செவ்வாய், 1 மே, 2018

கோடை காலத்தில் கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள்...!
👓 கோடையினால் நமது உறுப்புகளில் மிகவும் முக்கியமானதாக விளங்கும் கண்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

👓 அதிக வெப்பத்தால் நம் உடலில் உள்ள நீர்ச்சத்து அதிகம் உறிஞ்சப்படுகிறது. இதனால் கண்களில் வறட்சித்தன்மையும், எரிச்சலும் ஏற்படுகிறது.

👓 கணினியில் பணிபுரிபவர்களுக்கு கண் பாதிப்புகள் ஏற்படுவது இயல்புதான் என்றாலும் கோடையில் அந்த பாதிப்பு அதிகமாகவே இருக்கும்.

👓 மேலும், நாம் அதிக அளவில் குளிரூட்டிகளை  பயன்படுத்தும்போது அதில் இருந்து வரும் குளிர்ச்சியான காற்று நேரடியாக நம் கண்களில் படும்பொழுது கண்களில் வறட்சி மற்றும் எரிச்சல் உண்டாகும்.

👓 கோடை காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வைரஸ் மற்றும் வீக்கம், கண்கள் சிவத்தல், கண்களில் எரிச்சல், நீர் வடிதல், கண்களில் அரிப்பு போன்றவை ஏற்படுகிறது.

கண்களை பாதுகாக்க :

👓 அதிக அளவு நீரை பருகுதல் வேண்டும்

👓 கண்ணிற்கு குளிர்ச்சியான கண்ணாடிகளை அணிதல்

👓 அதிகளவு பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் எடுத்துக் கொள்ளுதல்

👓 காற்று கண்களில் நேரடியாக படாதவாறு பார்த்துக் கொள்ளுதல்

👓 கண் பயிற்சிகள் மேற்கொள்ளுதல், அடிக்கடி கண்களை நீரால் கழுவுதல்

👓 வெள்ளரி துண்டுகளை கண்களில் வைத்தல்

👓 தலை சுத்தமாக இல்லையென்றாலும் கண் நோய்கள் வரும். எனவே, கோடை காலத்தில் வாரம் மூன்றுநாள் தலைக்கு குளிக்கலாம்.

👓 அவ்வப்போது உள்ளங்கைகளை இணைத்து தேய்த்து இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது இதமான சூட்டைக் கண்களுக்கு தரும்.

👓 கண்களை பாதுகாக்க ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

👓 அலுவலகம் செல்லும் போது கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிட கண்களுக்கு குளுமை பரவும்.

👓 கோடை காலத்தில் தினசரி 6 முதல் 8 மணிநேரம் உறங்குவது கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

👓 மேலும், கண்களில் ஏற்படும் மற்ற பார்வை குறைபாடுகளுக்கும், கண்நோய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும், அருகில் உள்ள கண் மருத்துவமனையை நாடுவதே சிறந்த வழியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக