை. மேலும் கோச்சாரத்தில் மேற்படி நட்சத்திரங்களில் செவ்வாய் பயணிக்கும் காலமும் ஆகாது.
வெள்ளிக்கிழமையில் ரிஷபம் அல்லது துலாம் லக்னம்; திங்கள் கிழமையில் கடகம் லக்னம் அமையும் நேரத்தில் பழுது பார்க்கத் தொடங்க வேண்டும்.
பயணம் வெற்றி பெற...
பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், விசாகம் மற்றும் பூரட்டாதி நட்சத்திர நாட்களில் பயணத்தைத் தவிர்க்கவும். மேலும் செவ்வாய், புதன் கிழமைகளில் வடக்கு திசையும்; திங்கள், சனியில் கிழக்கும்; வியாழனன்று தெற்கும்; ஞாயிறு, வெள்ளியில் மேற்கும் ஆகாது.

கால சர்பதோசம்

ஒவ்வொருவரின் ஜாதக நிலைப்படி அவரது எதிர்காலம் கணக்கிடப்படும்.அதோடு அவருக்கு ஏதேனும் தோஷங்கள் இருக்கிறதா? இதனால அவருக்கு எத்தகைய பாதிப்புகள், எந்த நேரத்தில் ஏற்படும் என்பதை நம்மால் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடிகிறது.
எல்லாரும்  கேட்டவுடன் சற்று பயப்படுகிற தோஷங்களில் ஒன்று நாக சர்ப தோஷம். இது குறித்த பல்வேறு வதந்திகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. முதலில் நாக சர்ப தோஷம் என்றால் என்ன அது யாருக்கெல்லாம் வரும், வந்தால் என்ன பலன் போன்ற அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் தேவையற்ற பயங்களிலிருந்து நீங்கள் விடுபடலாம்.
#1
ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் கிரகங்கள் இருந்தால் அவை கால சர்ப்ப யோகம் எனப்படும். இதில் ராகு என்பது காலனையும், கேது சர்ப்பத்தையும் குறிக்கிறது. இந்த இரண்டுக்கும் இடையில் மற்ற ஏழு கிரகங்களும் அடங்கியிருக்கும்.
இப்படி ராகு கேதுவுக்கு இடையில் ஏழு கோள்களும் இருக்கக்கூடிய காலத்தை சர்ப்ப காலம் என்று குறிப்பிடுகிறார்கள். அப்போது பிறக்கிற குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும்.
#2
உங்கள் ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் இருந்து மற்ற கட்டங்கள் காலியாக இருந்தால் மட்டுமே அவை நாக சர்ப தோஷமாகும். எதாவது ஒரு கிரகம் விலகியிருந்தால் கூட அவை நாக சர்ப தோஷம் ஆகாது.
இவற்றில் கிரகங்கள் அமையும் தன்மை பொருத்து கால சர்ப தோஷம் பல வகைகளாக பிரிக்கிறார்கள். இதற்கேற்ற பலன்களும் இருக்கிறது.

#3
முதல் வகை அனந்த கால சர்ப்ப தோஷம். ராகு முதல் வீட்டிலும் கேது ஏழாம் வீட்டிலும் இருப்பர். மற்ற கிரகங்கள் இவர்களுக்கு இடையில் அமைந்திருக்கும். அதாவது முதலாவதும் கடைசியுமாக ராகு கேது இருந்தால் அதற்கு பெயர் அனந்த கால சர்ப்ப தோஷம்.
இந்த தோஷம் இருப்பவர்களுக்கு இளமை காலம் மிகவும் சிரமமானதாகவும், கடினமானதாகவும் இருக்கும். சிலருக்கு திருமணத்தடை இருக்கும். அதன் பிறகான வாழ்க்கை அமைதியாய் அமைந்திடும்.
Image courtesy
#4
இரண்டாம் வீட்டில் ராகு மற்றும் கேது எட்டாம் வீட்டில் இருந்தால் அதற்கு குளிகை கால சர்ப்ப தோஷம் . இவர்களுக்கு பூர்வீக சொத்து நிலைக்காது,தொடர்ந்து உடல் நிலையில் எதாவது பிரச்சனைகள் வந்து கொண்டேயிருக்கும். 32வயதுக்கு மேல் நன்மைகள் உண்டு.
பொருளாதரப் பின்னடைவு ஏற்படக்கூடும்.
Image Courtesy
#5
ராகு மூன்றாம் வீட்டிலும் கேது ஒன்பதாம் வீட்டிலும் இருப்பதை வாசுகி கால சர்ப்பதோஷம் என்கிறார்கள். இது மனபலத்தை கெடுக்ககூடியது. அதனால் இவர்களால் எந்த வேலையையும் துணிந்து செய்ய முன் வர மாட்டார்கள். இவர்கள் பார்க்கிற வேலை மற்றும் தொழிலில் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டேயிருக்கும். சகோதரர்களுக்கிடையில் விரோதப் போக்கு ஏற்படும்.
Image Courtesy
#6
சங்கல்ப கால சர்ப்ப தோஷம் என்றால் நான்காம் வீட்டில் ராகுவும் பத்தாம் வீட்டில் கேதுவுமிருக்க வேண்டும். இவர்களுக்கு வாசுகி கால சர்ப்ப தோஷ தாக்கத்துடன் கூடுதலாக மன அழுத்தம் ஏற்படக்கூடும்.
திருமணத்திற்கு வெளியே ஏற்படுகிற உறவுமுறையினால் பல்வேறு சங்கடங்களை சந்திக்க நேரிடும். பெற்றோரின் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
Image Courtesy
#7
ஐந்தாம் வீட்டில் ராகு மற்றும் பதினோராம் வீட்டில் கேது இருப்பவர்களுக்கு பத்ம கால சர்ப்ப தோஷம் இருக்கும். இது தான் சற்று மோசமான தோஷமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இது புத்திர தோஷத்தை கொடுக்கக்கூடியது. குழந்தை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுக்கூடும் இதனால் கணவன் மனைவிக்கு இடையே உறவில் விரிசல் விழும் .
48வயதுக்கு பிறகு இவர்களுக்கு நல்ல மாற்றங்கள் தெரியும்.
Image Courtesy
#8
மஹா பதம கால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கு ஆறாம் வீட்டில் ராகுவும் பன்னிரெண்டாம் வீட்டில் கேதுவும் இருப்பார்கள். இது இளமைக்காலத்தை விட பிற்காலத்தில் தான் சிறந்த பலனை அளிக்கக்கூடியது. அதிகார பதவி, புகழ், அந்தஸ்த்து ஆகியவற்றை கிடைக்கச் செய்திடும்.
புகழின் உச்சியில் ஏற்றிவிடும் அதே சமயம் நம்மை அதளாபாதாளத்திற்கும் கொண்டு செல்லக்கூடியது இது. இவர்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்பு இருக்கும்.
Image Courtesy
#9
ஏழாம் வீட்டில் ராகுவின் லக்னத்தில் கேது இருந்தால் அது கால மிருத்யு சர்ப்ப தோஷம்.இவர்களுக்கு 27வயதுக்கு பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும். அதற்கு முன்னால் செய்து கொண்டால் அது நிலைக்காது.
Image Courtesy
#10
எட்டாம் வீட்டில் ராகுவும் இரண்டாம் வீட்டில் கேதுவும் இருந்தால் அது கார்க்கேடக கால சர்ப்ப தோஷம். பூர்வீக சொத்துக்களால் இவருக்கு ஆபத்துக்கள் உண்டு. குறிப்பாக தந்தை வழி சொத்தினை தவிர்ப்பது நலம். அதனை அடைய ஆசைபட்டு பல்வேறு தவறான செயல்களை செய்ய வைத்திடும்.
Image Courtesy
#11
சங்ககுட கால சர்ப்பதோஷம் என்பது ஒன்பதாம் வீட்டில் ராகுவும் மூன்றாம் வீட்டில் கேதுவும் இருந்தால் சொல்லக்கூடியது. இவர்களுக்கு சீரான ஒரு வாழ்க்கை அமையாது. மேடு பள்ளங்கள் நிறைந்ததாகவே இருக்கும். தொடர்ந்து தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு உண்டு.
Image Courtesy
#12
10ஆம் வீட்டில் ராகு மற்றும் நான்காம் வீட்டில் கேது என இருந்தால் அதன் பெயர் கடக கால சர்ப்ப தோஷம் வேலை செய்யும் இடத்தில்,தொழில் செய்கிற இடத்தில் பிரச்சனைகள் உருவாகிடும். பத்தாம் வீட்டில் ராகு இருப்பதால், வெளிச்சம் இல்லாத தொழில் அமையும். அதாவது ஒளியைக் கொண்டு வேலை செய்வது போல புகைப்படம் எடுப்பது, எக்ஸ்ரே போன்றவை.
அதோடு இந்த தோஷத்தினால் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டு தண்டனை பெறக்கூடிய சூழல்கள் உருவாகும்.
Image Courtesy
#13
பதினோராம் இடத்தில் ராகு மற்றும் ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் அதன் பெயர் விஷ்தார கால சர்ப்ப தோஷம். அடிக்கடி பயணம் மேற்கொள்கிற வேலை அமையும். இதனால் உடல்நலனில் ஏதாவது சிக்கல்கள் வந்து கொண்டேயிருக்கும்.
Image Courtesy
#14
பன்னிரெண்டாம் இடத்தில் ராகு மற்றும் ஆறாம் இடத்தில் கேது இருக்க இதனை ஷேஷ கால சர்ப்ப தோஷம் என்பார்கள். இவர்களுக்கு கல்வி யோகம் நிறைய இருக்கிறது. கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதே சமயம் இவர்களுக்கு எதிரிகளும் அதிகமிருப்பர்.
Image Courtesy
#15
கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.
தோஷத்தின் வீரியம் குறைய பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வாருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
ராகு கேதுக்கள் நிற்கும் நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வது வேண்டும். ஸ்வாதி, சதயம், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களில் உள்ள பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால் ராகு கேதுவின் விஷத்தன்மை நீங்கி தோஷத்தின் வீரியம் குறைந்திடும்.
Image Courtesy
#16
கனவில் இறந்த மூதாதையர்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். சில நேரத்தில் நம்மை யாரோ தாக்க வருவது போலேயோ அல்லது கொலை செய்வது போலேயோ தோன்றலாம். தண்ணீர் நிரம்பிய இடங்கள் அடிக்கடி நினைவில் வந்து போகும். இப்படி உங்கள் கனவில் தொடர்ந்து ஏதாவது வந்து கொண்டிருந்தால் இதனை கால சர்ப்ப தோஷத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
Image Courtesy
#17
இது முன் ஜென்மத்தில் செய்த வினையால் ஏற்படுகிறது. முன் ஜென்மத்தில் வாழ்ந்த போது பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு விளைவித்திருந்தால் உங்களுக்கோ அல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக சர்ப்ப தோஷம் ஏற்படக்கூடும்.

புதன், 4 ஏப்ரல், 2018

பித்ரு தோஷம்

பித்ருக்கள் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் என்று பொருள். தோஷம் என்றால் குற்றம். எனவே பித்ருதோஷம் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் சம்பந்தப்பட்ட அவர்களைக் கவனிக்காத குற்றம் என்று பொருள். இதை இரண்டு வகைகளில் விவரிக்கலாம். ஜோதிடம் சார்ந்த ஒன்று அதைச் சாராத ஒன்று.
உலகின் எந்த ஒரு புனிதமதமோ அல்லது புனிதநூலோ தாயையும், தந்தையையும் சிறப்பித்துத்தான் சொல்லுகின்றன. ஆனால் என்னுடைய மேலான மதம் மாதா, பிதா, குரு, தெய்வம் என வரிசைப்படுத்தி தெய்வத்தையே நான்காமிடத்தில் நிறுத்தி பெற்றவர்களை முதலிடத்தில் வைத்துச் சிறப்பிக்கிறது.
இந்துமதம் நாம் இந்த பூமிக்கு வருவதற்கு ஆதாரமாக இருந்து நமக்கு உடல் கொடுத்த தாயையும், தந்தையையும் தெய்வத்திற்கும் முன்னே வைத்து முதலில் வணங்கச் சொல்கிறது.
உடலும், உயிரும் கொடுத்த தாய்,தகப்பனை அவர்கள் உயிருடன் இருக்கும் போதும் மதித்து வணங்கி அவர்கள் இவ்வுலகை விட்டுச் சென்ற பிறகும் அவர்களை வருடாவருடம் நினைத்துப் போற்றிப் பசியாற்ற வேண்டியதே ஒரு இந்துவின் தலையாயக் கடமை.
தாயும், தந்தையும் நமக்கு முதன்மையானவர்கள் என்றால் அவர்கள் இருவரும் இந்தப் பூமியில் பிறப்பதற்குக் காரணமான தாத்தா, பாட்டியும் முதன்மைக்கு முதலானவர்கள் ஆகிறார்கள். தாத்தா பாட்டிக்கு உடல் கொடுத்த முப்பாட்டன் அவர்களுக்கும் முதலாகிறார். இப்படியே இந்தச் சங்கிலியைப் பிடித்துக்கொண்டே போனால் அதில் ஏதோ ஒருமுனை நிறுத்தப்பட்டு அது ஆதிமுதல்வரான பரம்பொருளிடம் போய் நிற்கும்.
மதம் எனும் நமது வாழ்வியல் விதிப்படி சூரியனும் சந்திரனும் தாய் தந்தையராகக் கருதப்படுகிறார்கள். ஒவ்வொரு உயிரும் இவர்களது ஒளியால்தான் உண்டானது. தாயும் தந்தையும் இணைந்ததால், சேர்ந்ததால் நாம் பிறந்தோம். எனவே சூரியனும் சந்திரனும் இணையும், சேரும் ஒவ்வொரு மாத அமாவாசையன்றும் பெற்றோரை நினைக்கச் சொன்னது நமது மதம்.
அமாவாசை தினத்தன்று சிறுவனான எனது மகனை அருகில் வைத்துக் கொண்டு என் தாய்தந்தையருக்கு விரதமிட்டு நான் வழிபடும்போது அதில் ஒரு கலாச்சாரக் கடத்தலும் என்னுடைய சுயநலமும் கலந்திருக்கிறது. என் தாய், தந்தையை நான் மறக்காமல் இருப்பதைப் போல மகனே என் மறைவுக்குப் பிறகு நீ என்னை மறந்து விடாதே என்று மறைமுகமாக என் மகனுக்கு நான் எடுத்துச் சொல்வதே அது.
இந்த வழிபாட்டை முறையாகச் செய்யாதவர்கள் பித்ருக்களுக்கு உணவளித்து வழிபடத் தவறியவர்கள் பூமி தனது ஒருபாதிச் சுற்றை முடித்து வடக்கிருந்து தெற்காய்த் திரும்பும் உத்தராயணம் எனப்படும் ஒருவருடத்தின் பாதி அமைப்பில் முதலில் வரும் ஆடிமாத அமாவாசையன்று நதிக்கரையிலோ கடற்கரையிலோ முன்னோர்களை வழிபட்டு அவர்களை திருப்திப்படுத்தும் தர்ப்பணம் செய்யலாம் என்றும் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.
இதுவே நமது பெற்றோரையும் அவர்களுக்கு மூத்தோரையும் நினைத்து நாம் வழிபடும் முறை.
இனி ஜோதிடப்படி பித்ருதோஷம் என்பதற்கு வருவோம்.
ஜோதிடப்படி சூரியனே தந்தை சந்திரனே தாய் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். இங்கு சூரியன் பிதுர்க்காரகன் என்றும் சந்திரன் மாதுர்க்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்கள். மூல ஒளியான சூரியனாலேயே நாமும் நாம் வாழும் பூமியும் பிறந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.
சூரியன் எனும் செம்பொருளையே சிவம் என்ற பெயரில் நமது மூல நூல்கள் குறிப்பிடுகின்றன. சூரியன் எனும் முதன்மையான ஆண்மைச் சக்தியையே தந்தையாகவும், அதற்கு துணைநிற்கும் சந்திரன் எனும் பெண்மைச் சக்தியையே தாயாகவும் உருவகப்படுத்தி அம்மையப்பனாக நாம் வழிபடுகிறோம்.
நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களிலும் ஒளிக்கிரகங்கள் எனப்படும் இந்தச் சூரியனும், சந்திரனுமே ஒரு ஜாதகத்தின் முதன்மையானவர்கள். ஜாதகத்தில் சூரிய சந்திரர்களின் வலிமை முக்கியமானது எனும் நிலையில் இந்த இருவருடன் ஒளி இழந்த இருட்டுகளான ராகு, கேது, சனி ஆகியவை இணைந்து அவர்களைப் பலமிழக்கச் செய்யும் நிலையே ஜோதிடப்படி பித்ருதோஷம் எனப்படுகிறது.
ஒரு ஜாதகத்தில் சூரியனை வைத்தே அந்த ஜாதகத்தின் உயிராகக் கருதப்படும் லக்னம் கணிக்கப்படுகிறது. அதேபோல அந்த உயிர் இயங்கத் தேவைப்படும் உடலானது சந்திரன் இருக்கும் இடத்தை. வைத்து ராசி என்று சொல்லப்படுகிறது.
சூரியனும், சந்திரனும் தாய், தந்தையரைக் குறிப்பிடுவது போல ராகுபகவான் தந்தையின் முன்னோர்களையும் கேது தாயின் முன்னோர்களையும் குறிக்கும் கிரகங்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் உயிராகிய சூரியனுடனோ உடலாகிய சந்திரனுடனோ இணைந்து அவர்களைப் பலவீனப்படுத்துவது முதன்மையான தோஷமானது.
மேலும் ஒரு ஜாதகத்தின் சென்ற பிறவி நன்மைகளையும், அதனால் உண்டாகும் இப்பிறவி பாக்கியங்களையும் குறிப்பிடும் ஐந்து, ஒன்பதாம் இடங்களில் இந்த சாயாக்கிரகங்கள் அமர்வதும் பித்ருதோஷம்தான் என்றும் விளக்கப்படுகிறது.
அதேநேரத்தில் இந்த தோஷத்தைப் பற்றி நிகழ்காலத்தில் பலவிதமான கதைகள் சொல்லப்படுகின்றன. நம்முடைய முன்ஜென்மத்தில் நாம் பிறருக்குச் செய்த நன்மை, தீமைகளும் நம்முடைய முன்னோர்கள் செய்த நன்மை தீமைகளும், பெற்ற பாராட்டுகளும் சாபங்களும் சில இடங்களில் நம்பமுடியாத அளவிற்கு விவரிக்கப்படுகின்றன.
ஜோதிடம் எனப்படுவது ஒரு பரிபூரண காலவியல் விஞ்ஞானம் என்பதில் உறுதியாக இருக்கும் ஒரு எளியஜோதிடனான நான் மேற்கண்ட கருத்துக்களுக்குள் செல்ல விரும்பாமல் இந்த பித்ருதோஷத்தை என் சிற்றறிவுக்கு எட்டியவாறு உங்களுக்கு விவரித்துச் சொல்ல விரும்புகிறேன்.
இங்கே பித்ருதோஷ விளக்கங்களைப் பொறுத்தவரை பயமுறுத்தல்களும், பரிகாரங்களுமே அதிகமாகத் தென்படுகிறது. பித்ருதோஷம் எனப்படுவது சூரிய சந்திரனுடன் ராகு இணைவதால் உண்டாகும் தோஷம் என்று சொல்லப்படுவதன் மறைமுகமான காரணம் சூரியன் தன்னுடைய சுபத்துவத்தையும் அந்த ஜாதருக்கு நன்மைகள் தரும் வலுவை இழப்பதாலும்தான் என்பதே உண்மை.
ஆனால் ஒரு ராசியில் ராகுவும், சூரியனும் சேர்ந்திருப்பதாலேயே சூரியன் வலுவிழந்து விடுவது இல்லை. இதற்கு உதாரணமாக சூரியனும், ராகுவும் இணைந்த எத்தனையோ ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளையும், அரசாங்க அதிகாரத்தை கொண்ட உயர்நிலையில் இருப்பவர்களையும் என்னால் காட்ட முடியும்.
ஒளிக்கிரகங்களான சூரிய சந்திரர்களுடன் ராகு-கேதுக்கள் இணைவதாலேயே ஒரு மனிதனுக்கு நல்லவை நடக்காமல் போய் விடுவதில்லை. சர்ப்பக்கிரகங்கள் ஐந்தாமிடத்தில் இருப்பதாலேயே ஒருவருக்கு குழந்தை பிறக்காமல் போய் விடுவதும் இல்லை.
ராகு-கேதுக்கள் எத்தனை டிகிரியில் அவர்களை நெருங்கி வலுவிழக்கச் செய்திருக்கிறார்கள். அல்லது குறிப்பிட்ட தூரம் விலகி நின்று ராகுபகவான் சூரியனின் வலுவை ஏற்று அந்த ஜாதகருக்கு நன்மை செய்யப் போகிறாரா? வேறுவகைகளில் அந்த ராகு கேதுக்களுக்கோ சூரிய சந்திரர்களுக்கோ சுபர்பார்வை தொடர்பு ஏற்பட்டு அவர்கள் வலிமை இழக்காமல் இருக்கிறார்களா என்பதைத் துல்லியமாகக் கணித்தபிறகே தோஷம் கணக்கிடப்பட்டுச் சொல்லப்பட வேண்டும்.
ஆனால் இப்போது சூரியனுடன் ராகு சேர்ந்துவிட்டாலே உடனே இது பித்ருதோஷம் உடனே காசிக்கு போ ராமேஸ்வரம் போ இந்தப் பரிகாரத்தை செய் என்றுதான் பலன் சொல்லப்படுகிறது.
இந்த நாட்களில் ஒரு ஜாதகத்தில் எந்த அமைப்பால் அந்த ஜாதகருக்கு திருமணம், புத்திரபாக்கியம், வேலைவாய்ப்பு போன்றவைகள் நடக்கவில்லை என்பதை கணிக்கத் தடுமாறும் அல்லது கணிக்கத் தெரியாத அனுபவக் குறைவால் ஜோதிட ஞானம் முழுமையாக கை வராத ஒரு மேலோட்டமான ஜோதிடருக்கு சரியான குறை சொல்லும் ஆயுதமாகவே இந்த பித்ருதோஷம் உபயோகப்படுகிறது.
நமது மூலநூல்களில் இது கடுமையான பித்ருதோஷம் என்றோ இதற்கு இந்த பரிகாரம்தான் செய்ய வேண்டும் என்றோ ஞானிகள் எந்த இடத்திலும் குறிப்பாக சொல்லாதபோது ஜோதிடர்களாக இந்த அமைப்பைப் பற்றிய பீதியைக் கிளப்பத் தேவையில்லை.
உண்மையில் சூரியனும் சந்திரனும் அந்த ஜாதகத்திற்கு எந்த ஆதிபத்தியத்தைக் கொண்டவர்கள்? ராகுகேதுக்கள் சுபத்துவம் அடைந்திருக்கிறார்களா இல்லையா? அவர்கள் எத்தனை டிகிரியில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் கணித்தபிறகே பித்ருதோஷம் சொல்லப்பட வேண்டும்.
ஒரு முறையான ஜோதிடர் கிரகங்களின் அமைப்பையும் அந்த ஜாதகத்தில் உள்ள தடைகளையும் தெளிவாகக் கணக்கிட்டு தடையை ஏற்படுத்துகின்ற கிரகத்தை துல்லியமாகக் கணித்து அதற்குரிய முறையான தெய்வஸ்தலங்களுக்கு அந்த ஜாதகரை அனுப்பி பரம்பொருளின் அருள் கிடைக்கச் செய்து அவரின் குறைகளை நீக்கித் தரவேண்டும். அதுவே முழுமையான ஜோதிடரின் கடமை.
அதைவிடுத்து தோஷம் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லையா? பித்ரு தோஷம் என்று சொல்லிவிடு. இந்த ஊருக்கு போ. அந்த ஊருக்கு போ. இந்த ஹோமத்தை செய் அந்த ஹோமத்தை செய் என்று சொல்லி அனுப்பிவிட்டு அதைச் செய்தாலும் எனக்குப் பலன் இல்லையே என்று மறுபடியும் அவர் திரும்பி வந்ததும் உன் தலையெழுத்து அவ்வளவுதான். உன் கர்மாவைத் தீர்க்க முடியாது என்பதால்தான் இந்த தெய்வீக சாஸ்திரம் களையிழந்து போகிறது.
இதைப்பற்றி முறையான பரிகாரங்கள் என்ற தலைப்பில் அருட்சக்தியை விளக்கி விரைவில் மாலைமலரில் எழுதுகிறேன். தாய் தந்தையருக்கு முறைப்படியான கடமைகளைச் செய்யாததால் இந்த தோஷம் வருகிறது என்பதிலும் கருத்துவேறுபாடு உள்ளது. அதிலும் எந்த தோஷமாக இருந்தாலும் அது முறையாக தெளிவாகக் கணிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
எந்த தோஷமாக இருப்பினும் அனைத்தும் பரம்பொருளின் கருணைக்கு உட்பட்டதே. அவனின் திருத்தலங்களுக்குச் சென்று மனமுருகி வேண்டினாலே அனைத்தும் சித்திக்கும்.

ராசிபலன் 2018