புதன், 18 ஏப்ரல், 2018

திதி சூன்ய தோசம்

திதி சூன்ய தோசம் - ஒரு ஜாதகத்தை எடுத்துப் பார்த்தால், ‘ஆஹா...யோக ஜாதகம், யோகதசை”  என்று சொல்பவர்கள் அந்த ஜாதகர், திதி சூன்யத்தில் பிறந்திருந்தால், யோக பலனைக் கெடுத்துவிடும் என்பதை ஆராய்ந்து பார்க்காமல் சொல்லிவிடுவார்கள்.

பொதுவாக சுக்ல பட்சம், கிருஷ்ண பட்சம் (வளர்பிறை,தேய்பிறை)என்பது அனைவரும் அறிந்ததே. ஜாதகம் எழுதுபவர்கள் நோட்டில் பட்சம் எழுத மறந்துவிடுவார்கள். சூரியன் - சந்திரன் இருவரும் அமாவாசை திதியில் இணைந்தும், பௌர்ணமி திதியில் எதிர் எதிரிலும் இருப்பது வழக்கம்.

சூரியனிலிருந்து 7ற்குள் சந்திரன் இருந்தால் சுக்ல பட்சம் ஆகும். 7ற்கு மேல் இருந்தால் கிருஷ்ண பட்சம் ஆகும். சுக்ல பட்சம் 14திதிகள், கிருஷ்ண பட்சம் 14 திதிகள்.. அமாவாசை பௌர்ணமி ஆகக் கூடுதல் 30 திதிகள்..

 ஜனனமாகும் குழந்தை, அமாவாசை அல்லது பௌர்ணமி யன்று பிறந்தால், அந்த ஜாதகம் திதி சூன்யம் அடையாத ஜாதகம் ஆகிவிடுகிறது. பிரதமை முதல் சதுர்த்தசி வரை உள்ள 14 திதிகளில் எந்த திதியில் ஜனித்தாலும், இரண்டு ராசி வீடுகளுக்கு திதி சூன்யம்
ஏற்பட்டு விடுகிறது. இதனால் அந்த ராசி அதிபதி திதி சூன்யம்  அடைகிறது. திதி சூன்யம் ஏற்பட்ட ராசி இல்லத்து அதிபதிகள் தங்களது சக்தியை இழக்கிறார்கள்.
    
     மறைவு ஸ்தானமாகிய 3,6-8-12ல் திதி சூன்யம் அடைந்த கிரஹங்கள் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். வக்ரம் ஆனாலும் நல்ல பலன் கொடுக்கும்.

     திதி சூன்யம் அடைந்த கிரஹங்கள், பகையானாலும்: நீச்சம் பெற்றாலும், பாபிகளுடன் இருந்ததாலும், இயல்பான பலன்கள் அதாவது காரகப் பலன்கள் அதிகமாகவே கொடுக்கும். திதி சூன்யம் பெற்ற கிரஹங்கள் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது உடன் இருந்தாலும் தோசம் இல்லை.

 கிரஹம், அஸ்தங்கதம் அடைந்தாலும், வக்ரமாக இருந்தாலும்; பகை, நீச்சம் பெற்றிருந்தாலும், லக்னத்திலிருந்து 3,6,8,12 இருந்தாலும் மேசம், விருச்சிகம், சிம்மம், கும்பம், ஆகிய
ராசி இருந்தாலும் திதி சூன்யம் இல்லை.

     பாபருடன் கூடி இருந்தாலும் திதி சூன்யம் இல்லை.

     எனவே திதி சூன்யம் பெறும் ராசிகளின் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுதும், திதி சூன்ய ராசி லக்னமாக நடைபெறும் சமயத்திலும், சுப காரியங்கள் செய்யலாகாது.     

 எந்தெந்த திதிக்கு, சூன்ய தோஷ ராசிகள், கிரகங்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.

பிரதமை திதியில் சூன்யம் பெறும் ராசி - மகரம், துலாம், கிரகம் சனி, சுக்கிரன், 

துவிதியை திதியில் சூன்யம் பெறும் ராசி - தனுசு, மீனம், கிரகம் -குரு. 

திரிதியை திதியில் சூன்யம் பெறும் ராசி- மகரம், சிம்மம், கிரகம்-சனி, சூரியன், 

சதுர்த்தி திதியில் சூன்யம் பெறும் ராசி- கும்பம், ரிஷபம், கிரகம் - சனி, சுக்கிரன். 

பஞ்சமி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன், 

சஷ்டி திதியில் சூன்யம் பெறும் ராசி- மேஷம், சிம்மம் , கிரகம் -செவ்வாய், சூரியன், 

சப்தமி திதியில் சூன்யம் பெறும் ராசி - தனுசு, கடகம், கிரகம் - குரு, சந்திரன். அஷ்டமி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன், 

நவமி திதியில் சூன்யம் பெறும் ராசி - சிம்மம், விருச்சிகம், கிரகம் - சூரியன், செவ்வாய், 

தசமி திதியில் சூன்யம் பெறும் ராசி - சிம்மம், விருச்சிகம், கிரகம் - சூரியன், செவ்வாய்.

ஏகாதசி திதியில், சூன்யம் பெறும் ராசி - தனுசு, மீனம், கிரகம் - குரு, 

துவாதசி திதியில் சூன்யம் பெறும் ராசி - மகரம், துலாம், கிரகம் - சனி, சுக்கிரன், 

திரயோதசி திதியில் சூன்யம் பெறும் ராசி - ரிஷபம், சிம்மம், கிரகம் - சுக்கிரன், சூரியன், 

சதுர்த்தசி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன்.

அமாவாசை, பௌர்ணமி திதிகளுக்கு எவ்வித திதி சூன்யமும் இல்லை. தோஷமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பரிகாரம் என்ன? 

பெளர்ணமி தோறும் திரிபுர சுந்தரி வழிபாடு செய்யலாம்..அருகில் இருக்கும் அம்பாள் சன்னதியில் பொங்கல் வைத்து 16 விதமான அபிசேகங்கள் செய்வித்து சுமங்கலிபெண்கள் 16 பேருக்கு மங்கலப்பொருட்கள் தானமாக கொடுக்க வேண்டும்.

பஞ்சமி

🌹 பஞ்சமி திதியில் சொல்ல வேண்டிய மந்திரம்🌹

அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி. ’பஞ்ச’ என்றால் ஐந்து என்று பொருள். பஞ்சமி திதியன்று குத்துவிளக்கில் ஐந்து எண்ணெய் கலந்து ஐந்து முகத்தினையும் ஏற்றி கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும். தீபத்தில் எரியும் ஐந்து முகங்களில் ஏதாவது ஓர் தீபத்தை உற்றுப் பார்த்தபடியே மனதை ஒரு முகப்படுத்தி நம்முடைய வேண்டுதல்களை மனதிற்குள் சொல்லி வந்தால் அது நிச்சயம் நிறைவேறும்.
இப்படி ஜோதியை நோக்கி வழிபடும்போழுது
’ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும்.
இப்படிச் செய்தால் அம்பிகையின் அருளால் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.🌹

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

அக்ஷய_திரிதியை

அக்ஷய_திரிதியை

ஒரு சமயம் காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூர்னேஷ்வரி தேவி, தாம் தான் அன்ன தாதா என்று, சிறு கர்வம் கொண்டாள்.

அந்த எண்ணத்தை போக்குவதற்கு, சிவபெருமான் ஒரு சிவ யோகியாக தோற்றம் கொண்டு அன்னபூர்னேஷ்வரி மாளிகைக்கு வந்து, "தாயே பசி என்றார் ..

அதை செவிக்கொண்டு அன்னபூரணி தேவி, இலையிட்டு தன்னால் இயன்ற வஸ்துக்கள் அனைத்தையும் பரிமாறினார்

சிவ யோகியோ, இன்னும் இன்னும் என்று அனைத்தையும் உட்கொண்டே இருந்தார்.

வஸ்துக்கள் அனைத்தும் பூர்த்தியாக, அன்னபூரணி தேவிக்கு, என்ன செய்வதென்று புரியவில்லை.

உடனே, காசியில் பிந்து மாதவன் என்ற திருக்கோலத்தில் சேவை சாதிகின்ற, தன்னுடைய அண்ணனாகிய மஹா விஷ்ணுவிடம் பிரார்தித்து அழைத்தார்.

மஹா விஷ்ணுவாகிய பிந்து மாதவன், ஒரு அந்தணர் கோலத்தில் வந்தார்.

அன்னம் தயார் செய்யும் இடத்திற்கு சென்றால், அங்கு  அன்னம் தயார் செய்த பாத்திரங்கள் அனைத்தும் சுத்தம் செய்து வைக்கபட்டிருந்தது.

அன்னபூரணி தேவி நடந்த விஷயங்களை கூற, அதை கேட்ட மஹா விஷ்ணு, சுத்தம் செய்து வைக்கபட்டிருந்த பாத்திரத்தின் ஒரு ஓரத்தில் இருந்த பருக்கை அன்னத்தை, அக்ஷயம் என்று சொல்லிக்கொண்டு அவர்தம் தன் திருவாயால் உட்கொண்டார்.

உடனடியாக, சங்கல்ப மாத்திரத்தால் (பகவத் அனுக்ரகஹத்தால்) அன்ன வகைகள் அனைத்தும் தோன்றின.

அன்னபூரணி தேவி அந்த சிவ யோகிக்கு அருகில் இலையிட்டு மஹா விஷ்ணுவை அமர்த்தினார்.

மஹா விஷ்ணுவோ, உட்கார்ந்த சிறிது நேரத்தில் திருப்தி என்று கூறி எழுந்து விட்டார்.

தமக்கு அருகில் உண்பவர் எழுந்து விட்டால் தாமும் எழ வேண்டும் என்ற முறையை பின்பற்றியாக வேண்டிய கட்டா யத்தினால், சிவ யோகியும் தமக்கு திருப்தி என்று எழுந்து விட்டார்.

அன்னபூரணி தேவி அந்த சிவ யோகியை வணங்க, சிவ யோகி சிவனாகவே காட்சியளித்தார்.

"உமைக்கு ஏற்பட்ட கர்வம் கொண்ட எண்ணத்தை மாற்றுவதற்கே தாம் இங்கு வந்தோம்", என கூறினார்.

உடனே, மஹா விஷ்ணு,"இன்றைய தினம் எவர் ஒருவர் நல்ல காரியங்களை தொடங்குகிறார்களோ, அது இனிதே வளரும்", என்று ஆசிர்வதித்தார்.

அன்று முதல் சித்தரை மாதம், சுக்ல பக்ஷ திரிதியை நாம் அக்ஷய திரிதியை திருநாளாக கொண்டாடுகின்றோம்....

எனவே அன்றைய தினம் பொருட்கள் மேலும் சேர பொருட்கள் வாங்குங்கள் ..

ஆனால் புண்ணியம் மேலும் சேர நிறைய தானம் செய்யுங்கள் ....

மஹா விஷ்ணுவின் அருள் கிடைக்க பெருவீர்..

பேசும் தெய்வம்

பேசும் தெய்வம்
-----------------------

வேதத்தில் கரை கண்ட பக்தர் ஒருவருக்கு கிருஷ்ணனே தலையசைத்து ஒப்புதல் அளித்திருக்கிறார் என்றால், கேட்கவா வேண்டும்....

அவர் தான் கேரளாவிலுள்ள 'திருநாவை' எனும் புண்ணிய தலத்தில் வாழ்ந்த வில்வமங்களசுவாமி, அதிகாலையில் எழுந்து அங்கு ஓடும் இளா நதியில் நீராடுவார். அதன் பின் அங்கு அபூர்வ நிகழ்வு ஒன்று அரங்கேறும்.

ஆற்றங்கரையில் கிருஷ்ணர் சிலைக்கு அலங்காரம் செய்து, மலர்களால் அர்ச்சனை செய்வார். அப்போது அவர் பாடும் பாடலுக்கு, சிலை வடிவிலுள்ள கிருஷ்ணர் தலையசைத்து ஒப்புதல் தெரிவிப்பார். தலையசைக்கா விட்டால், அந்த பாடலைகளை வில்வமங்கள சுவாமி கணக்கில் சேர்க்க மாட்டார்.
இப்படி கிருஷ்ணரிடம் ஒப்புதல் பெற்ற பாடல்களின் தொகுப்பே புகழ் மிக்க 'ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிர்தம்'.

குருவாயூரப்பனிடம் பக்தி கொண்ட வில்வமங்களசுவாமி, பலமுறை கிருஷ்ணனை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்.
வில்வமங்களசுவாமி புகழ் ஊரெங்கும் பரவியது. குரூரம்மை என்னும் உத்தம பக்தையும் அவர் பற்றி கேள்விப்பட்டாள்.

குரூரம்மையின் வீட்டுக்கு பகவான் கிருஷ்ணனே குழந்தையாக வந்து, அவருடன் வாழ்ந்து வந்தான். ஒரு தாயாக குரூரம்மை, கிருஷ்ணனை மிரட்டுவது, அதட்டுவது, அவன் முகம் வாடினால் அழாதடா! அழாதடா!' என சமாதானம் செய்வது, என கிருஷ்ணலீலைகள் குரூரம்மையின் வீட்டில் அரங்கேறிக் கொண்டிருந்தன.
கிருஷ்ணரிடம் தன்னையே கரைத்துக் கொண்ட குரூரம்மை தினமும் அடியார்களுக்கு அன்னமிடும் தொண்டும் செய்தார்.

இந்நிலையில், வில்வமங்களசுவாமி பற்றிக் கேள்விப்பட்ட குரூரம்மை, வீட்டிற்கு அழைத்து பாதபூஜை செய்து பிட்சை இட விரும்பினார்.
நல்லெண்ணம் மனதில் தோன்றியதும், அதை செயல்படுத்துவது பெரியோர் இயல்பு.

ஒரு ஆள் மூலம் மறுநாளே பிட்சைக்கு வரும்படி வில்வமங்களசுவாமிக்கு தகவல் தெரிவித்தார்.
வில்வமங்களசுவாமிக்கு இதில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் ஒரு வழியாக சம்மதிக்க, மகிழ்ச்சியில் குதித்தார் குரூரம்மை.
ஆனால்,கிருஷ்ணரைப் பற்றிய ஒருமுகச் சிந்தனையால் வாக்களித்ததை மறந்தார் வில்வ மங்களசுவாமி.

மறுநாள் பொழுது புலர்ந்ததும், குரூரம்மையின் வீட்டிற்கு செல்லாமல் கால் போன போக்கில் நடந்தார்.
வழியில் ஒரு வீட்டில் பிட்சை ஏற்றார். ஆனால், குரூரம்மையின் வீட்டில், வில்வமங்களசுவாமியின் வருகைக்கான ஏற்பாடு நடந்தது. பூஜைக்கும், பிட்சைக்கும் வேண்டிய பொருட்களை கிருஷ்ணனே சேகரித்தான். வில்வமங்களசுவாமியை எதிர்பார்த்து குரூரம்மை வாசலில் காத்திருந்தார்.
ஊஹூம்..... இரவு தான் வந்ததே தவிர, வில்வமங்களசுவாமி வரவே இல்லை.
கண்ணன் அருகில் இருந்தும், குரூரம்மையின் மனம் வருந்தியது.

பக்தியை தவிர, வேறு சிந்தனை இல்லாத வில்வமங்களசுவாமி கிடைத்த பிட்சையை ஏற்றுக் கொண்டு, வீடு திரும்பினார்.
குரூரம்மைக்கு கொடுத்த வாக்கை முற்றிலும் அவர் மறந்திருந்தார்.

மறுநாள்...அதிகாலையில் வில்வமங்களசுவாமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவரிடமிருந்த கிருஷ்ணர் சிலை மாயமாகி இருந்தது. ''கிருஷ்ணா.. கிருஷ்ணா'' என்று கத்தியபடி நாலாபுறமும் ஓடினார்.

அப்போது அசரீரியாக,''ஹே!உத்தம பக்தனே! ஈடு இணையில்லாத பக்தன் நீ! அதில் சந்தேகமே இல்லை.ஆனால் உன்னை போன்ற பக்தையான குரூரம்மையின் விருப்பத்தை நிறைவேற்றாமல் என்னை துன்பத்திற்கு ஆளாக்கி விட்டாய். இதை பொறுத்துக் கொள்ள முடியாது. அவரை சமாதானப்படுத்தினால் மட்டுமே, மறுபடியும் என்னை தரிசிக்க முடியும். ஏழெட்டு பிறவிகளாக குரூரம்மை என் பக்தையாக விளங்குகிறார். நீயோ மூன்று பிறவிகளாக என்னை வழிபட்டு வருகிறாய். இப்போதே குரூரம்மையை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடு!" என்றார் கிருஷ்ணர்.

விஷயம் அறிந்த வில்வமங்களசுவாமி குரூரம்மையின் வீட்டுக்கு ஓடினார். தவறை மன்னிக்கும்படி வேண்டினார். குரூரம்மையின் மனம் சமாதானம் அடைந்தபின், வீடு திரும்பினார்.
வில்வமங்களசுவாமியின் வருகையை எதிர்பார்த்து, கிருஷ்ணர் சிலை வடிவில் காத்திருந்தார். மீண்டும் பக்திப்பாடல்கள் பாடி மகிழ்ந்தார்.

என்ன தான் பக்தியில் கரை கண்டாலும், தெய்வத்துடன் பேசும் பாக்கியம் பெற்றாலும் தன்னைப் போன்ற அடியாரின் மனம் நோகச் செய்தால் தெய்வம் ஒருபோதும் பொறுப்பதில்லை.

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

வாஸ்து

வாஸ்து வீடு  நுழைவாயில் பூஜையறை கதவு நுழைவாயில் கழிவறை எங்கு இருக்க வேண்டும்?

vaastu
முற்காலத்திலிருந்து நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே , ‘ வாஸ்து ‘  என்பதாகும். இது பஞ்ச பூதங்களையும், திசைகளையும் அடிப்படையாகக்கொண்டது. இந்த வாஸ்து சாஸ்திரத்தை முறையாகக் கடைப் பிடித்து கட்டப்படும் வீட்டிலோ  அல்லது அந்த மனையிலோ  வசிப்பவர்கள், எல்லா வளங்களையும் பெற்று வாழ்வார்கள்.  இப்போது ஒரு வீட்டுக்கு கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து விதிமுறைகளைப் பற்றிக் காணலாம்.

வீட்டின் கதவுகளும் நுழைவாயிலும்:

1. வீட்டின் பிரதான நுழைவாசலில் அமையும் மெயின் கதவு,  வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளை நோக்கி  அமைந்திருக்கவேண்டும். இந்த மெயின் வாசல்  நுழைவாயில் கதவு, வீட்டின் ஏனைய கதவுகளைவிட  அளவில் சற்றுப் பெரியதாக இருக்கவேண்டும். வீட்டின் பிரதான நுழைவாயில்  வீட்டின் பின்பக்க வாசலை நோக்கியபடி எதிரும் புதிருமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், வீட்டின் ‘ சக்தி ‘  (எனெர்ஜி )யானது  பின்வாசல் வழியாக வெளியேறிவிடும். வீட்டுக்குள் சுழன்று நற்பயன் விளைவிக்கக்கூடிய நல்ல சக்தி வெளியேறி விடுவது வீட்டுக்கு நல்லதல்ல. எனவே பிரதான வாசல் கதவுக்கு நேரெதிராக பின் வாசல் கதவு இருக்கும்படி அமைக்கக்கூடாது.
2. உங்கள் வீட்டு பிரதான வாசலுக்கு எதிராக மரமோ, கிணறோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அதுவும் உங்கள் வீட்டுக்குள் ‘ சக்தி ‘ ( எனெர்ஜி ) யை நுழைய விடாமல், தடுக்கும்.
3. வாசல் கதவுகள் உள்புறமாக திறப்பதுபோல் அமையவேண்டும். வெளிப்பக்கமாக திறக்கும்படி அமைக்கக்கூடாது.
4. கதவின் அகலம் கதவின் உயரத்தில் பாதியளவு இருக்கவேண்டும்.
5. பிரதான வாயில் கதவு நல்ல , உயர்வகை மரத்தாலானதாக இருக்கவேண்டும். அதோடு, மற்ற கதவுகளை விட இந்த மெயின் டோர் சற்றுப் பெரியதாகவும் இருக்கவேண்டும். நல்லவேலைப்பாட்டுடனும், நல்ல டிஸைனுடனும் இருக்கவேண்டும்.
மிக அழகாகப் பெயிண்டிங் செய்யப்பட்டு மற்ற கதவுகளை விட பளிச்சென்று இருக்கவேண்டும்.
6. . வாசல் கதவு, மற்றுமுள்ள கதவுகள், கன்னல் கதவுகள் முதலியவற்றைத் திறக்கும்போது, சத்தம் எழுப்பக்கூடாது. குறிப்பாக பிரதான வாயில் கதவில் இந்த சத்தம் அறவே வரக்கூடாது. அப்படி நேருமாயின்,  வீட்டில் வசிப்பவர்களுக்கு கேடு விளையும்.

ஜன்னல்கள்:

1. எல்லா ஜன்னல்களும், வெளிப்புறச் சுவரில் அமைந்திருக்கவேண்டும்.  ரூம்களுக்குள் ஜன்னல் கதவுகள் திறக்கும்படி இருக்கக்கூடாது.
2.  பெரிய ஜன்னல்களை வடகிழக்கு திசையிலும், சிறிய ஜன்னல்களை தென்மேற்கிலும் வரும்படி அமைக்கவேண்டும்.
3. மொத்த ஜன்னல்களைக் கூட்டினால், அது இரட்டைப் படையில் வரவேண்டும்.
4. ஜன்னல்களிலும் கதவுகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் சன்ஷேடுகள் வடகிழக்கு திசையை நோக்கியபடி இருக்கவேண்டும். அப்படி அமைத்தால்தான் மழைத் தண்ணீர் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசையை நோக்கி ஊடுவதற்கு ஏதுவாகும். இதுவே விட்டுக்கு நற்பலன்களை நல்கும்.
5. வடக்கிலும், கிழக்கிலும் அதிக ஜன்னல்கள் வரும்படி அமைக்கவேண்டும்.
படுக்கையறை:
நாள் முழுதும் உழைத்த மனிதன் இரவில் ஓய்வெடுத்துக்கொள்ளவும், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நாடுவது படுக்கையறையைத்தான். எனவே படுக்கையறையை சரியாக வாஸ்து முறைப்படி அமைத்துக்கொள்ளவேண்டும்.
1. படுக்கை அறையின் தென்மேற்கில் இருக்கவேண்டும். ஆனால், ஒரேயடியாக தென்மேற்கு மூலைக்குப் போய்விடக்கூடாது.
2. படுக்கும்போது முகம் தெற்கு நோக்கி இருக்கும்படி உறங்கவேண்டும். அது நல்ல உறக்கத்திற்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும்.  ஒருபோதும், முகம் வடக்கு நோக்கி இருக்கும்படி படுத்துறங்கவேண்டாம். ஏனென்றால் இறந்தவரின் உடலகளை வடக்கு நோக்கி வைப்பதுண்டு.  வடக்கு நோக்கி உறங்குவதால், மனநலம் பாதிப்படைவதோடு, ஆயுளும் குறையும்.
3. படுக்கையறையில் வெளிச்சம் மிதமாகவும், கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும்.  எனவே விளக்குகளையோ, டேபிள் லேம்புகளையோ அமைக்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சமோ, நிழலோ மனதிற்கு இதமளிப்பதாக இருக்கவேண்டும்.
4. மாஸ்டர் பெட் ரூம், வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கும்படி அமைக்கவேண்டும்.
5. படுக்கையை உத்தரத்துக்குக் (பீம்) கீழ்  வரும்படி போடக்கூடாது. ஒருவர் உத்திரத்துக்குக் கீழ் வரும்படி படுத்து உறங்கினால், ஆரோக்கியக்கேடு உண்டாகும்.
.6. படுக்கையறையில் கடவுள் சிலைகளை வைக்கக்கூடாது. இயற்கைக்காட்சிகள், மலர்கள், குழந்தைகள், மற்றும், கோவிலகள் முதலான பெயிண்டிங்குகளை மாட்டி வைக்கலாம்.  வடகிழக்கு மூலையில் கட்டாயமாக, எடை அதிகமுள்ள சிலைகளை வைக்கக்கூடாது.
7. படுக்கையறையில் மீன் தொட்டியை வைக்கக்கூடாது.

சமையலறை:

நல்லசமையறையை அமைக்கவேண்டுமானால், அதை தென்கிழக்கில் இருக்கும்படி அமைக்கவேண்டும். ஏனென்றால்,  தென்கிழக்கைத்தான் அக்னி மூலை என்று கூறுவார்கள்.  அங்குதான் அக்னிதேவன் வாழ்வதாக ஐதீகம். எனவே சமையலறையை தென்கிழக்கில் அமைப்பது சாலச் சிறந்தது.
1. ஒருபோதும் சமையலறையை வடகிழக்கில் அமைக்க வேண்டாம். இது முடும்ப அமைதியையும், செல்வச் செழிப்பையும்  அழித்துவிடும். குடும்பதினரிடையே நிலவிய நேசமும் காணாமல் போகும்.
2, அதுபோல சமையலறை தென்மேற்கில் இருக்கும்படியும் அமையக்கூடாது. அப்படி அமைந்தால், அது குடும்பத் தலைவரைப் பாதிக்கும்.
3.. சமையலறையிலிருந்து வரும் கழிவு நீர்க் குழாய்கள், வடக்கு, கிழக்கு திசைகளில் விழும்படி அமைக்கவேண்டும்.
4.  டாய்லெட்டோ, பூஜையறையோ சமையலற்க்குப் பக்கத்தில் வரும்படி அமைக்ககூடாது.
5.  சமைக்கும்போது  வடக்கு அல்லது கிழக்கு நோக்கி  இருந்தபடி சமைக்கவேண்டும்.

பூஜையறை:

1. வீட்டின் பூஜையறை வீட்டின் வடகிழக்கு  அறையிலோ அல்லது வடகிழக்கு மூலையிலோ வரும்படி அமைக்கவேண்டும்.  கோவிலாக அமைக்கவேண்டுமானாலும் வட கிழக்கு திசையில் அமைக்கவேண்டும்.
2. பூஜையறையை படுக்கயறைக்குள் வரும்படி அமைக்கக்கூடாது.
3. பூஜையறையை பேஸ்மெண்டில் அமைக்கக்கூடாது.
4. பூஜையறையை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஸ்டோர் ரூம் போல  வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது.
5. பூஜையறைக்குப் பக்கத்திலோ அல்லது மேலோ , கீழோ டாய்லெட்டுகள் இருக்கக்கூடாது.
6. இறந்தவர்களின் ஃபோட்டோக்களை பூஜையறையில் வைக்கவேண்டாம்.
7. ஸ்வாமி மேற்குப் பார்த்தபடியும்,  வணங்கி, பூஜிப்பவரின் முகம் கிழக்கு நோக்கியும் இருப்பது  வாஸ்துப்படி சிறப்பானது.
8. அதிக எடையிலான சிலைகளை வைப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக தெய்வங்களின் படங்களை வைத்துப் பூஜிக்கலாம்.
9. பழைய புராதனக் கோவில்களிலிருந்து அபகரித்து வரப்பட்ட சிலைகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைக்கவேண்டாம்.
10, பூஜையறைச் சுவரை ஒட்டினாற்போல், சுவாமி சிலைகளை வைக்கக்கூடாது. சுவற்றில் மாடமிட்டும் வைக்கக்கூடாது.   சுவற்றை விட்டு சற்றுத் தள்ளி வைக்கவேண்டும்.

கழிவறைகள்:

1. வடமேற்கிலும், வடக்கிலும்  குளியலறை மற்றும் அட்டேச்சுடு டாய்லெட்டுகள் அமைக்கலாம்.
2. டாய்லெட்டில் கம்மோடை தெற்கு- வடக்காக அமைக்கவேண்டும்.
3. ஒருபோதும் டாய்லெட்டை வடாகிழக்கில் அமைக்கவேண்டாம். ஏனென்றால் வடகிழக்கு செல்வம் வளரும் இடமாகும்.
4. கழிவறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை பதிக்கவேண்டுமானால், அதனை வடக்கு மற்றும் கிழ்க்கு சுவற்றில் இருக்கும்படி அமைக்கலாம்.
5. பாத்ரூம் டைல்ஸ் இள வண்ணங்களில் இருக்கட்டும். கருப்பு கலரைத் தவிர்க்கவும்.
6. குளியலறை, டாய்லெட்டின் தரை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஸ்லோப்பாக இருக்கவேண்டும்.

வாஸ்து



வாஸ்து
வீடு  நுழைவாயில்,பூஜையறை,கதவு நுழைவாயில் எங்கு இருக்க வேண்டும்?



முற்காலத்திலிருந்து நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே , ‘ வாஸ்து ‘  என்பதாகும். இது பஞ்ச பூதங்களையும், திசைகளையும் அடிப்படையாகக்கொண்டது. இந்த வாஸ்து சாஸ்திரத்தை முறையாகக் கடைப் பிடித்து கட்டப்படும் வீட்டிலோ  அல்லது அந்த மனையிலோ  வசிப்பவர்கள், எல்லா வளங்களையும் பெற்று வாழ்வார்கள்.  இப்போது ஒரு வீட்டுக்கு கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து விதிமுறைகளைப் பற்றிக் காணலாம்.

*வீட்டின் கதவுகளும் நுழைவாயிலும்:*

1. வீட்டின் பிரதான நுழைவாசலில் அமையும் மெயின் கதவு,  வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளை நோக்கி  அமைந்திருக்கவேண்டும். இந்த மெயின் வாசல்  நுழைவாயில் கதவு, வீட்டின் ஏனைய கதவுகளைவிட  அளவில் சற்றுப் பெரியதாக இருக்கவேண்டும். வீட்டின் பிரதான நுழைவாயில்  வீட்டின் பின்பக்க வாசலை நோக்கியபடி எதிரும் புதிருமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், வீட்டின் ‘ சக்தி ‘  (எனெர்ஜி )யானது  பின்வாசல் வழியாக வெளியேறிவிடும். வீட்டுக்குள் சுழன்று நற்பயன் விளைவிக்கக்கூடிய நல்ல சக்தி வெளியேறி விடுவது வீட்டுக்கு நல்லதல்ல. எனவே பிரதான வாசல் கதவுக்கு நேரெதிராக பின் வாசல் கதவு இருக்கும்படி அமைக்கக்கூடாது.

2. உங்கள் வீட்டு பிரதான வாசலுக்கு எதிராக மரமோ, கிணறோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அதுவும் உங்கள் வீட்டுக்குள் ‘ சக்தி ‘ ( எனெர்ஜி ) யை நுழைய விடாமல், தடுக்கும்.

3. வாசல் கதவுகள் உள்புறமாக திறப்பதுபோல் அமையவேண்டும். வெளிப்பக்கமாக திறக்கும்படி அமைக்கக்கூடாது.

4. கதவின் அகலம் கதவின் உயரத்தில் பாதியளவு இருக்கவேண்டும்.

5. பிரதான வாயில் கதவு நல்ல , உயர்வகை மரத்தாலானதாக இருக்கவேண்டும். அதோடு, மற்ற கதவுகளை விட இந்த மெயின் டோர் சற்றுப் பெரியதாகவும் இருக்கவேண்டும். நல்லவேலைப்பாட்டுடனும், நல்ல டிஸைனுடனும் இருக்கவேண்டும்.
மிக அழகாகப் பெயிண்டிங் செய்யப்பட்டு மற்ற கதவுகளை விட பளிச்சென்று இருக்கவேண்டும்.

6. . வாசல் கதவு, மற்றுமுள்ள கதவுகள், கன்னல் கதவுகள் முதலியவற்றைத் திறக்கும்போது, சத்தம் எழுப்பக்கூடாது. குறிப்பாக பிரதான வாயில் கதவில் இந்த சத்தம் அறவே வரக்கூடாது. அப்படி நேருமாயின்,  வீட்டில் வசிப்பவர்களுக்கு கேடு விளையும்.

*ஜன்னல்கள்:*

1. எல்லா ஜன்னல்களும், வெளிப்புறச் சுவரில் அமைந்திருக்கவேண்டும்.  ரூம்களுக்குள் ஜன்னல் கதவுகள் திறக்கும்படி இருக்கக்கூடாது.

2.  பெரிய ஜன்னல்களை வடகிழக்கு திசையிலும், சிறிய ஜன்னல்களை தென்மேற்கிலும் வரும்படி அமைக்கவேண்டும்.

3. மொத்த ஜன்னல்களைக் கூட்டினால், அது இரட்டைப் படையில் வரவேண்டும்.
4. ஜன்னல்களிலும் கதவுகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் சன்ஷேடுகள் வடகிழக்கு திசையை நோக்கியபடி இருக்கவேண்டும். அப்படி அமைத்தால்தான் மழைத் தண்ணீர் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசையை நோக்கி ஊடுவதற்கு ஏதுவாகும். இதுவே விட்டுக்கு நற்பலன்களை நல்கும்.

5. வடக்கிலும், கிழக்கிலும் அதிக ஜன்னல்கள் வரும்படி அமைக்கவேண்டும்.
படுக்கையறை:
நாள் முழுதும் உழைத்த மனிதன் இரவில் ஓய்வெடுத்துக்கொள்ளவும், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நாடுவது படுக்கையறையைத்தான். எனவே படுக்கையறையை சரியாக வாஸ்து முறைப்படி அமைத்துக்கொள்ளவேண்டும்.

1. படுக்கை அறையின் தென்மேற்கில் இருக்கவேண்டும். ஆனால், ஒரேயடியாக தென்மேற்கு மூலைக்குப் போய்விடக்கூடாது.

2. படுக்கும்போது முகம் தெற்கு நோக்கி இருக்கும்படி உறங்கவேண்டும். அது நல்ல உறக்கத்திற்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும்.  ஒருபோதும், முகம் வடக்கு நோக்கி இருக்கும்படி படுத்துறங்கவேண்டாம். ஏனென்றால் இறந்தவரின் உடலகளை வடக்கு நோக்கி வைப்பதுண்டு.  வடக்கு நோக்கி உறங்குவதால், மனநலம் பாதிப்படைவதோடு, ஆயுளும் குறையும்.

3. படுக்கையறையில் வெளிச்சம் மிதமாகவும், கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும்.  எனவே விளக்குகளையோ, டேபிள் லேம்புகளையோ அமைக்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சமோ, நிழலோ மனதிற்கு இதமளிப்பதாக இருக்கவேண்டும்.

4. மாஸ்டர் பெட் ரூம், வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கும்படி அமைக்கவேண்டும்.

5. படுக்கையை உத்தரத்துக்குக் (பீம்) கீழ்  வரும்படி போடக்கூடாது. ஒருவர் உத்திரத்துக்குக் கீழ் வரும்படி படுத்து உறங்கினால், ஆரோக்கியக்கேடு உண்டாகும்.

.6. படுக்கையறையில் கடவுள் சிலைகளை வைக்கக்கூடாது. இயற்கைக்காட்சிகள், மலர்கள், குழந்தைகள், மற்றும், கோவிலகள் முதலான பெயிண்டிங்குகளை மாட்டி வைக்கலாம்.  வடகிழக்கு மூலையில் கட்டாயமாக, எடை அதிகமுள்ள சிலைகளை வைக்கக்கூடாது.

7. படுக்கையறையில் மீன் தொட்டியை வைக்கக்கூடாது.

*சமையலறை:*

நல்லசமையறையை அமைக்கவேண்டுமானால், அதை தென்கிழக்கில் இருக்கும்படி அமைக்கவேண்டும். ஏனென்றால்,  தென்கிழக்கைத்தான் அக்னி மூலை என்று கூறுவார்கள்.  அங்குதான் அக்னிதேவன் வாழ்வதாக ஐதீகம். எனவே சமையலறையை தென்கிழக்கில் அமைப்பது சாலச் சிறந்தது.

1. ஒருபோதும் சமையலறையை வடகிழக்கில் அமைக்க வேண்டாம். இது முடும்ப அமைதியையும், செல்வச் செழிப்பையும்  அழித்துவிடும். குடும்பதினரிடையே நிலவிய நேசமும் காணாமல் போகும்.

2, அதுபோல சமையலறை தென்மேற்கில் இருக்கும்படியும் அமையக்கூடாது. அப்படி அமைந்தால், அது குடும்பத் தலைவரைப் பாதிக்கும்.

3.. சமையலறையிலிருந்து வரும் கழிவு நீர்க் குழாய்கள், வடக்கு, கிழக்கு திசைகளில் விழும்படி அமைக்கவேண்டும்.

4.  டாய்லெட்டோ, பூஜையறையோ சமையலற்க்குப் பக்கத்தில் வரும்படி அமைக்ககூடாது.

5.  சமைக்கும்போது  வடக்கு அல்லது கிழக்கு நோக்கி  இருந்தபடி சமைக்கவேண்டும்.

*பூஜையறை:*

1. வீட்டின் பூஜையறை வீட்டின் வடகிழக்கு  அறையிலோ அல்லது வடகிழக்கு மூலையிலோ வரும்படி அமைக்கவேண்டும்.  கோவிலாக அமைக்கவேண்டுமானாலும் வட கிழக்கு திசையில் அமைக்கவேண்டும்.

2. பூஜையறையை படுக்கயறைக்குள் வரும்படி அமைக்கக்கூடாது.

3. பூஜையறையை பேஸ்மெண்டில் அமைக்கக்கூடாது.

4. பூஜையறையை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஸ்டோர் ரூம் போல  வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது.

5. பூஜையறைக்குப் பக்கத்திலோ அல்லது மேலோ , கீழோ டாய்லெட்டுகள் இருக்கக்கூடாது.

6. இறந்தவர்களின் ஃபோட்டோக்களை பூஜையறையில் வைக்கவேண்டாம்.

7. ஸ்வாமி மேற்குப் பார்த்தபடியும்,  வணங்கி, பூஜிப்பவரின் முகம் கிழக்கு நோக்கியும் இருப்பது  வாஸ்துப்படி சிறப்பானது.

8. அதிக எடையிலான சிலைகளை வைப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக தெய்வங்களின் படங்களை வைத்துப் பூஜிக்கலாம்.

9. பழைய புராதனக் கோவில்களிலிருந்து அபகரித்து வரப்பட்ட சிலைகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைக்கவேண்டாம்.

10, பூஜையறைச் சுவரை ஒட்டினாற்போல், சுவாமி சிலைகளை வைக்கக்கூடாது. சுவற்றில் மாடமிட்டும் வைக்கக்கூடாது.   சுவற்றை விட்டு சற்றுத் தள்ளி வைக்கவேண்டும்.

*கழிவறைகள்:*

1. வடமேற்கிலும், வடக்கிலும்  குளியலறை மற்றும் அட்டேச்சுடு டாய்லெட்டுகள் அமைக்கலாம்.

2. டாய்லெட்டில் கம்மோடை தெற்கு- வடக்காக அமைக்கவேண்டும்.

3. ஒருபோதும் டாய்லெட்டை வடாகிழக்கில் அமைக்கவேண்டாம். ஏனென்றால் வடகிழக்கு செல்வம் வளரும் இடமாகும்.

4. கழிவறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை பதிக்கவேண்டுமானால், அதனை வடக்கு மற்றும் கிழ்க்கு சுவற்றில் இருக்கும்படி அமைக்கலாம்.

5. பாத்ரூம் டைல்ஸ் இள வண்ணங்களில் இருக்கட்டும். கருப்பு கலரைத் தவிர்க்கவும்.

6. குளியலறை, டாய்லெட்டின் தரை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஸ்லோப்பாக இருக்கவேண்டும்.

சிரிப்பு

மொழிக்கு முன்னதாக மனிதன் கண்டுபிடித்த முதல் தொடர்பு ஊடகம் சிரிப்பு! அகில உலகத்துக்கும் பொதுவான மொழி அது. பார்வையற்ற, கேட்கும்திறன் இல்லாத குழந்தைகூட பிறந்த சில நாட்களில் சிரிக்கும் என்பது சிரிப்பின் தனிச் சிறப்பு. கைக்குழந்தையாக இருந்தபோது ஒரு நாளைக்கு 200-300 முறை சிரித்துக்கொண்டிருந்த நாம், வளர்ந்ததும் ஒரு நாளைக்கு 15-20 முறைதான் சிரிக்கிறோம். மகிழ்ச்சியை மட்டும் அல்ல, ஆரோக்கியத்தையும் இலவச இணைப்பாகத் தருவது சிரிப்பு... திருக்குறள் முதல் வாட்ஸ்அப் ஸ்மைலி வரை அனைத்தும் அழுத்தமாகச் சொல்வது இதைத்தான். இதில் பலருக்கும் பிரச்னை என்னவென்றால், பிரிஸ்கிரிப்ஷனில் எழுதித்தர முடியாத இந்த மருந்தை எங்கே சென்று வாங்குவது என்பதுதான். 
ஏன் சிரிக்க வேண்டும்?
* மனிதன் மகிழ்ச்சிக்காக ஏன் மெனக்கெட வேண்டியிருக்கிறது? ஏனென்றால், உயிர் வாழப் பணம் தேவைப்படும் ஒரே உயிரினம் மனிதன் மட்டும்தானே! `வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்பது வழக்குமொழி மட்டும் அல்ல... விஞ்ஞான உண்மையும்கூட. எபிநெஃப்ரின் (Epinephrine), நார்-எபிநெஃப்ரின் (Norepinephrine), கார்டிசால் (Cortisol) ஆகியவை மனஅழுத்தம் உண்டாக்கும் ஹார்மோன்கள். ஆனால், மனம்விட்டுச் சிரிப்பது அந்த ஹார்மோன்களின் சுரப்பைக் குறைக்கிறதாம். அதனாலேயே, இயல்பாகவே மனஅழுத்தம் குறைகிறதாம். இயல்பிலேயே சிரிப்பை அடக்கிவைத்து, அதன் காரணமாகவே நம் ஊர்ப் பெண்களுக்கு ஏற்படுபவைதான் மனஅழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய் ஆகியவை. 
* சிரிப்பு, மூளையில் எண்டார்ஃபின்களைச் சுரக்கச் செய்து, நம் மனநிலையை உற்சாகமாக வைத்திருக்கும். ரத்தக்குழாயின் உட்சுவரான எண்டோதீலியத்தின் சுருக்கமும், அதில் கொழுப்புப் படிதலும்தான் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு எனப் பல பிரச்னைகளுக்குக் காரணங்கள். மனம்விட்டுச் சிரிப்பது, அந்த எண்டோதீலியத்தை விரிவடையச் செய்யும். 
பெண்களுக்கு மாதவிடாய் முடிவை ஒட்டி பயமுறுத்தும் புற்றுநோய்களுக்கும், அடிக்கடி சளி, இருமல், தும்மல் வரும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவுக்கும் வாய்விட்டுச் சிரிக்காததும் ஒரு காரணமே. 
* உயர் ரத்த அழுத்தம் தரும் மாரடைப்பைக் காட்டிலும், மகிழ்ச்சிக் குறைவால் வரும் மாரடைப்புகளே அதிகம் எனப் பல ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. மாரடைப்பைத் தள்ளிபோடும் விலையில்லா மருந்து, வயிறு குலுங்கவைக்கும் சிரிப்பு! 
* சிரிப்பு, நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்தும்; ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்; இதயத்தையும் நுரையீரலையும் நல்வழியில் தூண்டும்; பிராண வாயு ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்; தசைகளைத் தளர்வாக்கும்; வலி நீக்கும்; உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஞாபக சக்தி, படைப்பாற்றல், துடிப்பாக இருத்தல்... போன்ற மூளையின் செயல்திறனைக் கூர்மையாக்கும்.
* `தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்’ என்பதுபோல, `தினமும் 25 தடவை சிரித்தே ஆக வேண்டும்’ என்பதும் நலவாழ்வுக்குக் கட்டாயம். 
சிரிப்பு
சிரிப்புக்கு நேர் எதிரானது கோபம். `கொஞ்சமே கொஞ்சம் சரியான கோபம் தவறு அல்ல. ஆனால், எங்கே, எப்படி, எந்த அளவில், யாரிடம், எப்போது, எங்ஙனம்... என அலகுகள் தெரியாமல் காட்டப்படும் கோபம், கோபப்படுபவனைத்தான் அழிக்கும்’ எனச் சொன்னவர் அரிஸ்டாட்டில். அதீத கோபம் வந்தால், பி.பி எகிறி வாயைக் கோணவைக்கும் பக்கவாதம், வாழ்வையே கோணலாக்கும் மாரடைப்பு போன்றவை வர வழிவகுக்கும். 
கோபத்தை திசை திருப்புவது எப்படி? `கோபப்படுகிறோம்’ எனத் தெரிந்த அந்த விநாடியிலேயே, சொல்லவந்த வார்த்தையை, முகக்கோணலை, செயலை அப்படியே தடலாடியாக நிறுத்திவிட வேண்டும். சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, `அது அவசியமா?’ என யோசிக்க வேண்டும். பல சமயங்களில், `அது அநாவசியம்’ எனத் தெரியும். 
* கோபம் உண்டாகும் தருணங்களில் மூச்சை நன்கு உள்ளிழுத்துவிடவும்; கோபத்தை வளர்க்கும் அட்ரினலின் ஹார்மோன் கட்டுப்படும். 
* நெருக்கமானவர் நம் மீது தொடர்ந்து கோபப்பட்டுக்கொண்டே இருந்தால், ஃப்ளாஷ்பேக்கில் போய் எத்தனை கொஞ்சல், கரிசனம், காதல் தந்தவர் அவர் என்பதைச் சில விநாடிகள் ஓட்டிப் பார்த்து, சிந்தியுங்கள். கூலாகிவிடுவோம். * அடிக்கடி தேவையற்றதற்கெல்லாம் வரும் கோபத்துக்குப் பின்னணியாக மனஅழுத்தம் காரணமாக இருக்கலாம். மனநல மருத்துவர் உதவியும்கூட தேவைப்படலாம். கோபப்படாமல், அவர் உதவியை நாடவும். 
* கோபத்தைத் தொலைக்க வேண்டுமே தவிர, மறைக்கக் கூடாது. மறைக்கப்படும் கோபம், கால ஓட்டத்தில் மறந்துபோகாமல், ஓரத்தில் உட்கார்ந்து விஸ்வரூபம் எடுத்து, நயவஞ்சகம், பொறாமை... எனப் பல வடிவங்களை எடுக்கும். 

சிரிக்கச் சில வழிகள்... 
* `ஓ போடு’வில் தொடங்கி, கைகுலுக்கல், அரவணைப்பு, சின்ன முத்தம், முதுகு தட்டல், கைதட்டல்... இவையெல்லாம் சிரிப்புக்கு சினேகிதர்கள். சிரிப்பைக் கொண்டுவர, இவற்றில் ஏதாவது ஒன்றை முயற்சிக்கலாம். 
* `வாட்ஸ்அப்’பில் வலம்வரும் ஜோக்குகள், ஹீரோ பன்ச்களை உட்டாலக்கடி காமெடி ஆக்குவது, வசனம் இல்லாத சாப்ளின் படத்தில் அவரின் சேட்டைகளைப் பார்ப்பது... என  தினமும் ஏதாவது ஒன்றைப் பார்த்து, ரசித்து, அனுபவித்துச் சிரித்தால்தான் தொற்றாநோய்களை தள்ளிப்போடலாம்... தவிர்க்கலாம்
* வீட்டுச் செல்லக் குழந்தைகளைச் சிரிக்கவைக்க முயற்சி செய்யுங்கள். யானை அம்பாரி ஏறவைத்து விளையாடுவது தொடங்கி, முகத்தில் சேட்டை ரியாக்‌ஷன்களைக் கொடுத்து அவர்களைச் சிரிக்கவைப்பது வரை எதை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். அவை குழந்தைகளை உங்களுடன் நெருக்கமாக்கும். அவர்களின் மனங்களும் மலரும். 
* சிரிப்பை வரவைக்கும் படங்கள், வீடியோக்கள், குட்டிக் கதைகள் போன்றவை இணையத்தில் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் தரமான வலைதளங்களை புக்மார்க் செய்து வைத்துக்கொண்டு, தினமும் சில நிமிடங்களுக்காவது அவற்றைப் பார்த்து ரசிக்கலாம். 
சிரித்துப் பாருங்கள்... அலுவலகமோ, வீடோ எதுவாக இருந்தாலும் அது உங்களுக்கு சொர்க்கமாகவே தெரியும். 
தொகுப்பு: பாலு சத்யா

திங்கள், 9 ஏப்ரல், 2018

சித்திரை மாதம்

*சித்திரை சிறப்புகள்*
Google.com/+Bharathegopu
சித்திரை சிறப்புகள் ஏராளமாக உள்ளன. தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வசந்த நவராத்திரி, ராம நவமி, மத்ஸ்ய ஜெயந்தி, சித்திரைத் திருவிழா, அட்சய திருதியை போன்ற விழாக்களும், காமதா ஏகாதசி, பாபமோசனிகா ஏகாதசி, பைரவர் விரதம் போன்ற விரத முறைகளும் இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.

தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை ஆகும். இம்மாதத்தோடு வசந்த காலம் நிறைவடைகிறது.

சூரியன் இம்மாதத்தில்தான் உச்சநிலையினை அடைந்து அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. சித்திரை மொத்தம் 31 நாட்களைக் கொண்டுள்ளது.

*தமிழ் புத்தாண்டு*
சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை நித்திய கடமைகளை முடித்து கோவில்களுக்குச் சென்று அன்றைய ஆண்டில் எல்லா வளங்களும் பெற இறைவனை வழிபடுகின்றனர்.

மதிய வேளையில் உறவினர் மற்றும் நண்பர்களுடன் விருந்து உண்டு மகிழ்கின்றனர். பெரியவர்கள் சிறியவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். பகிர்ந்து உண்ணல், பரிசு வழங்குதல், உறவுகளுடன் மகிழ்ந்திருத்தல் ஆகியவை தமிழ் புத்தாண்டின் நிகழ்ச்சிகளாகும்.

கேரள மாநிலத்தில் சித்திரை முதல் நாளானது சித்திரை விசு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

*சித்திரை விசு*
பங்குனி மாதக் கடைசி நாள் இரவில் தங்க வெள்ளி பொருட்கள், நவரத்தினங்கள், பழவகைகள், காய்கனிகள், புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் ஆகியவற்றை பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர்.

மறுநாள் அதிகாலையில் எழுந்ததும் அந்த மங்கலப் பொருட்களைத்தான் முதலில் பார்ப்பார்கள். இதனால் அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்ற‌ நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

*வசந்த நவராத்தி*
நவராத்திரி என்பது உலகைக் காக்கும் அன்னையை விரத முறைகள் மேற்கொண்டு வழிபடக்கூடிய நாட்களைக் குறிக்கும்.

பொதுவாக வருடத்தில் புரட்டாசியில் சாரதா நவராத்திரி, ஆடியில் ஆசாட நவராத்திரி, தையில் சியாமளா நவராத்திரி, சித்திரையில் வசந்த நவராத்திரி நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. இவற்றுள் சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் மிக முக்கியமானவை ஆகும்.

சாராதா நவராத்திரி வழிபாடு போகத்தையும், வசந்த நவராத்திரி வழிபாடு யோகத்தையும் வழங்கிறது.

வசந்த நவராத்திரியானது பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்பட்டு வளர்பிறை நவமி வரை மொத்தம் ஒன்பது நாட்களாகவும், பங்குனி அமாவாசை முதல் அடுத்த பௌர்ணமி வரை மொத்தம் பதினைந்து நாட்களாகவும், பங்குனி அமாவாசை முதல் சித்ரா பௌர்ணமி வரை மொத்தம் நாற்பத்தைந்து நாட்களாகவும் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

வசந்த நவராத்திரியில் ஒன்பது நாட்கள் வழிபாடு மேற்கொள்ள உலக நன்மையும், பதினைந்து நாட்கள் வழிபாடு மேற்கொள்ள வேண்டும் வரங்களும், நாற்பத்தைந்து நாட்கள் வழிபாடு மேற்கொள்ள சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

பெரும்பாலும் இப்பண்டிகை வடஇந்தியாவிலும், தென்இந்தியாவில் சில கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.

*சித்ரா பவுர்ணமி*
சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி சித்திரா பௌர்ணமி என்ற பெயரில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நாம் செய்யும் பாவ புண்ணிய கணக்குகளை நிர்ணயம் செய்பவரும், எமதர்மனின் உதவியாளரும் ஆகிய சித்திர குப்தன் என்பவருக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

அன்றைய தினம் சிவபெருமான், அம்பிகை வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்விழாவன்று மக்கள் பொங்கலிட்டும் அன்னதானம் செய்தும் வழிபாடு மேற்கொள்கின்றனர்.
ஆறு,குளம், கடல் போன்ற நீர்நிலைகளின் கரைகளில் மக்கள்கூடி நிலவொளியில் அமர்ந்து சித்ரான்னம் என்று சொல்லக் கூடிய பலவகையான கலவை சாத வகைகளை உண்டு மகிழ்கின்றனர். இவ்வாறு உணவு உண்ணும் நிகழ்ச்சி பற்றி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சித்ரா பௌர்ணமி அன்று சோழர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் கோவிலில் அன்னம்தானம் செய்வதை வழக்கில் கொண்டிருந்தனர் என்பதை திருச்சி மலைக்கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

*ராமநவமி*
ராமநவமி என்பது திருமாலின் பத்துஅவதாரங்களில் ஏழாவது அவதாரமான ராமனின் பிறந்த நாளைக் குறித்து கொண்டாடப்படும் விழாவாகும்.

இராமன் பங்குனி அமாவசையை அடுத்த வளர்பிறை நவமியில் பிறந்தாகக் கருதப்பட்டு இவ்விழா கோலாகலமாக் கொண்டாடப்படுகிறது.

வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகளை கடைப்பிடித்து சாதாரண மனிதனாக வாழ்ந்து எல்லோருக்கும் முன்னுதாரமாகத் திகழ்பவர் ஸ்ரீராமபிரான் ஆவார்.

எனவே ராமநவமி அன்று  விரதம் மேற்கொண்டு இராமபிரானை வழிபட, நல்ல நெறியில் வாழ்க்கை முறை அமைந்து வாழ்வின் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.

அன்றைய தினம் முதல் ராம மந்திரம் சொல்லத் தொடங்கினால் மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் குடிகொள்ளும்.

*மத்ஸ்ய ஜெயந்தி*
திருமாலின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரம் சித்திரை மாதம் வளர்பிறை திருதியையில் (அமாவாசை அடுத்த மூன்றாவது நாள்) நிகழ்ந்தது. எனவே ஆண்டுதோறும் சித்திரை வளர்பிறை திருதியையில் மத்ஸ்ய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

அநீதியின் வடிவமான சோமுகாசுரன் என்னும் குதிரை முக அரக்கனிடம் இருந்து வேதங்களை காப்பாற்றி உலக உயிர் இயக்கத்திற்கு காரணமான மச்ச மூர்த்தியை வழிபட வாழ்வின் துன்பங்கள் நீங்கும்.

"சித்திரைத் திருவிழா*
சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அமாவாசையை அடுத்த இரண்டாம் நாள் முதல் மொத்தம் பன்னிரெண்டு நாட்கள் மதுரை மாநகரில் நடைபெறுகிறது.

இவ்விழாவில் மீனாட்சி கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குதல் என இரு முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவ்விழாவினைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் மதுரைக்கு வருகை தருகின்றனர்.

பத்தாம் நாள் திருவிழாவில் மீனாட்சி திருகல்யாணம் நடைபெறுகிறது. பதினொன்றாம் நாள் தேர்த்திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

*மீனாட்சி சுந்தரேஸ்வரர்*
சித்திரை பௌர்ணமி அன்று அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது. வைகைக்கு வரும் அழகரை வரவேற்கும் எதிர்சேவையும், ராமராயர் மண்டபத்தில் நடைபெறும் தசாவதார நிகழ்ச்சியும், சேதுபதி மண்டகப்படியில் நடைபெறும் பூப்பல்லக்கும் சிறப்பு வாய்ந்தவை.

*ஆற்றில் இறங்கும் அழகர்*
உலகிலே அதிக நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா என்ற சிறப்பினை சித்திரைத் திருவிழா பெறுவது குறிப்பிடத்தக்கது.

*அட்சய திருதியை*
அட்சய திருதியை என்பது சித்திரை மாதத்தின் வளர்பிறையின் மூன்றாவது நாளான திருதியையில் கடைப்பிடிக்கப்படுகிறது. அட்சய என்றால் எப்போதும் அள்ள அள்ள குறையாத எனப் பொருள்படும்.

அதாவது இந்நாளில் செய்யப்படும் நல்ல செயல்களான தான தருமங்கள் அள்ள அள்ள குறையாத அதிக பலன்களைத் தரும்.

பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் இந்நாளில் தான்.

அட்சய திருதியை அன்று தயிர்சாதம் தானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் செய்தால் திருமணத்தடை அகலும். உணவுதானியங்கள் தானம் செய்தால் விபத்துக்கள் அகால மரணம் போன்றவை ஏற்படாது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.
*காமதா ஏகாதசி*

சித்திரை மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி காமதா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் திருமாலை விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்ள வாழ்வின் எல்லா நல்ல விருப்பங்களும் நிறைவேறும்.

இவ்விரத முறையைப் பின்பற்றி லலிதன் என்னும் கந்தர்வன் சாபத்தினால் பெற்ற அரக்க உருவத்தில் இருந்து மீண்டும் கந்தர்வ வடிவம் பெற்றான்.
*பாபமோசனிகா ஏகாதசி*

சித்திரை மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி பாபமோசனிகா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பாபமோசனிகா ஏகாதசி அன்று விரதமுறை மேற்கொண்டு திருமாலை வழிபட நம்முடைய பாவங்கள் நீங்கும்.

*பைரவர் விரதம்*

சித்திரை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று பைரவ விரதம் பின்பற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் பகல் உணவு மட்டும் உண்டு விரத முறை மேற்கொள்ளப்படுகிறது.

அன்றைக்கு திருமுறை ஓதுதல் வழக்கத்தில் உள்ளது. இவ்விரத முறையை பின்பற்றினால் சுபிட்சமான வாழ்வுடன் இறுதியில் முக்தி கிடைக்கும்.
*லட்சுமி பூஜை*

சித்திரை மாத வளர்பிறை பஞ்சமியில் திருமகள் பூலோகத்திற்கு வந்ததாகக் கருதப்படுகிறது. எனவே இந்நாளில் லட்சுமி பூஜை செய்து வழிபட செல்வம் பெருகும்.

சித்திரை மாத வளர்பிறை அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாகக் கருதப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

இரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் (Hypertension) குறித்து நம்மில் பலருக்கும் விழிப்புணர்வு இருக்கிறது. அதேவேளையில் குறை ரத்த அழுத்தம் (Hypotension) குறித்து படித்தவர்களிடம் கூட விழிப்புணர்வு இல்லை என்பதுதான் வருத்தம். உலகில் இளம் வயதினருக்கு 100ல் 10 பேருக்கு குறை ரத்த அழுத்தம் உள்ளது. வயது கூடும்போது இந்த சதவிகிதமும் கூடுகிறது. உயர் ரத்த அழுத்த நோயை ‘அமைதியான ஆட்கொல்லி நோய்’ (Silent killer) என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் இதுபோல் குறை ரத்த அழுத்த நோயை ஒரு எரிமலை என்கிறார்கள். எரிமலை எப்போது நெருப்பைக் கக்கும் என்று சொல்ல முடியாதோ, அப்படித்தான் பல நேரங்களில் இது ஆபத்தில்லாத நோயாக அமைதி காத்தாலும், சில வேளைகளில் திடீரென்று உயிருக்கு ஆபத்து தருகின்ற நோயாகவும் மாறிவிடுவது உண்டு.

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல ரத்தமானது ரத்தக்குழாய்களில் ஓடுகிறது. இது, இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும்போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது. இந்த வேகத்திற்குப் பெயர்தான்  ‘ரத்த அழுத்தம்’ (Blood pressure). பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம்  120/80 மி.மீ. பாதரச அளவு என்று இருந்தால், அது இயல்பு அளவு. இதில் 120  என்பது சிஸ்டாலிக் அழுத்தம் (Systolic pressure).  அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகின்ற அழுத்தம். இதைத் தமிழில் ‘சுருங்கழுத்தம்’ என்று சொல்கிறோம். 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம் (Diastolic pressure). அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உடலில் இருந்து வருகின்ற ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. அப்போது ஏற்படுகின்ற ரத்த அழுத்தம் முன்னதைவிடக் குறைவாக இருக்கும். இந்த அழுத்தத்தை ‘விரிவழுத்தம்’ என்று அழைக்கிறோம்.

முப்பது வயதுள்ள ஒரு நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம், இதில் 120 என்பது சுருங்கழுத்தம்; 80 என்பது விரிவழுத்தம். ஆனால், இது எல்லோருக்குமே சொல்லி வைத்ததுபோல் 120/80 என்று இருக்காது. ஒரே வயதுதான் என்றாலும் ஆளுக்கு ஆள், உடல், எடை, உயரம் போன்றவை வித்தியாசப்படுவதுபோல, சுருங்கழுத்தமும் விரிவழுத்தமும் சற்று வித்தியாசப்படலாம். ஆகவேதான், உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை  உள்ள ரத்த அழுத்தத்தை `நார்மல்’ என்று வரையறை செய்துள்ளது. இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை  ‘உயர் ரத்த அழுத்தம்’ என்றும், 90/60 மி.மீ. பாதரச அளவுக்குக் கீழ் குறைந்தால் அதைக்  ‘குறை ரத்த அழுத்தம்’ என்றும் சொல்கிறது.

குறை ரத்த அழுத்தம் 

குறை ரத்த அழுத்தத்தில் பல வகை உண்டு. வழக்கத்தில் நாம் குறிப்பிடும் குறை ரத்த அழுத்த நோய்க்குத்  ‘தமனிநாளக் குறை ரத்த அழுத்தம்’ (Arterial Hypotension) என்று பெயர்.  ஒருவருக்கு சிஸ்டாலிக் அழுத்தம் 90க்குக் குறைவாகவோ அல்லது டயஸ்டாலிக் அழுத்தம் 60க்குக் குறைவாகவோ இருந்தால், அவருக்கு இவ்வகை குறை ரத்த அழுத்தம் இருப்பதாகக் கொள்ள வேண்டும். அல்லது சிஸ்டாலிக் அழுத்தம் 115க்கு மேல் இருந்து டயஸ்டாலிக் அழுத்தம் 50க்குக் குறைவாக இருந்தால் அப்போதும் அதைக் குறை ரத்த அழுத்தம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். பலருக்கும் குறை ரத்த அழுத்தம் இருக்கும். ஆனால், தொல்லைகள் எதுவும் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் பயப்படத் தேவையில்லை. திடீரென்று 20 மி.மீ. அளவுக்கு சிஸ்டாலிக் அழுத்தம் குறைகிறதென்றால், அப்போது சில அறிகுறிகள் தோன்றும். இந்த நிலைமையில் அவசியம் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், உயிருக்கு ஆபத்து நேரும்.

ரத்த அழுத்தம் குறைவது ஏன்?

இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்ல தடை உண்டாவதுதான் குறை ரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம். ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்று விடுகிறது. இதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்துவிடுகிறது; மயக்கம் ஏற்படுகிறது. 

யாருக்கு இது வருகிறது?

தடகள வீரர்கள், கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்கள், தீவிரமாக ஜிம் பயிற்சி செய்பவர்கள், ஒல்லியான உடல்வாகு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், வயதானவர்கள், படுக்கையில் நீண்ட காலம் படுத்திருப்பவர்கள் போன்றோருக்குக் குறை ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள் என்னென்ன?

தலைக்கனம், தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, வழக்கத்துக்கு மாறான அதீத நாவறட்சி, சோர்வு, பலவீனம், கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு, பார்வை குறைவது, மனக்குழப்பம், வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைமை, உடல் சில்லிட்டுப்போவது, மூச்சுவாங்குவது போன்ற அறிகுறிகளில் ஒன்றோ பலவோ ஏற்பட்டால் அப்போது குறை ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது.

யாருக்கு, எப்போது வாய்ப்பு அதிகம்?

1. கர்ப்பம்: கர்ப்பத்தின்போது கர்ப்பிணியின் உடலில் ரத்தக் குழாய்கள் அதிகம் விரிவடைவதால், ரத்த அழுத்தம் குறைகிறது. என்றாலும், இதற்குப் பயப்படத் தேவையில்லை. பிரசவத்துக்குப் பிறகு இது சரியாகிவிடும்.

2. நீரிழப்பு: காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள், தீவிரமான தீக்காயங்கள், அக்னி நட்சத்திர வெயில் போன்றவை காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படும்போது குறை ரத்த அழுத்தம் ஏற்படும். 

3. நோய்கள்: இதய வால்வு கோளாறுகள், இதயத் துடிப்புக் கோளாறுகள், மாரடைப்பு, இதயச் செயலிழப்பு போன்ற காரணங்களால் குறை ரத்த அழுத்தம் ஏற்படும். நுரையீரல் ரத்த உறைவுக்கட்டி (Pulmonary Embolism), சிறுநீரகச் செயல்இழப்பு, காலில் சிரை ரத்தக்குழாய் புடைப்பு நோய் (Varicose veins) போன்றவற்றாலும் தானியங்கி நரம்புகள் செயல்படாதபோதும் இது ஏற்படுகிறது.

4. விபத்துகள்: வீட்டில், சாலையில், அலுவலகத்தில், தண்ணீரில் ஏற்படும் விபத்துகளால் மூளை, முதுகுத் தண்டு வடம் மற்றும் நுரையீரலில் அடிபடும்போது அல்லது பாதிப்பு ஏற்படும்போது அங்குள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு குறை ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

5. ஹார்மோன் கோளாறுகள்: தைராய்டு மற்றும் பிட்யூட்டரி குறைபாடுகள், பேரா தைராய்டு மற்றும் அட்ரீனல் கோளாறுகள், கட்டுப்படாத நீரிழிவு நோய், ரத்த சர்க்கரை தாழ்நிலை போன்றவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

6. ரத்தம் இழப்பு: விபத்துகள் மூலம் ரத்தம் இழப்பு ஏற்படும்போதும், டெங்கு காய்ச்சல், மூலநோய், இரைப்பைப் புண், குடல் புற்றுநோய், அளவுக்கு அதிகமான மாதவிலக்கு போன்ற உடல் நோய்களால் ரத்தம் இழக்கப்படும்போதும் குறை ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

7. தீவிர நோய்த்தொற்று: சில தொற்றுக் கிருமிகள் ரத்தத்தில் கலந்து நச்சுக்குருதி நிலையை (Septicaemia) உருவாக்கும். அப்போது ரத்த அழுத்தம் குறையும்.

8. ஒவ்வாமை: மருந்துகள், உணவுகள், விஷக்கடிகள் போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்படும்போதும் ரத்த அழுத்தம் திடீரென்று குறையும்.

9. சத்துக்குறைவு: ரத்தசோகை நோய் இருப்பவர்களுக்கும், வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் குறைவாக உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தம் குறைவதுண்டு.

10. மருந்துகள்: சிறுநீரைப் பிரியச் செய்யும் மருந்துகள், மன அழுத்த நோய்க்கான மருந்துகள், ஆண்மைக் குறைவுக்குத் தரப்படுகிற ‘வயாகரா’ வகை மாத்திரைகள், பார்கின்சன் நோய்க்கான மருந்துகள் போன்றவற்றால் ரத்த அழுத்தம் 
குறையலாம்.

11. ரத்த அழுத்த மாத்திரைகள்: உயர் ரத்த அழுத்தநோய்க்குத் தரப்படுகிற மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும்

12. அதிர்ச்சி நிலை: இதயம், நுரையீரல், சிறுநீரகம், தானியங்கி நரம்புகள், ரத்த ஓட்டம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகளால் குறை ரத்த அழுத்தம் ஏற்படும்போது உடலில் அதிர்ச்சி நிலை (Shock) உருவாகும். இதுபோல் மருந்து ஒவ்வாமை, விஷக்கடிகளாலும் இம்மாதிரியான அதிர்ச்சி நிலை உருவாவது உண்டு. இதுதான் ஆபத்தைத் தரும்.

இருக்கை நிலை சார்ந்த குறை ரத்த அழுத்தம்

சிலருக்குப் படுக்கையை விட்டு எழுந்ததும் அல்லது கழிப்பறையில் கழிப்பிடத்திலிருந்து எழுந்ததும் கண்கள் இருட்டாவதுபோல் உணர்வது, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதுவும் குறை ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படுவதுதான். இதற்கு ‘இருக்கை நிலை சார்ந்த குறை ரத்த அழுத்தம்’ (Postural hypotension) என்று பெயர். இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகவும் சகஜம். இது இளம் வயதினருக்கும் வரலாம். நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் அமர்ந்துவிட்டு, திடீரென்று எழுந்து நின்றால் இவ்வாறு குறை ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கம் வரும். சில மாத்திரை மருந்துகளாலும், உறக்கமின்மை போன்ற உடல் சார்ந்த கோளாறுகளாலும் இது ஏற்படுவதுண்டு.

உணவுக்குப் பின் குறை ரத்த அழுத்தம்

சிலருக்கு உணவு சாப்பிட்டதும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும் (Postprandial hypotension). இது பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுவதுண்டு. தானியங்கி நரம்புக் குறைபாடு உள்ளவர்களுக்கும் பார்க்கின்சன் நோயாளிகளுக்கும் இது ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். உணவை  சாப்பிட்டதும் அதை செரிமானம் செய்ய குடலுக்கு அதிக அளவில் ரத்தம் வந்துவிடும். இதனால் இதயம் மற்றும் மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்தம் குறைந்துவிடும். அப்போது ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இதைத் தவிர்க்க சிறிது சிறிதாக அடிக்கடி உணவு சாப்பிட வேண்டும். மாவுச் சத்து நிறைந்த, கொழுப்புச் சத்து குறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியதும் முக்கியம்.

பரிசோதனைகள்

குறை ரத்த அழுத்த நோய்க்கு முதல்முறையாக மருத்துவரிடம் செல்லும்போது வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், இசிஜி, எக்கோ, டிரெட்மில் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. சிலருக்கு ‘சாய் மேஜை பரிசோதனை (Tilt-table Test)  தேவைப்படும். இவற்றின் மூலம் குறை ரத்த அழுத்தம் நோய்க்குக் காரணம் தெரிந்து சரியான சிகிச்சையை  தொடங்க முடியும். 

சிகிச்சை என்ன?
    
* அடிப்படை காரணத்தை சரி செய்தால் மட்டுமே குறை ரத்த அழுத்தம் சரியாகும். எனவே, காரணத்தைச் சரியாக கணித்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம்.
* மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் உப்பை சிறிதளவு அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
* கால்களுக்கு மீளுறைகளை (Stockings) அணிந்து கொள்வது நல்லது.
* சிறு தானியங்கள், காய்கறி, பழங்கள் கலந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.
* குறை ரத்த அழுத்த நோயைக் குணப்படுத்த சில மாத்திரைகளும் உள்ளன. அவற்றை குடும்ப மருத்துவரின் பரிந்துரையின்படி சாப்பிடலாம்.

பொதுவான யோசனைகள்
    
* குறை ரத்த அழுத்தம் காரணமாக தலைச்சுற்றல், மயக்கம் வரும்போது காபி அல்லது தேநீர் குடிக்கலாம். தற்காலிகமாக இவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
* நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் உட்காராதீர்கள். இடையிடையில் எழுந்து செல்லுங்கள்.
* நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பதும் கூடாது.
* வெயிலில் அளவுக்கு அதிகமாக அலையக்கூடாது; விளையாடக் கூடாது. 
* கடுமையான உடற்பயிற்சிகள், `ஜிம்னாஸ்டிக்’, ‘கம்பிப் பயிற்சிகள்’ போன்ற தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது.
* சரியான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம்.
* ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.
* புகைப்பிடிக்காதீர்கள்.
* மது அருந்தாதீர்கள்.
* போதை மாத்திரைகளை சாப்பிடாதீர்கள்.
* தலை சுற்றுவதுபோல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
* படுக்க முடியாத நிலைமைகளில் தரையில் உட்கார்ந்து கொண்டு, உடலை முன்பக்கமாக சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள்.
* படுக்கையை விட்டு சட்டென்று உடனே எழ வேண்டாம். சிறிது நேரம் மூச்சை நன்றாக உள் இழுத்து, பிறகு வெளியில்விட்டு, மெதுவாக எழுந்திருங்கள்.
* எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் முதலில் படுத்துக் கொண்டு அந்தப் பக்கவாட்டிலேயே எழுந்திருங்கள். 
* எழுந்தவுடனேயே நடந்துசெல்ல வேண்டாம். 
* படுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடந்தால் தலைச்சுற்றல் ஏற்படாது. 
* படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் கீழ்நோக்கிக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிக்காதீர்கள்.
* தலைக்குத் தலையணை வைக்காதீர்கள்.
* உடலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உடனடியாக மாறாதீர்கள். உதாரணத்துக்கு, புரண்டு படுக்கும்போது திடீரெனப் புரளாதீர்கள்.
* அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்னை உள்ளவர்கள், வீட்டுக் கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கம்பிகளைச் சுவற்றில் பதித்துக்கொள்ளுங்கள்.  அப்போதுதான் தலைச்சுற்றல் வரும்போது இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் கீழே விழுவதைத் தடுக்க முடியும்.
* வழுக்காத தரைவிரிப்புகளையே வீட்டிலும், குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் பயன்படுத்துங்கள். 
* இரவு விளக்குகளைப் பயன்படுத்துங்கள்.
* அடிக்கடி மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். 
* ரோலர் கோஸ்டர் போன்ற ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிருங்கள்.
* மருத்துவர் பரிந்துரை செய்யாமல் நீங்களாகவே சுய மருத்துவம் செய்யாதீர்கள்.

சனி, 7 ஏப்ரல், 2018

ஆஸ்துமா


ஆஸ்துமா

பனிக்காலத்தில் ஏற்படுகிற நோய்களில் ஆஸ்துமாவுக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இந்தியாவில் சுமார் 2 கோடிப் பேர் ஆஸ்துமாவால் அவதிப்படுகின்றனர். பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 15 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது.

காரணங்கள்

ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. குளிரான தட்பவெப்ப நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை.

நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவைத் தூண்டும். அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும். டான்சில் வீக்கம், அடினாய்டு வீக்கம், சைனஸ் தொல்லை, பிரைமரி காம்ப்ளக்ஸ் போன்ற நோய்களால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருகிறது.

இவை தவிர கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக் குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆஸ்துமாவை வரவேற்கும். நாம் சாப்பிடும் சில மருந்துகளால்கூட ஆஸ்துமா வரலாம். சிலருக்கு விஷக்கடிகள் காரணமாகவும், இன்னும் சிலருக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதாலும் ஆஸ்துமா வருகிறது.

ஏற்படும் விதம்

இதுவரை சொன்ன காரணங்களில் ஒன்றோ, பலவோ சேர்ந்து நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் (Bronchus) தசைகளைச் சுருக்கிவிடுகின்றன. அப்போது மூச்சுச் சிறுகுழல்கள் (Bronchioles) இன்னும் அதிகமாகச் சுருங்கிவிடுகின்றன. அதேவேளையில் மூச்சுக்குழலில் உள்சவ்வு வீங்கிவிடுகிறது. இந்தக் காரணங்களால் மூச்சு செல்லும் பாதை சுருங்கி விடுகிறது.

இந்த நேரத்தில் வீங்கிய மூச்சுக்குழல் சவ்விலிருந்து நீர் சுரக்கிறது. இது ஏற்கெனவே சுருங்கிப்போன மூச்சுப்பாதையை இன்னும் அதிகமாக அடைத்துவிடுகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது. குறிப்பாக அதிலும் மூச்சை வெளிவிடுவதில்தான் மிகவும் சிரமமாக இருக்கும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இளைப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்ற தொல்லைகள் ஏற்படுவது இதனால்தான். அடுத்து, மிகக் குறுகிய மூச்சுக் குழல்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது ‘விசில்’ (வீசிங்) போன்ற சத்தம் கேட்பதும் உண்டு.

தவிர்ப்பது எப்படி?

ஆஸ்துமாவை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. இதைக் கட்டுப்படுத்தவே வழிகள் உள்ளன. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல்….. இவை எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். தூசு, குப்பை, அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும். வீட்டில் தேவையில்லாமல் சாமான்களை அடுக்கி வைக்கக் கூடாது. சுவர்களில் படங்களைத் தொங்கவிடக் கூடாது. இவற்றில் ஒட்டடை சேரும் வாய்ப்பு அதிகம். ஒட்டடை இவர்களுக்குப் பரம எதிரி.

படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி மாற்றிவிட வேண்டும். இந்த இரண்டும் சுத்தமில்லாவிட்டால் அதில் ‘மைட்’ எனும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் புழங்கும், அவை ஆஸ்துமாவைத் தூண்டும்.

இவர்கள் கம்பளிப் போர்வையைப் பயன்படுத்தக் கூடாது. சில்லென்ற காற்று நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்க வேண்டும். இவர்கள் சுழல் விசிறிக்கு நேராகப் படுக்கக் கூடாது. வாசனை திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. ஊதுவத்திகள், கொசுவிரட்டிகள், சாம்பிராணிப் புகை, கற்பூரம் போன்றவற்றால்கூட ஆஸ்துமா அதிகரிக்கலாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

ஒட்டடை அடித்தல், வெள்ளை அடித்தல், வர்ணம் பூசுதல் போன்றவற்றை ஆஸ்துமா உள்ளவர்கள் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. இரண்டு சக்கர வாகனங்களில் வெளியில் செல்வதாக இருந்தால், முகத்தில் சுகாதார மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும்.

பூக்களின் மகரந்தம் ஆஸ்துமாவைத் தூண்டுகிற முக்கியமான காரணி. ஆகவே பூக்கள் பூக்கின்ற இளங்காலை நேரத்தில் தோட்டம் பக்கம் போகக் கூடாது. இதுபோல் வளர்ப்புப் பிராணிகளும் இவர்களுக்கு ஆகாது. பூனை, கோழி, வாத்து, நாய், புறா, கிளி போன்ற சில உயிரினங்களின் இறகு, ரோமம், கெட்ட வாசனை மற்றும் கரப்பான் பூச்சியின் எச்சம் ஆஸ்துமாவுக்கு வரவேற்பு சொல்லக்கூடியவை.

பஞ்சுத் தூசு, ரைஸ்மில் தூசு, மாவுமில் தூசு, சிமெண்ட் புகை, ஆஸ்பெஸ்டாஸ் புகை, நூற்பாலைக் கழிவு போன்றவை ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஆகாதவை. இந்த மாதிரி இடங்களில் வசிப்பதையும் வேலை செய்வதையும் இவர்கள் தவிர்க்க வேண்டும்.

உணவில் கவனம்!

ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் உணவுக்கு முக்கியப் பங்கு உண்டு. எந்த உணவால் ஆஸ்துமா வருகிறது என்பதைக் கண்டுபிடித்து, அந்த உணவைத் தவிர்த்தால் ஆஸ்துமா அடிக்கடி தொல்லை தராது.

ஆஸ்துமா உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பொதுவான உணவு வகைகள்:

பால், தயிர், முட்டை, மீன், கருவாடு, நண்டு, கடல் மீன், கடலை, பருப்பு வகைகள், கொட்டை வகைகள், வாழைப்பழம், திராட்சைப்பழம், எலுமிச்சை, நெல்லிக்காய், கத்திரிக்காய், கொய்யா, தக்காளி, டால்டா, குளிர்பானங்கள், சர்பத், ரோஸ்மில்க், லஸ்ஸி, கோக் பானங்கள்.

வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. எளிதாகச் செரிக்கும் வகையில் உணவு இருக்க வேண்டும். உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும்.

இவர்கள் இளஞ்சூடான தண்ணீரை அடிக்கடி அருந்தினால் நுரையீரலில் சேருகின்ற சளி உடனுக்குடன் வெளியேற வாய்ப்பு கிடைக்கும். நீராவி பிடிப்பதும் நல்ல பலன் தரும்.

புகை – பெரிய பகை!

ஆஸ்துமாவைத் தடுக்க விரும்பினால் புகைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பவர்களுக்கு மத்தியில் செல்லக் கூடாது. வீட்டில் விறகு அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மதுவும் ஆகாது. மதுவில் இருக்கிற ‘மால்ட்’ எனும் பொருள் ஆஸ்து மாவைத் தூண்டுகிற காரணி.

மூச்சுப்பயிற்சி முக்கியம்!

தினமும் காலையில் எழுந்ததும் முறைப்படி பிராணாயாமம் செய்வது நல்லது. அல்லது காற்றுத் தலையணைக்குள் காற்றை ஊதி நிரப்பும் பயிற்சியைச் செய்யலாம். பெரிய ரப்பர் பலூனை ஊதிப் பயிற்சி செய்யலாம். சிறிய ஊதுகுழல் மூலம் தண்ணீரில் குமிழ்கள் வருமாறு ஊதிப் பயிற்சி செய்யலாம். இதன் மூலம் நுரையீரலின் திறனை அதிகப்படுத்த முடியும்.

என்ன சிகிச்சை?

‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) எனும் பரிசோதனை மூலம் மூச்சுக்குழலின் சுருக்க அளவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை முறைகளை அமைத்துக் கொள்வது நடைமுறை.

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ‘இன்ஹேலர்’ ஒரு வரப்பிரசாதம். ஆஸ்துமாவுக்கு மாத்திரை, மருந்து, ஊசிகளைப் பயன்படுத்தும்போது, அவை ரத்தத்தில் கலந்து நுரையீரலைச் சென்றடையும். அதன்பின்புதான் அவை பலன் தரும். இதற்குச் சிறிது நேரம் ஆகலாம். ஆனால், இன்ஹேலரைப் பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று மூச்சுக்குழல் தசைகளைத் தளர்த்திவிடும். இதன் பலனால் மூச்சுத் திணறல் உடனடியாக கட்டுப்படும்.

ஒருவருக்கு ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா வருமானால் எதற்கு ஒவ்வாமை என்று கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஜோதிடம் என்பது

காலம்காலமாக விளக்கிச் சொல்லாமல் எளிய ஜனங்களுக்கு எட்டாக் கனியாகவே போய்விட்ட இந்த மாபெரும் கலையை எல்லோருக்கும் புரியும்படி எளிமைப் படுத்தினால் இன்னும் மிகுதியான மக்களிடம் வரவேற்பைப் பெறும் என்பது உறுதியான ஒன்று.

ஏன்? எதற்கு? எப்படி? என்று தெரிந்து கொள்ளாமல், அறிந்து கொள்ள தேவையும் இல்லாமல் அல்லது தெளிவாக சொல்வதற்கு யாரும் இல்லாத நிலையில்தான் ஜோதிடர்களும், ஜோதிட ஆர்வலர்களும் இருக்கின்றார்கள். அதேநேரத்தில் ஜோதிடத்தின் அத்தனை சூட்சும அமைப்புகளையும், விதிகளையும் பாமரனுக்கும் புரியும்படி விளக்கவே முடியாது.

ஜோதிடமே கடுமையான முரண்பாடுகளைக் கொண்டதுதான். பல நேரங்களில் இங்கே விதியைவிட விதிவிலக்கே அதிகமாக கவனிக்கப்பட வேண்டும். உண்மையில் ஜோதிடத்தை புரிந்து கொள்பவரிடம்தான் குறை இருக்கிறதே தவிர இம்மியளவு குறை கூட இந்த மகா அற்புதக் கலையில் இல்லை.

ஜோதிடரைப் பற்றியும், ஜோதிடத்தையும் விளக்குவதற்கு இங்கே ஏராளமான சம்பவங்கள் கதைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. பதினெட்டாம் பிறந்த நாளன்று இளவரசன் பன்றியால் (வராஹம்) இறந்து போவான் என்று மிகிரர் என்ற ஜோதிடஞானி அரசனிடம் சொல்ல, விதியை வெல்ல நினைத்த அரசன் காட்டுக்குப் போனால்தானே மகன் இறப்பான் என்று அரண்மனைக்குள்ளேயே மகனை வைத்து அடைகாத்த நிலையில் மாடத்தில் பொருத்தப்பட்டிருந்த பன்றித்தலை விழுந்து இளவல் இறந்து போக, அங்கே ஜோதிடமும், ஜோதிடரும் ஜெயித்து வெறும் மிகிரர் “வராஹமிகிரர்” ஆனதும் ஜோதிடத்தால்தான்.

அதே பதினெட்டாம் பிறந்த நாளில் தன் மகன் இறந்து போவான் என்று வேறொரு ஜோதிடர் கணிக்கிறார். ஆனால் இந்த அமைப்பிற்கு குருவின் பார்வை இருப்பதால் மகனின் மரணம் இருக்காது என்று உறுதி செய்கிறார். கணிப்புத் தவறி மகன் பதினெட்டாம் பிறந்த நாளில் மரித்துப் போகிறான். அதிர்ந்து போன ஜோதிடர் இந்த அற்புதக் கலையே பொய் என்று மகனின் சிதையிலேயே அனைத்து ஓலைச்சுவடிகளையும் எரிக்கப் போகும் நிலையில் முக்காலமும் அறிந்த ஞானி நாரதர் வந்து தடுக்கிறார்.

மகன் ஜாதகத்தில் குருபார்வை இருக்கிறது என்று கணித்தாயே, கிரகங்களுக்கும் மனிதர்களைப் போலவே விழிப்பது, காலைக்கடன் கழிப்பது, போஜனம், தாம்பூலம், தூக்கம் போன்ற நித்யகர்மாக்கள் ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே அறிவாயா எனக் கேட்டு, மகன் ஜாதகத்தில் குருபார்வை உள்ளது என்று நீ கணித்த போது குருவின் நித்யகர்மா என்ன என்பதை பார்த்தாயா என்று கேட்கிறார்.

மீண்டும் கணித்துப் பார்க்கையில் குருவின் அப்போதைய நித்ய கர்மா தூங்குவது என வருகிறது. தூங்கும் குருவிற்கு ஏது பார்வை? தவறை உன்பேரில் வைத்துக் கொண்டு ஓலைச்சுவடிகளை ஏன் எரிக்கிறாய் என்று நாரத மகரிஷி கேட்பதாக இன்னொரு கதை சொல்கிறது.

உண்மையில் குருடர்கள் யானையை பார்ப்பதுதான் ஜோதிட சாஸ்திரமும். யானையின் முன்னங்காலை மட்டும் தடவிப் பார்க்கும் ஜோதிடர் யானை தூண் போல இருக்கும் என்கிறார். துதிக்கையைப் பார்ப்பவர் உருளையைப் போன்றது என்கிறார். கடைநிலையில் இருக்கும் ஜோதிடர் வாலின் நுனி முடியை மட்டும் தடவிப் பார்த்துவிட்டு யானை சிறு குச்சியைப் போல இருக்கும் என்கிறார். உண்மையில் இந்த யானையை முழுதாகப் பார்த்தவர்கள் யாரும் இல்லை.

பலன் சொல்வதைத் தவிர்த்து விட்டால் ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க வானவியலை சார்ந்த ஒன்றுதான் என்பதை பகுத்தறிவாளர்கள் கூட ஒத்துக் கொள்கிறார்கள். தமிழகத்தின் மிகப்பெரிய பகுத்தறிவாளராக அறியப்பட்ட ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும்போது “ஜோதிடத்தில் எதிர்காலம் பற்றிய ஏதோ ஒன்று ஒளிந்து கிடக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதை வைத்து பயமுறுத்தி பரிகாரம் என்ற பெயரில் பணம் கறக்கும் கலையாகி விட்டதால்தான் என் போன்றவர்கள் எதிர்க்கிறோம். உண்மையில் உங்களைப் போன்றவர்கள் இக் கலையை ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கையூட்ட, நல்வழிகாட்ட பயன்படுத்துவதை வரவேற்கவே செய்கிறேன்” என்று சொன்னார்.

ஜோதிடத்தில் கொடுக்கப்படும் கிரகநிலைகள் விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொண்ட வானியல் உண்மைகள்தான். இன்னும் ஒருபடி மேலாக சொல்லப் போனால் 1500 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிடம் கண்டுபிடித்த பஞ்சாங்கத்தின் மேல்தான் இன்றைய நவீன வானவியல் அமர்ந்திருக்கிறது. நாசா உள்ளிட்ட நவீன விஞ்ஞானிகள் இன்றைய கிரக நிலைகளை துல்லியமாக கணிக்க உதவியவை. அன்றைக்கு நமது தெய்வாம்சம் பொருந்திய ஜோதிட ஞானிகள் வெறும் கண்ணால் பார்த்துச் சொன்ன அடிப்படை கிரக நிலைகள்தான்.

ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் கிரகங்கள் அனைத்தும் நவீன விஞ்ஞானத்திற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கண்டு பிடிக்கப்பட்டவை. இன்றைய விஞ்ஞானம் கடந்த ஐநூறு ஆண்டுகளாக செழித்து வளர்ந்திருக்கலாம். ஆனால் வானவியலின் அடிப்படையே ஜோதிட சாஸ்திரம்தான் என்பதை வசதியாக மறந்து விடுகிறோம்.

உலகின் மாபெரும் விஞ்ஞானியான சர். ஐசக் நியூட்டனின் அறையில் ஜோதிடப் புத்தகங்கள் நிரம்பி இருப்பதைப் பார்த்த அவரது மாணவர் ஹாலி “விஞ்ஞானியின் அறையில் ஜோதிட புத்தகங்களா?” என்று கேட்டதற்கு “ஜோதிடத்தைப் பற்றி நான் அறிந்திருப்பதால் வைத்திருக்கிறேன். அறியாததால் நீ கேட்கிறாய்” என்று பதில் சொன்னார். இவரைப் போன்ற விஞ்ஞானிகள் இன்றும் இருக்கிறார்கள்.

ஆனால் அரசாங்கங்களின் ஆதரவினால் கிடைக்கும் முறையான ஆராய்ச்சியின் மூலம் அறிவியல் வளர்ந்து கொண்டே வரும் நிலையில், நவீன விஞ்ஞானத்தின் ஆதாரக் கலையான ஜோதிடம் மட்டும் இன்றுவரை மிகப் பெரிய ஆராய்ச்சிகள் இன்றி சவலைப் பிள்ளையாகவே இருந்து வருகிறது. வானியல் சாஸ்திரத்திற்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் ஜோதிடத்திற்கும் கொடுக்கப்பட்டிருந்தால் விஞ்ஞானம் வேறுவகையில் எப்போதோ பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டு பிடித்திருக்குமோ என்னவோ?

நவீன விஞ்ஞானிகள் இன்று வான சாஸ்திரத்தின் குறியீடுகளாக பயன்படுத்தும் அடிப்படை விஷயங்கள், நட்சத்திரக் கூட்டங்கள் அனைத்தையும் கண்டுபிடித்தது அன்றைய ஜோதிடம்தானே தவிர நவீன விஞ்ஞானம் அல்ல. உண்மையைச் சொல்லப் போனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஜோதிடம்தான் விஞ்ஞானமாக கருதப்பட்டு வந்தது.

பூமியில் இருந்து வானத்தை பார்க்கும் மனிதன் தன்னைச் சுற்றியுள்ள விண்வெளியை பனிரெண்டு சமமாக பங்குகளாக, மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளாக பிரித்தது சூரிய, சந்திர, பூமியின் இயக்கங்களை வைத்துத்தான். இந்த மூன்றும்தான் நம்மைச் சுற்றியுள்ள வானின் ஆதாரப் புள்ளிகள். பூமியில் இருந்து பார்ப்பதால் நமக்கு சூரியனும், சந்திரனும் மையப் புள்ளிகள் ஆகின.

சந்திரனின் வழியாக, அதைக் கடந்துதான் நாம் வானத்தைப் பார்க்கிறோம். நம்மை மிக நெருங்கியிருக்கும் ஒரு ஆதாரப் புள்ளியான சந்திரன் பரந்த வானின் பின்புலத்தில் பூமியைச் சுற்றி வரும்போது 12 அமாவாசைகளும், 12 பவுர்ணமிகளும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக ஏற்படுவதை கணக்கில் கொண்டுதான் நம்முடைய பனிரெண்டு ராசிகள் உருவாகின. சந்திரனின் இருப்பை வைத்துதான் நட்சத்திரக் கூட்டங்களைக் கணிக்கிறோம் என்பதால், நிலவு பூமியைச் சுற்றி வரும் இருபத்தி ஏழரை நாட்கள் கொண்ட ஒரு முழுச் சுற்று 27 நட்சத்திர கூட்டங்களாகின.

ஜோதிடம் என்பது ஒளியைப் பற்றிச் சொல்வது என்பதை ஏற்கனவே விளக்கி இருக்கிறேன். ஒளியைப் போலவே கவனிக்கக் கூடிய இன்னொன்று, ஈர்ப்பு விசை எனப்படும் மகத்தான ஆற்றல். சூரியனின் ஈர்ப்பு விசையால் கிரகங்கள் அனைத்தும் கதிரவனைச் சுற்றி வருகின்றன. சூரியனைப் போலவே கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை இருக்கிறது. அதனால் நிலா போன்ற துணைக் கோள்கள் மூலக்கிரகங்களைச் சுற்றி வருகின்றன.

கதிரவனால் பிறந்த கிரகங்களின் ஈர்ப்பு விசையாகட்டும், அவற்றின் ஒளியாகட்டும் அனைத்திற்கும் மூல காரணம் சூரியன்தான். சூரிய ஒளி, அதனை பிரதிபலிக்கும் சந்திர ஒளி, மற்ற கிரகங்களின் ஒளி மற்றும் இவை அனைத்துக்குமான ஈர்ப்பு விசைகளும் இணைந்தே பூமியில் உயிரினத்தை உருவாக்கி அவற்றின் வாழ்க்கை முறைகளையும் நிர்ணயிக்கின்றன என்பதுதான் ஜோதிடம்.

உயிர் உருவாவதற்கு சூரிய ஒளியும், அதனை வாங்கிப் பிரதிபலிக்கும் சந்திரக் கதிர்களும், குரு கிரகத்திடம் உள்ள மீத்தேன் ஒளியும் அவசியமானது. குருவிடம் அதிகமாக உள்ள மீத்தேனால்தான் பூமியில் உயிரினங்கள் தோன்றின என்பதை நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. இதைத்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஜோதிடம் சந்திரனை மாதாகாரகன் என்றும், குருவை புத்திரகாரகன் என்று வகைப்படுத்திச் சொன்னது.

தற்போது நாம் பின்பற்றி வரும் பஞ்சாங்கங்களில் உள்ள ராகுகாலம், எமகண்டம் போன்றவைகள் ஒரு முழுமையான விஞ்ஞானம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? பலவிதமான வானியல் உண்மைகளே இன்றைய ஜோதிட சாஸ்திரம் கூறுகின்ற அடிப்படை விதிகள் ஆயின. பூமியின் சுழற்சியாலும், சந்திரனின் சுழற்சியாலும் மனிதனின் மேல் அவ்வப்போது ஏற்படும் எதிர்மறை சக்திகளையே ஜோதிடம் விஷகாலம், ராகு காலம், எமகண்டம் என்று பெயரிட்டுச் சொன்னது.

இந்திய ஜோதிடத்தின் இரண்டரை நாழிகை அளவுள்ள ஹோரை எனப்படும் ஒரு மணி நேரம் கொண்ட ஒரு காலஅளவுதான் இங்கிருந்து ஏற்றுமதியாகி ஆங்கிலத்தில் ஹவர் என்று சொல்லப்பட்டு நமக்கே திரும்பி வந்து இறக்குமதி ஆனது.