சனி, 30 மே, 2020

மரணத்துக்கு முன்

மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

இதைப் பற்றி யாரும் துல்லியமாக சொல்லிவிட முடியாது. விஞ்ஞானிகளால் இது தொடர்பான சில தகவல்களை சொல்ல முடியும் என்றாலும், இந்த கேள்விக்கான பதில் பிரம்ம ரகசியமாகவே உள்ளது.

இருந்தாலும், விஞ்ஞானிகளும் இதுபோன்ற சிக்கலான புதிர் நிறைந்த கேள்விகளுக்கான பதிலைத் தேடும் முயற்சிகளில் தொடர் ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.

அண்மையில் மரணம் தொடர்பாக சில விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகள் ஆச்சரியமான முடிவுகளை தந்துள்ளது. இந்த ஆய்வுகளில் நரம்பியல் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெர்லின் சாரிட் பல்கலைக்கழகம் மற்றும் ஓஹியோவில் உள்ள சின்சினாட்டி பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஜென்ஸ் ட்ரேயரின் தலைமையின் கீழ் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுக்காக, சில நோயாளிகளின் குடும்பத்தினரின் முன்னனுமதியை பெற்று, நோயாளிகளின் நரம்பு மண்டலத்தை விஞ்ஞானிகள் நெருக்கமாக கண்காணித்தார்கள்.

மருத்துவமனைபடத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY

சாலை விபத்துகளில் படுமோசமாக காயமடைந்தவர்கள், பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பால் (கார்டியாக் அரெஸ்ட்) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை விஞ்ஞானிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தினார்கள்.

மரணிக்கும் நேரத்தில் மனிதர்களின் மூளையும், விலங்கின் மூளையும் ஒன்றுபோல் செயல்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். மேலும், மூளையை 'ஏறத்தாழ'மறுசீரமைப்பு செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மரணத்தின் இறுதி கட்டத்தில் மூளையில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதோடு, மரணத்தின் இறுதித் தருணத்தில் இருக்கும் மனிதனை எப்படி காப்பாற்றலாம் என்பதும் இந்த ஆய்வின் முக்கியமான நோக்கங்களாக இருந்தது.

மூளைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த ஆய்வை விஞ்ஞானிகள் மேற்கொள்வதற்கு முன்னர், 'மூளை மரணம்' பற்றி நாம் அறிந்திருக்கும் செய்திகள் பெரும்பாலும் விலங்குகளின் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளிலிருந்து தெரிந்துக் கொண்டவை என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

மரணம் பற்றி நாம் ஏற்கனவே அறிந்தவை:

  • உடலின் ரத்த ஓட்டம் நின்றுபோய், மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வது குறையும்.
  • இந்த நிலையில், பெருமூளைச்சிரையில் ரத்த ஓட்டம் குறைவதால் (cerebrovascular ischemia), மூளையில் ரசாயன மாறுபாடுகள் ஏற்படுகின்றன. மேலும் மூளையின் 'மின் செயல்பாடு' (Electrical activity ) முற்றிலுமாக நின்றுபோய்விடும்.
  • மூளை அமைதியடையும் நடைமுறைக்கு காரணம், ஆற்றல் தேவைக்கான பசியுடன் இருக்கும் நரம்புகள், தங்களுக்கு தேவையான ஆற்றலைப் பெற்றாலும், மரணம் நெருங்குவதால் அந்த ஆற்றல் பயன்படுவதில்லை என்று நம்பப்படுகிறது.
  • அனைத்து முக்கிய அயனிகளும், மூளை செல்களிடம் இருந்து பிரிந்துவிடுகின்றன. இதனால் அடினோசின் டிரைஃபாஸ்பேட் கிடைப்பது பலவீனமாகிறது. இது ஒரு சிக்கலான கரிம வேதியியல் ஆகும். உடல் முழுவதிலும் ஆற்றலை சேமித்து வைப்பதும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதும் இதன் வேலை.
  • இதற்கு பிறகு திசுக்களை மீட்டெடுப்பது சாத்தியமற்றதாகிவிடும்.
ஆராய்ச்சிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி

ஆனால், ஜென்ஸ் ட்ரேயர் தலைமையிலான விஞ்ஞானிகளின் குழு மனிதர்களைப் பொறுத்தவரை இந்த செயல்முறையை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள விரும்பியது. அதனால் சில நோயாளிகளின் மூளைகளின் நரம்பியல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.

மின்முனையக் கீற்றுகளை (Electrode strips) பயன்படுத்தி இந்த நோயாளிகளை மயக்க நிலையில் இருந்து மீட்டெடுக்க முயற்சி செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

ஒன்பது நோயாளிகளில் எட்டு பேருடைய மூளையின் அணுக்கள், மரணத்தை தவிர்க்க முயற்சிப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். மூளையின் அணுக்களும், நரம்பணுக்களும் இதயத் துடிப்பு நின்ற பிறகும்கூட வேலை செய்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

மனிதர்களின் நரம்பு மண்டலத்தின் பிரதானமானது மனித மூளை. அதுமட்டுமல்ல, மனித உறுப்புகளில் சிக்கலானதும் மூளை என்பதும் நமக்கு தெரிந்ததே. உடலின் இயல்பான செயற்பாடுகளான மூச்சுவிடுதல், செரிமானம், இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற தன்னிச்சையான செயற்பாடுகளை மேற்கொள்ளும்.

மரணம்படத்தின் காப்புரிமைSPL

அதேபோல், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், திட்டமிடுதல் போன்ற செயற்பாடுகளையும் மனித மூளைதான் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.

உணர்வு உறுப்புகளுக்கும் செயல்படும் உறுப்புகளுக்கும் இடையே மின்வேதியல் மாற்றங்கள் மூலம் தூண்டல்களைக் கடத்தும் பணியை செய்வது நரம்பணுக்கள் (நியூரான்கள்). இந்த மின்வேதியல் மாற்றங்கள் நரம்பணுக்களின் உள்ளும் புறமும் நடைபெறும் சோடியம் மற்றும் பொட்டாசியம் அயனிகளின் இடம்பெயர்வால் நிகழ்கிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மின்வேதியல் சமநிலையை பராமரிப்பது ஒரு தொடர் முயற்சியாகும்.

दिमाग, दिलபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உடலின் அணுக்கள் மின்வேதியல் சமநிலையை பராமரிக்க ரத்த ஓட்டத்தைப் பயன்படுத்துகின்றன, மேலும் இதிலிருந்தே ஆக்ஸிஜன் மற்றும் ரசாயன ஆற்றலையும் எடுத்துக்கொள்கின்றன.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உடல் இறக்கும் போது, மூளையின் ரத்த ஓட்டம் நிறுத்தப்படும். அந்த சமயத்தில் செயலிழந்த நரம்புகள் தனது ஆற்றலை தக்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றன.

இது மெதுவாக பரவுவதற்கு பதில் மூளையில் ஒரே சமயத்தில் நடைபெறுவதால், இதை 'தவிர்க்க முடியாத மூளை அழுத்தம்' என்று கூறுகின்றனர். இந்த நிலை ஏற்படுத்தும் விளைவை எளிதாக புரிந்துக் கொள்வதற்காக, சுனாமியுடன் ஒப்பிட்டு, 'பெருமூளை சுனாமி' என்றும் அழைக்கின்றனர்.

மின்வேதியல் சமநிலை மாறுபடுவதால் மூளையில் உள்ள அணுக்கள் அழிக்கப்படும்போது, உடலில் இருந்து அதிக அளவிலான வெப்ப ஆற்றல் வெளியாகிறது. இதன்பிறகு மனித உடல் மரணிக்கிறது.

Blood testபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

'மரணமற்ற பெருவாழ்வு'

ஆனால், இந்த ஆய்வின்படி, இன்று மரணம் என்பது தவிர்க்க முடியாதது என்ற நிதர்சனமான உண்மை, எதிர்காலத்தில் மாறக்கூடும் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அப்போது 'மரணமற்ற பெருவாழ்வு' வாழும் சூழ்நிலையும் உருவாகலாம்.

ஜென்ஸ் ட்ரேயர் இவ்வாறு கூறுகிறார்: "சோடியம் அயனிகளின் ஊடுருவலால், நரம்பு மண்டலத்தின் பிளாஸ்மா சவ்வின் உள்ளேயும் வெளியேயும் இடையே ஏற்படும் ஆற்றல் வேறுபாட்டால் ஏற்படும் இழப்பு, அணுக்களின் உருமாற்றத்தை தொடங்குகிறது. ஆனால் இது மரணம் அல்ல. ஏனெனில் மீண்டும் உடலில் மின்முனைவை அளித்து, அதை மீட்டெடுக்க முடியும். இதனால் மரணத்தில் இருந்து மனிதனை மீட்டெடுத்து, இறப்பை தவிர்க்க முடியும்."

எனினும், இறப்பை தவிர்ப்பதற்கான நடைமுறைகளை கண்டறிய இன்னும் நிறைய ஆராய்ச்சிகளை செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கான ஆராய்ச்சியும், மரணத்தை போன்றே சிக்கலானது என்று கூறுகிறார் ஜென்ஸ் ட்ரேயர். அதாவது, மரணம் தொடர்புடைய கேள்விகளுக்கு பதில் கிடைப்பதும் எளிதானதில்லை.

ஆனால், முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்ற பழமொழியை காலம் நிரூபித்து வருவதைப் போன்றே, மரணம் என்ற ஒன்றும் மனிதனுக்கு இல்லை என்ற புதுமொழியை உருவாக்க ஆராய்ச்சிகள் தொடரும். இந்த ஆராய்ச்சி மனிதனின் மரணத்தை மரணிக்கச் செய்யும் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது.

புதன், 27 மே, 2020

ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம் தெரியுமா...?

ருத்ராட்சத்தின் வடிவம், அதில் உள்ள துளை அனைத்தும் இயற்கையானது. பார்க்கும்பொழுது எந்த வித செயல்படும் இல்லாத பொருளாக தெரிந்தாலும்  ருத்ராட்சத்திற்குள் புதைந்திருக்கும் ஆற்றல் விவரிக்க முடியாத ஒன்று.

சிறந்த ருத்ராட்சத்தை தேர்ந்தெடுத்து, ஆன்மீக ஆற்றல் கொண்டவர்களிடம் சக்தியூட்டப் பணிந்தோம் என்றால் அத்தகைய ருத்ராட்சம் பிரஞ்சத்தின் சிறு மாதிரி வடிவமாகி உங்களை பிரபஞ்சத்தை கையில் வைத்திருப்பவராக மாற்றும்.
 
ருத்ரன் எனும் சிவ அம்சம் அதிக ஆற்றல் வாய்ந்த, வேகமான ஆன்ம உணர்வை ஊட்டும் நிலையாகும். தவநிலையிலிருந்து வெளிப்பட்டவுடன் அதிக வேகமான இயக்க நிலைக்கு சிவன் மாற்றம்மடையும் தன்மை ருத்ராம்சம் என அழைக்கப்படும்.
 
சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராட்சம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். சூரியன் எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராட்சம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது.
 
ருத்ராட்சத்திற்கு என சில இயல்பு குணங்கள் உண்டு. சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சம் அணிந்திருப்பவர்களை மிருகம் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட உண்மை. இதனால்தான் காடுகளில் தவம்செய்ய செல்லும் ரிஷிகள் தங்களின் உடல் முழுவதும் ருத்ராட்சத்தை அணிந்தார்கள்.
 
ருத்ராட்சம் என்பது நமக்கு நிகரான ஒர் உயிரின் வடிவம் என அறிந்து கொள்வது அவசியம்.நீங்கள் ருத்ராட்சத்தை தொடர்ந்து அணிபவராக இருந்தால் உங்களுக்கு  ஏற்படும் சுக-துக்கங்களின் வெளிப்பாடு ருத்ராட்சத்திலும் தெரியும். உங்களின் உடலில் அதிகமான உடலுக்கு ஒத்துக்கொள்ளாத வேதிப்பொருட்கள் இருந்தால் ருத்ராட்சம் தனது இயல்பு நிறத்தை மற்றிக்கொள்ளும். விஷபொருட்கள் உடலில் கலந்தால் ருத்ராட்சம் அந்த விஷப்பொருட்களைப் பிரித்தெடுத்து தனது  வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்.
 
ருத்ராட்சம் பயன்படுத்த எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. குறிப்பிட்ட ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது. ஆண், பெண் என இருவரும் பயன்படுத்தலாம். வயது  மற்றும் இதர விசயங்கள் தடையாக இருக்காது. ஆனால் ஒழுக்கமும் தூய்மையும் ருத்ராட்சத்திற்கு முக்கியமான ஒன்று.

இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன் கிடைக்கும்....?

நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், எமக்கு பிடித்தவர்கள், பிரபலங்கள் போன்றோர் இறந்தால், சில நேரங்களில் எமது கனவில் அவர்களின் உருவம் வரக்கூடும். அவ்வாறு வருவதால் ஏற்படும் பலன்கள் பற்றி ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
நமக்கு வேண்டப்பட்ட யாராவது இறந்துவிட்டது போல கனவு வந்தால், துன்பங்கள் விலக போகிறது என்று அர்த்தம். இறந்து போனவர்களை  தூக்கி செல்வது போல கனவு வந்தால் நன்மை உண்டு.
 
இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல. கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது. இறந்துபோன தாய் மற்றும் தந்தையை கனவில் கண்டால் கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தார்கள் என்று பொருள்.
 
இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.
 
ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.
 
இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம். வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில்  வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.

சனி, 16 மே, 2020

அஷ்ட லட்சுமிகளை பூசை செய்வதால் ஏற்படும் பலன்

லட்சுமிகள் எட்டு, அதனையே “அஷ்ட லட்சுமிகள்” என்று அழைக்கின்றோம். செல்வம், ஞானம், உணவு, மனவுறுதி, புகழ், வீரம், நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் இவையே அந்த அஷ்ட ஐஸ்வரியங்களாகும்.

இந்த அஷ்ட ஐஸ்வரியங்களையும் ஒருவனால் பெறமுடியும். அதற்கு அந்தத் திருமகளின் அருட்கடாட்சம் இருக்கவேண்டும். பக்தியுடன் தெய்வீகமாக பெண்கள்  திகழும் இல்லத்தில் திருமகள் நிரந்திரமாக குடிகொண்டு வசிப்பாள்.
தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நம் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கும். இல்லங்களில் செல்வம் பெருகும்.

1. ஆதிலட்சுமி - நோய்நொடி அற்ற உடல்நலம் பெற்று நீண்டகாலம் உயிர் வாழ்வதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.

2. தானியலட்சுமி - உணவு தானியங்கள் தாராளமாகக் கிடைத்து பசிப்பிணி நீங்குவதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.

3. தைரியலட்சுமி - வாழ்வில் ஏற்படும் எத்தகையை இடர்ப்பாடுகளையும் எதிர்கொண்டு சமாளிக்க தைரியம் பெறுதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.

4. கஜலட்சுமி - வாழ்வில் அனைத்து நற்பாக்கியங்களையும் பெறுவதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.

5. சந்தானலட்சுமி - குழந்தைப்பேறு புத்திர பாக்கியம் சித்திப்பதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.

6. விஜயலட்சுமி - கைக்கொண்ட நற்காரியங்களில் வெற்றிப் பெறுதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.

7. விதயாலட்சுமி - கல்வியும், அறிவும், ஞானமும் பெறுதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.

8. தனலட்சுமி - செல்வம் பெருகி பன்மடங்காவதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.


வெள்ளி, 15 மே, 2020

மரணத்திற்குப் பின் உயிர்கள் கஷ்டப்படாம எமலோகம் போகமுடியுமா


மரணத்திற்குப் பின் உயிர்கள் கஷ்டப்படாம எமலோகம் போகமுடியுமா 

உயிர் உடலை விட்டு பிரிவது மரணம். அந்த மரணம் சிலருக்கு இயற்கையாக அமையும். வயது மூப்பு ஏற்பட்டு மரணமடைவார்கள். சிலருக்கு நோயினால் மரணம் வரும். சிலரோ விபத்துக்கள் மூலம் மரணமடைவார்கள். இயற்கையாக மரணமடைந்தவர்களில் சிலர் முக்தியடைந்து இறைவனின் பாதத்தை அடைவார்கள். சிலரது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப தண்டனைகள் கிடைக்கும்

.இறந்த திதி, நட்சத்திரங்களின்படி அந்த உயிர்கள் எமலோகத்தை அடைகின்றன. ஒருவர் பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறக்கும் போது திதியையும் நாம் நினைவில் வைத்துக்கொள்வோம். நம் ராசி பார்த்து கோவில்களில் அர்ச்சனை செய்வோம். ஆனால் இறக்கும் போது திதி மட்டுமே பார்த்தால் மட்டுமே போதாது நட்சத்திரமும் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் மரணமடைந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
27 நட்சத்திரங்களில் தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ரோகிணி,கார்த்திகை, உத்திரம்,மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிபடுத்துகின்றது.
தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களை செய்யாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்சத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி ஆறு மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள். எனவேதான் கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். நல்ல முறையில் மரணமடைந்தவர்கள் பற்றியும் தனிஷ்டா பஞ்சமியில் மரணமடைந்தவர்கள் படும் கஷ்டங்களையும் பார்க்கலாம்.

முக்தியடைந்த உயிர்கள்

வைகுண்டம் செல்பவர்கள்
மரணத்திற்குப் பிறகு முக்தி பெற்றவர்கள் கபாலம் மூலம் உயிர் பிரிந்து சூரியன் வழியாக இறைவனின் பாதங்களை அடைகின்றன. இதனைத்தான் கயிலாய பிராப்தி, வைகுண்ட பிராப்தி என்பார்கள். முக்தி நிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன. மன்னிக்கத் தகுந்த, மிகக் கொடிய பாவங்களைச் செய்யாதவர்களின் உயிர்கள் யம தூதர்களால் நேரடியாகவே கொண்டு செல்லப்படுகின்றன. பூமிக்கும் எமலோகத்திற்கும் இடையே 27 நட்சத்திரங்களின் வழியாகச் செல்லும் 27 பாதைகள் உள்ளன. இதில் அடைப்பு ஏற்படுத்தும் 13 நட்சத்திரங்களின் பாதைகளைத் தவிர மற்ற 14 நட்சத்திரங்களின் வழியாகச் செல்பவர்கள் விரைவாக எமப்பட்டினத்தை அடைந்து விடுவார்கள்.

இறந்தவர்களுக்கு பிண்டம்

எமலோகத்தில் கணக்கு
அங்கு எமன் அவ்வுயிர்களுக்கு சித்திரகுப்தன் மூலம் பாவ, புண்ணியங்களை கணக்கு பார்த்து அவற்றைப்பற்றி பற்றி உபதேசித்து பிறகு யம தூதர்களை அழைத்து மீண்டும் கொண்டு போய் அவர்கள் உடலிருக்கும் இடத்தில் விடச் சொல்லுவார். உடலானது மாந்தியால் சவமாக மாற்றப்பட்டு விடும். அங்கு வந்து சேரும் உயிரானது தங்கள் உறவினர்கள் அந்த உடலுக்கு நடக்கும் சடங்குகளையும் பார்த்துக் கொண்டே இருக்கும். பிள்ளைகள் 12 தினங்களுக்கு அன்புடன் தரும் பிண்டங்களை ஏற்றுக் கொண்டேயிருக்கும். அதற்குப் பிறகு மீண்டும் அவ்வுயிரை யமதூதர்கள் கவர்ந்து சென்று எமனின் முன் நிறுத்துவார்கள். அங்கு அவர்களின் மறுபிறவி பற்றி தீர்மானிக்கப்பட்டு, அவ்வுயிர்கள் சந்திர மண்டலத்திற்கு வரும்.
எமலோகம் செல்ல தடை
தடையான நட்சத்திரங்கள்

அடைப்பு ஏற்படுத்தும் 13 நட்சத்திரங்களின் வழியாக எமப்பட்டினம் செல்ல தூரமும், காலமும் அதிகமாகும். அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வழியாகச் செல்ல ஆறு மாதங்கள் அதிகமாகும். ரோகிணி வழியாகச் செல்ல நான்கு மாதங்கள் அதிகமாகும். கார்த்திகை, உத்திரம் என்ற இரண்டு நட்சத்திரங்கள் வழியாகச் செல்ல மூன்று மாதங்கள் அதிகமாகும். மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வழியாகச் செல்ல மூன்று மாதங்கள் அதிகமாகும். மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வழியாகச் செல்ல மூன்று மாதங்கள் அதிகமாகும். மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வழியாகச் செல்ல இரண்டு மாதங்கள் அதிகமாகும்.

கருடபுராணத்தில் விளக்கம் 

உயிர்களுக்கு பிண்டம் அடைப்பு நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு கால தாமதம் ஆவதற்கான காரணம் என்ன என்பதற்கான தெளிவான விளக்கம் கருட புராணத்தில் உள்ளது. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரத்தில் இறப்பதே தண்டனையாக அமைகிறது. இவ்வுயிர்கள் எமலோகம் செல்வதற்கு முன் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு ஸ்தூல சரீரம் வழங்கப்படும். அந்த உடம்பை பெற்ற தனிஷ்டா பஞ்சமி உயிர்கள் நாள் ஒன்றுக்கு நூற்றுக் கணக்கான காத தூரம் கல்லிலும், முள்ளிலும், காட்டுப் பாதையிலும் நடந்து செல்ல வேண்டும். அவை உடம்பை ரணமாக்கி விடும். தண்ணீரும், உணவும் கிடைக்காது. வெளிச்சமே இருக்காது. இதனால்தான் அடைப்பு காலங்கள் முழுவதும் தினந்தோறும் உணவும், தண்ணீரும், விளக்கும் வைத்து கற்பூரம் ஏற்றி, அவை அந்த உயிர்களைப் போய்ச் சேர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறார்கள். இவர்களுக்குப் போடும் பிண்டங்களைத் தட்டிப் பறிக்க தலைக்கு மேல் பைசாசங்கள் வேறு பறந்து கொண்டேயிருக்கும். நடக்க முடியாமல் துன்பப்படும் பொழுது கூட யம கிங்கரர்கள் அடித்து, உதைத்து நடக்க வைப்பார்கள். என்ன பாவம் செய்ததற்காக இப்படி உன்னைத் துன்புறுத்துகிறோம் என்று சொல்லிச் சொல்லி அடிப்பார்கள்.

பரிகாரம் என்ன

 தீபம் ஏற்றுங்கள் தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்களை கொண்டு செல்ல வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி,தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அணையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த அதற்கான பயிற்சி பெற்ற பிரமாணர்களைக் கொண்டு செய்ய வேண்டும். மறு ஜென்மம் மறுபிறவி ஒருவர் தற்பொழுது பிறந்துள்ள நட்சத்திரத்தை வைத்தே அவர் சென்ற பிறவியில் அடைப்புள்ள நட்சத்திரத்தில் இறந்தவரா இல்லையா என்று கண்டுபிடிக்கலாம். சென்ற பிறவியில் ஒருவர் இறக்கும் பொழுது எந்த நட்சத்திரத்தில் சந்திரன் எத்தனை நாழிகை சஞ்சாரம் செய்து கொண்டிருந்தாரோ, அதே நட்சத்திரத்தில் மீதமுள்ள நாழிகையில் மறுபிறவியில் அவதரிப்பார். இதைத்தான் ஜாதகத்தில் திசை கணக்கிடும் பொழுது கர்ப்ப செல் நீக்கி என்று  போடுவார்கள் 





தனிஷ்டா பஞ்சமி


இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் தெரிவித்து உள்ளனர்.

நட்சத்திரங்கள் 13 என்கிறார்கள். அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு. என்பார்கள் ஆச்சார்யர்கள்.

ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு உண்டு. கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு இருக்கிறது.




மிருகசீருஷம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியதும் அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன.

அது என்ன அடைப்பு? - அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்று அழைப்பதும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்!

தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவி ரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராட்சத வடிவிலோ தோன்றி பயமுறுத்தி, 6 மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.

முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.

கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள் என்று அந்தக் காலம் குறித்து விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக, மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள் என்பதாக ஐதீகம்!

தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகிறது.

இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி, தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ‘’இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும்’’ என்று வேண்டிக் கொண்டு, கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அணையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து நிறைவு செய்யலாம். பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த ஆச்சார்யர்களைக் கொண்டு செய்து பூர்த்தி செய்யலாம்

வியாழன், 14 மே, 2020

இன்று தேய்பிறை அஷ்டமி! பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு தரும் அஷ்ட பைரவரை முறைப்படி எப்படி வழிபடுவது?

பைரவர் என்றால் பயத்தை போக்குபவர், பாவத்தை போக்குபவர் என்று பொருள். பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும்.


01. ஓம் பைரவனே போற்றி

02. ஓம் பயநாசகனே போற்றி

03. ஓம் அஷ்டரூபனே போற்றி

04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி

05. ஓம் அயன்குருவே போற்றி

06. ஓம் அறக்காவலனே போற்றி

07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி

08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி

09. ஓம் அற்புதனே போற்றி

10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி

12. ஓம் ஆலயக்காவலனே போற்றி

13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி

14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி

15. ஓம் உக்ர பைரவனே போற்றி

16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி

17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி

18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி

19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி

20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

21. ஓம் எல்லை தேவனே போற்றி

22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி

23. ஓம் கபாலதாரியே போற்றி

24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி

25. ஓம் கர்வ பங்கனே போற்றி

26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி

27. ஓம் கதாயுதனே போற்றி

28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி

29. ஓம் கருமேக நிறனே போற்றி

30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி

31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி

32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி

33. ஓம் கால பைரவனே போற்றி

34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி

35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி

36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி

37. ஓம் காசிநாதனே போற்றி

38. ஓம் காவல்தெய்வமே போற்றி

39. ஓம் கிரோத பைரவனே போற்றி

40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

41. ஓம் சண்ட பைரவனே போற்றி

42. ஓம் சட்டை நாதனே போற்றி

43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி

44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி

45. ஓம் சிவத்தோன்றலே போற்றி

46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி

47. ஓம் சிக்ஷகனே போற்றி

48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி

49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி

50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி

51. ஓம் சிவ அம்சனே போற்றி

52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி

53. ஓம் சூலதாரியே போற்றி

54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி

55. ஓம் செம்மேனியனே போற்றி

56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி

57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி

58. ஓம் தலங்களின் காவலனே போற்றி

59. ஓம் தீது அழிப்பவனே போற்றி

60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி

61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி

62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி

63. ஓம் நவரச ரூபனே போற்றி

64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி

65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி

66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி

67. ஓம் நாய் வாகனனே போற்றி

68. ஓம் நாடியருள்வோனே போற்றி

69. ஓம் நிமலனே போற்றி

70. ஓம் நிர்வாணனே போற்றி

71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி

72. ஓம் நின்றருள்வோனே போற்றி

73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி

74. ஓம் பகையளிப்பவனே போற்றி

75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி

76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி

77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி

78. ஓம் பால பைரவனே போற்றி

79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி

80. ஓம் பிரளயகாலனே போற்றி

81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி

82. ஓம் பூஷண பைரவனே போற்றி

83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி

84. ஓம் பெரியவனே போற்றி

85. ஓம் பைராகியர் நாதனே போற்றி

86. ஓம் மல நாசகனே போற்றி

87. ஓம் மகோதரனே போற்றி

88. ஓம் மகா பைரவனே போற்றி

89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி

90. ஓம் மகா குண்டலனே போற்றி

91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி

92. ஓம் முக்கண்ணனே போற்றி

93. ஓம் முக்தியருள்வோனே போற்றி

94. ஓம் முனீஸ்வரனே போற்றி

95. ஓம் மூலமூர்த்தியே போற்றி

96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி

97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி

98. ஓம் ருத்ரனே போற்றி

99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி

100. ஓம் வடுக பைரவனே போற்றி

101. ஓம் வடுகூர் நாதனே போற்றி

102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி

103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி

104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி

105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி

106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி

107. ஓம் விபீஷண பைரவனே போற்றி

108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!
இந்த துதியை பைரவர் சன்னதி முன்பு அமர்ந்து இந்த 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். பைரவருக்கு நைவேத்தியமாய் உளுந்து வடை, சிறுபருப்பு பாயாசம் வைத்து வழிப்பட்டு, தானம் செய்ய நற்பலன் பெறலாம்,.
நம்புங்கள்!! நல்லதே நடக்கும்

வியாழன், 7 மார்ச், 2019

ருத்ராட்சம்

ருத்ரன் என்றால் சிவபெருமான் அட்சம் என்றால் கண்கள் என்று அர்த்தம். சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியதால் அதற்கு ‘ருத்ராட்சம்’ என்று பெயர். நல்ல ருத்ராட்சத்தை உரைத்துப்பார்த்தால் பசும்பொன்னின் மாற்று இருக்கும் என்று சொல்வார்கள்.

ருத்ராட்சத்துக்கு ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்கு மணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமணி, கண்டிகை, கண்டி, நாயகன் என்று பல பெயர்கள் உண்டு பல ருத்ராட்சங்கள் ஓன்று சேர்ந்த மாலையை ‘கண்டிகை’ என்பார்கள்.

சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது. சிவனை வணங்கும் போது, அவருக்காக பூஜை, தியானம், ஜெபம் செய்யும் போது, சிவபுராணம் படிக்கும் போது மட்டுமே அணிய வேண்டும். சமய சொற்பொழிவுகள் கேட்கும் போது ருத்ராட்சைகளை அணியலாம். 

தூங்கும் போது, உடல், மனம், வீடு, தூய்மை, இல்லாத போது, நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, குடும்பத்தில் பிறப்பு- இறப்பு நிகழும் போது ருத்ராட்சையை அணியக்கூடாது. சிவனும், பார்வதியும் ஒன்று சேர்ந்து இருப்பது போல காணப்படும். ருத்ராட்சத்துக்கு கவுரி சங்கரம் என்று பெயர் இது மிக உயர்ந்தது.

மோட்சம் வேண்டுபவர்கள் ருத்ராட்சங்களை மேல்நோக்கி உருட்டி வழிபாடு செய்ய வேண்டும். போகத்தை விரும்புபவர்கள் ருத்ராட்சங்களை கீழ்நோக்கி தள்ளி ஜெபிக்க வேண்டும்.

ருத்ராட்சையை தூய்மையுடன், உரிய காலங்களில் முறைப்படி அணிந்து கொள்பவர்களை தீமையோ, நோய்களோ அணுகாது.