வியாழன், 9 ஆகஸ்ட், 2018


பித்ரு தோஷம்னா என்ன?... உங்க குடும்பத்துக்கு பித்ரு தோஷம் இருக்கான்னு எப்படி கண்டுபிடிக்கிறது?


   

பித்ரு தோஷங்கள் குடும்பத்தில் இருந்தால், குடும்பத்தில் சின்ன சின்ன மனக் கசப்புகள் உண்டாகும். குடும்பத்தில் பிரச்னைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதங்கள் உண்டாகும்.

பொருளாதார கஷ்டங்கள் ஏற்படும். சின்ன சின்ன விபத்துக்கள் ஆகியவை உண்டாகும். இதுபோன்ற எதிர்மறை ஆற்றல்கள் தாக்காமல் இருக்க என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம் என்று பார்ப்போம்.
பித்ரு தோஷங்கள்
ஒரு குடும்பத்தில் எதிர்பாராத அகால மரணங்கள் பலமுறை ஏற்பட்டால் பித்ரு தோஷம் ஏற்பட்டிருக்கும். இறந்த தன் குடும்பத்தினருக்கு தண்ணீர், உணவு கொடுக்காமல் போனாலோ, ஆன்மீக சம்பிரதாயங்களின் போது அவர்களை நினைக்காவிட்டாலோ இவ்வாறு ஏற்படுகிறது. ஆன்மீக சம்பிரதாயங்களை செய்யாவிட்டாலோ, காகத்தை கொன்றாலோ, கருக்கலைப்பு செய்தாலோ பித்ரு தோஷம் ஏற்படுகிறது. இங்கே சில பரிகாரங்களைப் பார்க்கலாம்.
பரிகாரங்கள்
நீங்கள் உங்கள் முன்னோர்களுக்கு பிண்டம் கொடுத்தல், அவர்களை வழிபடல், தர்ப்பணம் செய்தல் போன்றவற்றை செய்தால் அவர்கள் திருப்தியடைவர். க்ருஷ்ண பட்சத்தில் வரும் அஸ்வினி மாதத்தில் எள், தர்ப்பைப் புல், பூக்கள், பச்சரிசி, கங்கை நீர் கொண்டு பித்ரு கடன்களை செய்ய வேண்டும். பிறகு மலர்கள், ஆடைகள், பழங்கள், நன்கொடை போன்றவற்றை பித்ரு கடன் செய்ய உதவிய பிராமணர்களுக்கு கொடுக்க வேண்டும்.

பித்ரு பூஜை
உங்கள் முன்னோர் இறந்த திதி, நாள் தெரியவில்லை என்றால் நீங்கள் அமாவாசையன்று இதைச் செய்யலாம். அரச மரத்தை வணங்கினாலும் பித்ரு தோஷம் நீங்கும். திங்கட்கிழமை வரும் அமாவாசை அன்று பாயாசம் செய்து முன்னோர்க்குப் படைத்தாலும் பித்ரு தோஷம் நீங்கும். ஒவ்வொரு அமாவாசையன்றும் பிராமணர்களுக்கு ஆடை தானம் செய்தால் பித்ரு தோஷத்தால் ஏற்படும் எதிர்மறைப் பலன்களை நீக்கிவிடும்.
வழிபாடு
ஒவ்வொரு அமாவாசையன்றும் தெற்கு திசை நோக்கி அமர்ந்து பசுவின் சாணத்தில் செய்யப்படும் எருவை உபயோகித்து தீ மூட்டி அதில் பாயசம் படைத்து, நீங்கள் செய்த தவறுகளுக்கும், கர்மாக்களுக்கும் மனமுவந்து மன்னிப்புக் கேட்டு வழிபடவேண்டும். இதுவும் ஒரு நல்ல பரிகாரம்.
சூரிய தோஷம்
உங்கள் தந்தைக்கும், குடும்பத்தில் உள்ள முன்னோர்க்கும் உரிய மரியாதை செய்து, அவர்களின் ஆசியைப் பெற வேண்டும். இது உங்கள் ஜாதகத்தில் உள்ள சூரிய தோஷத்தைப் போக்கும்.
மாணிக்கக்கல்
சூரிய உதயத்தின் போது ஒரு பாயை விரித்து, அதில் அமர்ந்து சூரியனைப் பார்த்து காயத்திரி மந்திரத்தை ஜபித்து ஜாதகத்தில் சூரியன் உள்ள இடத்தின் பலனை மேம்படுத்திக் கொள்ளலாம். மாணிக்கக் கல்லை அணிந்து கொண்டாலும் சூரியனின் நற்பலன்களை பெறலாம். ஆனால் ஜாதகத்தில் சூரியன் உள்ள இடத்தை பொறுத்து மாறுபடலாம்.

சிவன்

சிவனுக்கு படைக்கக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா...?

 
தாழம்பூ :
🌟 ஒருமுறை பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் யார் பெரியவர் என்ற சண்டை எழுந்தபோது, சிவன் ஜோதிலிங்கமாய் தோன்றி, தன்னுடைய முதலான தலையை அல்லது முடிவான காலை யார் கண்டுபிடிக்கிறார்களோ அவரே பெரியவர் என்று சொல்கிறார். அதன்படி விஷ்ணு காலை நோக்கியும், பிரம்மா தலையையும் நோக்கி தேடிச் செல்லும்போது, இருவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை.

🌟 இந்நிலையில் ஆதியை தேடி மேலே சென்று கொண்டிருந்த பிரம்ம தேவன் தன்னுடன் சேர்ந்து கொண்டு பொய் சொல்லுமாறு தாழம்பூவை கேட்டுக் கொண்டார். இருவரும் திரும்பியவுடன், விஷ்ணு தேவன் தன் தோல்வியை ஒத்துக்கொண்டார். ஆனால், பிரம்ம தேவனோ ஆதியை கண்டுபிடித்துவிட்டதாக கூறினார். அவருக்கு சாதகமாக தாழம்பூவும் பொய் சொல்லியது.

🌟 இந்த பொய்யினால் கோபம் கொண்ட சிவபெருமான், பிரம்ம தேவனின் ஒரு தலையை வெட்டினார். அவரை யாரும் வணங்க மாட்டார்கள் என சாபமிட்டார். சிவலிங்கத்தை வழிபட இனி இந்த மலரை யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என தாழம்பூவை பார்த்து சபித்தார். அதிலிருந்து தாழம்பூவினால் சிவனுக்கு பூஜை செய்வதில்லை.

துளசி :
🌟 எந்த கடவுளாலும் தன்னை வெல்ல முடியாதபடி ஒரு வரத்தை விஷ்ணுவிடமிருந்து ஜலந்தர் என்னும் அசுரன் பெற்றான். அவனுடைய அட்டூழியத்தை தாங்க முடியாமல் சிவன் அவனை கொன்று சாம்பலாக்கினார். ஜலந்தரின் மனைவியான துளசி தன் கணவனின் மரணத்தால் ஏற்பட்ட வருத்தத்தாலும், ஏமாற்றப்பட்ட கோபத்தாலும் இனி சிவபெருமானை இறைதன்மையுள்ள தன் இலைகளை கொண்டு யாரும் வழிபடக்கூடாது என சாபமிட்டார். இதன் காரணமாக துளசியை சிவனுக்கு படைப்பதில்லை.

தேங்காய் நீர் :
🌟 சிவபெருமானுக்கு தேங்காய்களை படைத்தாலும், தேங்காய் தண்ணீரை கொண்டு எப்போதும் சிவபெருமானை வழிபடக்கூடாது. சிவலிங்கத்தின் மீது படைக்கப்படும் அனைத்தும் நிர்மால்யாவாக கருதப்படுவதால், அதனை அதற்கு பிறகு உண்ணவோ பருகவோ கூடாது. தேங்காய் தண்ணீரை கடவுளுக்கு படைத்தால், அதனை கட்டாயமாக பருக வேண்டும் என்பதால், சிவலிங்கத்தின் மீது அதனைப் படைப்பதில்லை.

மஞ்சள் :
🌟 புனிதமான மஞ்சள் பொடியை எப்போதும் சிவலிங்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் மஞ்சள் என்பது பெண்களின் அழகை மேம்படுத்த பயன்படுத்தப்படுவது. சிவலிங்கம் என்பது சிவனின் அடையாளம் என்பதால் அதையும் பயன்படுத்தக்கூடாது.

குங்குமம் :
🌟 திருமணமான பெண்கள் குங்குமத்தை புனிதமாக பார்க்கின்றனர். தன் கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுமென அதனை பெண்கள் நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். ஆனால், சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்பதால், குங்குமத்தை கொண்டு அவருடைய சின்னத்தை வழிபடுவது புனிதமற்றதாக கருதப்படுகிறது.

குரு பகவான் மந்திரம்:

ஓம் ஸுராச்சார்ய வித்மஹே ஸுராஸேரேஷ்டாய
தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்
பிரதோஷம் என்பது சிவபெருமானுக்குரிய வழிபாட்டு தினமாகும். அதுவும் ஆடி மாத பிரதோஷம் அதிக ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். பிரதோஷம் வாரத்தின் மற்ற தினங்களை போல வியாழக்கிழமையில் வருவது சிறப்பானதாகும். இத்தினத்தில் மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோவிலுக்கு சென்று சிவ பெருமானையும், பார்வதியையும் வழிபட்ட பின்பு நவகிரகங்கள் சந்நிதியில் குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து, விளக்கேற்றி வழிபட உங்களின் எதிர்காலம் குறித்த பயங்கள் நீங்கும். உடல் மற்றும் மனம் திடம் பெரும். நீங்கள் விரும்பிய காரியங்கள் நிறைவேற தொடங்கும்.
Sivan temple
பிரதோஷ தினத்தில் நந்தி பகவான் தனது குரு மற்றும் இறைவனான சிவ பெருமானை பூஜித்து வணங்குகிறார். வியாழனன்று வரும் பிரதோஷ தினத்தில் நவகிரகங்களில் முழு சுப கிரகமான தேவர்களுக்கு குருவாகிய பிரகஸ்பதி அல்லது குரு பகவானை வழிபடுவதால் நமக்கும் குருவருள் கிடைத்து அவரால் பற்பல நன்மைகள் ஏற்பட வழி பிறக்கும்.