புதன், 27 பிப்ரவரி, 2019

ராகு கேது தோசம் நீங்க

தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வருவதால் ராகு – கேது போன்ற கிரகங்களால் ஏற்படும் நாக, சர்ப்ப தோஷங்கள் நீங்கும். ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியன்று, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த பிரதோஷ வேளையில் மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள்ளாக நந்தி மற்றும் சிவனுக்கு வழிபாடு நடைபெறும். இந்த வழிபாட்டின் போது நந்தி பகவான் மற்றும் சிவபெருமானை வழிபடுவதால் ராகு – கேதுவால் ஏற்படும் நாக தோஷத்தை போக்க இது சிறந்த பரிகாரமாக இருக்கிறது.
ragu-parigaram
பொருள் வசதி மிக்கவர்கள் தங்கம் அல்லது வெள்ளியில் சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாட்கள் பாலாபிஷேகம் செய்து, பூஜித்து பிறகு வேதமறிந்த அந்தணர் ஒருவருக்கு புது வேட்டி, துண்டு, தாம்பூலம் தட்சணை ஆகியவற்றோடு நாக விக்கிரகத்தையும் தானம் செய்வதால் நாக தோஷம் நீங்கி நாக சாந்தி ஏற்படும்.
rahu-ketu
Advertisement
ஜாதகத்தில் ராகு, கேது கிரகங்களால் தோஷம் ஏற்பட்டு பருவமடைந்தும் நீண்ட காலம் திருமணம் தாமதமாகும் பெண்கள், அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழே இருக்கும் நாக சிலைக்கு செவ்வாய்க் கிழமைகளில் பால் ஊற்றி அபிஷேகம் செய்து வர வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் செய்து வந்தால் நாக சாந்தி ஏற்பட்டு நாகதோஷங்கள் நீங்குகிறது.
நாக,சர்ப்ப தோஷங்கள் ஏற்பட்டவர்கள் நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வந்து வணங்க வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என்ற எண்ணிக்கையில் சுற்றுகளை அமைத்துக்கொண்டு வணங்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் வலம் வர நாக, சர்ப்ப தோஷங்கள் யாவும் நீங்கும்

வெள்ளி, 4 ஜனவரி, 2019

ஆலயம்

ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் .
ஒரே நாளில்
தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள்  !!!

ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை  சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில்  பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.

1, திங்களூர் (சந்திரன்):
தரிசனம் நேரம் :1மணி நேரம்
காலை 6மணி

ஒன்பது  நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி  கிளம்பலாம்.

2, ஆலங்குடி (குரு) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
காலை 7.30மணி

ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள்  சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு  8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்

காலை 8.30 மணிக்குள்  இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்

3, திருநாகேஸ்வரம் (ராகு) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
காலை 9.30

கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி  பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க  ஒரு மணி நேரம் ஆகும். பின்னர்  கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு  புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.

4, சூரியனார் கோவில் (சூரியன்) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
மதியம் 11.00மணி

நீங்கள்  11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

5, கஞ்சனூர் (சுக்கிரன்) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
மதியம் 12.15

சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால்  மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே  12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.

6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :
தரிசனம் நேரம் :1மணி நேரம்
மாலை 4மணி

நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை  20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம்.  மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

7, திருவெண்காடு (புதன்) :
தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்
மாலை 5.15மணி

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம்  மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.

8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :
தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்
மாலை 6.15மணி

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம்.  ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்

9, திருநள்ளாறு (சனி) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
இரவு 8.00மணி
நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால்  8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும்,e சிவபெருமானையும் ஒரு மணிநேரம்  தரிசிக்கலாம்.

9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது (நவ) கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்மh பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்

நன்றி

வெள்ளி, 21 டிசம்பர், 2018

சிவராத்திரி


சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
என்னும் திருமூலரின் திருமந்திரமே சிவ மூல மந்திரம் ஆகும்.
ஆலய வழிபாட்டில் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தது மந்திரங்கள். ஒவ்வொரு கடவுளுக்கும், ஒவ்வொரு வகையான மந்திரங்கள் உள்ளன. இந்த மந்திரங்களை
தெரிந்து கொண்டு உரிய முறையில் உச்சரித்து வழிபாடு செய்யும் போது கடவுள் மனம்
மகிழ்ந்து, நமக்குத் தேவையானதை கொடுப்பார்.
அதை விடுத்து ஆலயத்துக்கு சும்மா வெறுமனே சென்று சாமி கும்பிட்டு விட்டு
வருவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.எனவே அவசியம் மந்திரங்களைத் தெரிந்து
கொள்ளுங்கள். சரி… மந்திரம் என்றால் என்ன?
மனம் + திறம் = மந்திரம். மனதுக்கு திடம்
கொடுப்பதுதான் மந்திரம்.
சுவாமிகளின் மூல
மந்திரத்தை மீண்டும், மீண்டும் சொல்லும்
போது, முதலில் நமது மனது திடப்படும்.
பிறகு அந்த மந்திர ஒலிகள் இடையூறுகளை
விலக்கி, இனிய பாதைக்கு உங்களை அழைத்து
செல்லும்.
இந்த உண்மையை நம் முன்னோர்கள் பல
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து
கொண்டனர். சரியான மந்திரங்களை உச்சரித்து
பலன் பெற்றனர். மந்திரங்களில் 7 கோடி
உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மந்திரங்கள்
சித்தர்களாலும், மகான்களாலும் இறைவனிடம்
இருந்து வரங்களாக பெறப்பட்டவையாகும்.
மந்திரங்கள் பல வகைப்படும். பிரணவ
மந்திரம், காயத்ரி மந்திரம், பீஜாட்சர
மந்திரங்கள், அஷ்ட கர்ம மந்திரங்கள்,
வழிபாட்டு மந்திரங்கள் என்று சொல்லிக்
கொண்டே போகலாம்.
சில மந்திரங்களை வீடுகளில் மட்டுமே
உச்சரிக்க வேண்டும். சில மந்திரங்களை
ஆலயங்களில் தான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள
மூர்த்தத்துக்கு ஏற்ப மந்திரங்களை சொன்னால்
நிச்சயம் பலன் தேடி வரும். சில மந்திரங்கள்
காடு மற்றும் குகைக்குள் மட்டுமே ஜெபிக்க
வேண்டும். சில மந்திரங்கள் திருமணம்
ஆனவர்கள் மட்டுமே சொல்ல வேண்டும்.
ஆனால் ஆன்மிகத் தகுதி பெறாமல்
மந்திரங்களை சொல்லக்கூடாது.
இறைவனிடம் மனதை சரண் அடையச் செய்த
ஒவ்வொருவரும் மந்திரங்களை ஜெபிக்க
வேண்டும்.
தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108
தடவை சொல்வது மிகவும் நல்லது. ஆலய
பிரகாரங்களில் அமர்ந்து மந்திரங்களை
சொல்லும் போது அது நிச்சயம் பல மடங்கு
பலன்களை அள்ளித்தரும். மந்திரம் என்றதும்
நிறைய பேர் என்னவோ… ஏதோ என நினைத்து
பயந்து விடுகிறார்கள். சிலர் அது நமக்கு
ஒத்து வராது என்று முயற்சி செய்யாமலே
விட்டு விடுகிறார்கள். சிலர் எல்லா
மந்திரங்களும் சமஸ்கிருதத்தில்தானே
இருக்கிறது. அதை உச்சரிக்க தெரியாது என்று
நினைப்பார்கள்.
இப்படியெல்லாம் நினைத்து, மனதைப் போட்டு
குழப்பிக்கொண்டு வீணாக கவலைப்பட
வேண்டியதில்லை. ஏனெனில் மந்திரங்கள் மிக,
மிக எளிமையானவை. தமிழிலேயே ஏராளமான
மந்திரங்கள், பதிகங்கள், பாடல்கள் உள்ளன. ஓம்
கணபதி நமஹ, ஓம் நமச்சிவாய, ஓம் நமோ
நாராயண, ஓம் சக்தி பராசக்தி, ஸ்ரீராம
ஜெயராம ஜெய ஜெய ராமா என்றெல்லாம்
சொல்வது மிக, மிக எளிமையான மந்திரங்கள்.
இந்த மந்திரங்களை உச்சரிப்பது போல குல
தெய்வத்தின் பெயரையும் மந்திரமாக
உச்சரிக்கலாம்.
இந்த மூல மந்திர உச்சரிப்புக்கு இணையான
மகிமை உலகில் வேறு எதுவும் இல்லை.
வாழ்க வளமுடன் என்று சொல்வது கூட
மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாக
கருதப்படுகிறது. திருமந்திரம், பெரிய
புராணம், கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம்
ஆகியவற்றில் உள்ள பாடல்கள் சக்தி
வாய்ந்தவை. பன்னிரு திருமுறைகளில் சகல
காரிய சித்தியளிக்கும் மந்திரங்கள் ஏராளமாக
புதைந்து கிடைப்பதை காணலாம். செல்வம்
வேண்டுமா? உடனே திருமணம் நடைபெற
வேண்டுமா? கடன் பிரச்சினை தீர வேண்டுமா?
நோய்கள் தீர வேண்டுமா? ஏழ்மையில் இருந்து
விடுபட வேண்டுமா? எல்லாவற்றுக்கும் தமிழ்
வேத மந்திரங்கள் உள்ளன.
காலையில் படுக்கையில் இருந்து எழும்
போதே சிவ… சிவ என்று சொல்லிக் கொண்டே
எழுந்திருக்கலாம். அல்லது உங்களுக்கு
பிடித்த சாமி பெயரை சொல்லலாம். தீராத
வியாதிகளால் அவதிப்படுபவர்கள் ஆலய
சன்னதியில் அமர்ந்து திருநீல கண்டப்
பதிகத்தின் முதல் திருமுறையைப் பாட நோய்
பஞ்சாக பறந்து விடும். சிலருக்கு சனிக்கிரக
பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும்.
அத்தகைய பாதிப்புக்குள்ளானவர்கள்
திருஞானசம்பந்தர் திருநள்ளாறில் பாடிய
பதிகத்தை 108 தடவை பாராயணம் செய்தால்,
பயன் அடையலாம்.
அது போல திருஞான சம்பந்தர்
திருநெடுங்குளம் எனும் தலத்தில் பாடிய
பதிகத்தை பாடினால் எவ்வளவு பெரிய
தடைகளும் உடைபட்டு விலகி ஓடி விடும்.
திருச்சோற்றுத்துறை எனும் தலத்தில்
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடினார். அந்த
பதிகத்தை ஜெபித்தால் வசதியான வாழ்வை
பெற முடியும். அது போல அவர் திருமருகல்
எனும் தலத்தில் பாடிய பதிகத்தை ஆலய
பிரகாரத்தில் அமர்ந்து படித்தால் உடனே
திருமணம் கை கூடி விடும்.
இப்படி நோய்கள்
நீங்கவும், கிரக தோஷங்கள் விலகவும்
பதிகங்களும், மந்திரங்களும் நிறைய உள்ளன.
அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு
ஜெபித்தால் நிச்சயமாக உரிய பலன்கள்
கிடைக்கும். பதிகங்களை படிப்பதால் எப்படி
பலன் கிடைக்கும் என்று சிலருக்கு சந்தேகம்
எழக்கூடும். மந்திரங்கள், பதிகங்களில் உள்ள
ஒவ்வொரு சொற்களும் சித்தர்கள், ஆழ்வார்கள்,
நாயன்மார்களால் சக்தி வாய்ந்த அதிர்வை
பெற்றுள்ளன. இந்த அதிர்வுகள் ஒலி
சக்திகளாகும். இந்த அதிர்வுகள் ஒன்று சேரும்
போது சக்தி பல மடங்கு அதிகரித்து, நமக்கு
பலனைப் பெற்றுத் தரும்.
நோய் தீர்க்கும் தன்வந்த்ரி ஸ்லோகத்தை 27
தடவை சொன்னால் இத்தகைய பலன்களை
பெற முடியும். ஆதிசங்கரர் சவுந்தர்ய
லஹரியில் கூறியுள்ள ஒரு மந்திரப் பாடலை
பாடினால் எவ்வளவு பெரிய காய்ச்சலும்
உடனே நீங்கி விடும். ஆஞ்சநேயர் சன்னதியில்
வழிபடும்போது ஆஞ்சநேயர் மந்திரத்தை
கூறினால் கொடிய நோய்கள் குணமாகும்.
அது போல அனுமன் கவசத்தை ஜெபித்தால்
சுறுசுறுப்பாக இருக்கலாம். அம்பாள்
சன்னதிகளில் வழிபடும்போது, ரோக நிவரண
அஷ்டகத்தை சொல்லலாம்.
மந்திரங்கள், பதிகங்களை படிக்கும் போதோ,
சொல்லும் போதோ வாய் விட்டு சொல்வதை
விட மனதுக்குள் சொல்வது நல்லது. நமது
புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள்,
உபநிடதங்களில் ஏராளமான மந்திரங்கள்
உள்ளன. திருமந்திரம், கந்தர் அணுபூதி,
கந்தகஷ்டி கவசம் போன்றவற்றில் மந்திரங்கள்
மறைந்து கிடக்கின்றன. எனவே மந்திரச்
சொற்கள் நிறைந்த பாடல்களை தெரிந்து
கொண்டு உள்ளம் உருகப்பாடினால்
நிம்மதியான வாழ்வு பெறலாம்.
அதிலும் ஆலயங்களில் பாடல்களை பாடும்
போது நிச்சயம் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
சில பதிகங்கள், மந்திரங்களை குறிப்பிட்ட
ஊர்களில் உள்ள ஆலயங்களில் அமர்ந்து
ஜெபிப்பது நல்லது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் குறிப்பிட்ட தலத்தில்,
குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரிக்கும்போது 100
சதவீதம் பலன் கிடைப்பதை
அனுபவப்பூர்வமாக உணரலாம். சில
மந்திரங்களை ஆலயங்களில் சில செயல்கள்
செய்யும் போது உச்சரிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு திருநீறு பூசும் போது ஓம்
சிவாய நம என்று சொல்லிக் கொண்டே பூச
வேண்டும்.
அது போல ஒரு செயலை தொடங்கும் போது
ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம் எனும் மந்திர
வலிமையுள்ள சுலோகங்களை உச்சரித்தால்
நமது நற்காரியங்கள் அனைத்தும் தடை
இல்லாமல் நிறைவேறும். ஸ்ரீ
விஸ்வநாதாஷ்டகம் எனும் 8 சுலோகங்கள்
மந்திர வலிமை பெற்றவை. இந்த
சுலோகங்களை திங்கள் தோறும் சிவபெருமான்
சன்னதியில் நின்று கூறி வழிபட்டால்
வாழ்வில் எதற்கும், எந்த இடையூறும் வராது.
அதிகாலை நேரத்தில் சக்தி தலங்களுக்கு
சென்றால் மறக்காமல் ஆதிசங்கரர் அருளிய
கவுரி சத்கம் பாட வேண்டும்.
இந்த மந்திரம் நிம்மதியான வாழ்வைத்
தேடித்தரும். வசிஷ்ட முனிவர் சிவநாம
மந்திரங்கள் நிறைய எழுதியுள்ளார். அந்த
மந்திரங்களை தினமும் மனதுக்குள் 3 தடவை
சொன்னால் போதும், தரித்திரங்கள் ஓடி
விடும். கந்தபுராணத்தில் வரும் சங்கர
சமஹிதை மந்திரத்தை சிவாலயத்தில்
அமர்ந்து படித்தால் எல்லாவித சுக
போகங்களும் தேடி வரும். அது போல
ஆதிசங்கரர் இயற்றிய ஸாம்ப பரப்பிரம்ம
சுலோகத்தை தினமும் ஆலய பிரகாரங்களில்
அமர்ந்து படித்து வழிபட்டு வந்தால் அஷ்டமா
சித்திகளைப் பெறலாம்.
ப்ருதி வீஸ்வராய ஸ்தோத்திரம் எனும்
மந்திரத்தை சிவாலய கருவறை முன்பு நின்று
உச்சரித்தால் குடும்பத்தில் அமைதி
உண்டாகும். துர்கா தேவி முன்பு நின்று
ஸ்ரீதுர்கா கவசம் பாடினால் கணவன் &
மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரிந்த
தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
ஸ்ரீசுப்பிரமணிய பஞ்சரத்னம் பாடினால்
முருகன் அருள் பெறலாம். ஸ்ரீமகாலட்சுமி
சன்னதி முன்பு நின்று அவருக்குரிய அஷ்டக
மந்திரத்தை கூறினால் நமது பொருளாதார
நிலை உயரும். குங்கும பஞ்சதசி என்றொரு
மந்திரம் உள்ளது.
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில்
இதை சிறப்பாக செய்வார்கள். இந்த
பஞ்சதசியை பாடினால் குடும்பத்தில் மகிழ்ச்சி
உண்டாகும். இப்படி ஒவ்வொரு சன்னதிலும்
உச்சரிக்க தனி, தனி மந்திரங்கள் உள்ளன.
அருளும் பொருளும் பெற அஷ்டலட்சுமி
ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும். சகல
கலைகளிலும் சிறக்க சகலகலா வல்லி மாலை
சொல்ல வேண்டும்.
இத்தகைய மந்திரங்களில் காயத்ரி மந்திரம்
உயர்வானது. இது வேதங்களின் தாய் என்று
போற்றப்படுகிறது. அது போல பிரணவ
மந்திரம் (ஓம்) மிக, மிக சக்தி வாய்ந்தது.
சூரியனில் இருந்து வெளியாகும் ஓசை ஓம்
என்று ஒலிப்பதாக சமீபத்தில் நாசா
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர
மந்திர விஞ்ஞானம்
இந்த நாமம் ஒலியின் ஒலி. ஆத்ம சுத்தம் செய்யும் ஆன்ம கீதம். உங்கள் உள் ஒளிந்து கிடக்கும் சக்திகளை வெளி கொணரும் பிராண நாமம். ‘ஓம் நம சிவாயா’இது வேதத்தின் இருதயம். நம்மை புனிதப்படுத்தும் சப்தம். நாமம், காம, க்ரோத, மோகங்களை அழிக்கும் நாமம். பிறப்பினை அழிக்கும் நாமம் என சொல்லிக் கொண்டே போகலாம். இது வார்த்தை ஜால பேச்சல்ல. வாழ்வின் உண்மை.
‘ஓம் நம சிவாயா’ நான் சிவ பிரானை வணங்குகிறேன் என்ற இந்த வார்த்தைக்கு இத்தனை மகிமைகள் உள்ளது. மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்லது. இதனை மனதினிலேயே சர்வ காலமும் சொல்லி பழகுவது சிறந்த ஆக்கப்பூர்வ அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும்.
* ந-நிலம், * ம-நீர், * சி-அக்னி, * வா-காற்று, * ய-ஆகாயம் சிவபிரான் பஞ்ச பூதங்களின் அதிபதி. இந்த மந்திரம் அண்ட சராசரங்களின் கருப்பையான சிவபிரானின் அருளினைப் பெற்றுத்தரும். இந்த கருப்பையில் இருந்தே அனைத்தும் வெளி வருகின்றன. பின்னர் அதனுள்ளே செல்கின்றன. அப்பேர்பட்ட அதிசக்தியான சிவபிரானை வணங்குவது தான் ‘நம சிவாய’.
* இந்த மந்திரம் மனிதன் மனதில் இருக்கும் அனைத்து பயங்களையும் நீக்கும்.
* மனிதனை நோய்களிலிருந்து காக்கின்றது.
* மனிதன் சிந்தனை, செயலினை தெளிவாக்குகின்றது.
* வாழ்க்கை வழியினை நற்பாதையில் திருப்பி விடுகின்றது.
* 108, 1008 என ஆரம்பித்து பின் இந்த நாமத்தினை தனது மூச்சாக மாற்றி வாழ்பவர்கள் இன்றும் கணக்கற்றோர் உள்ளனர்.
மேற்கூறப்பட்ட அனைத்தும் மிகப்பெரிய மகான்களால் வழி வழியாய் கூறப்பட்டவை.
விஞ்ஞான ரீதியாக தியானமும் மந்திரம் சொல்வதும்.
* கவனத்திறனையும் செயல் திறனையும் கூட்டுவதாக கூறப்பட்டுள்ளது.
* ‘ஓம்’ என்ற வார்த்தை மன அமைதி குறைந்தவர்கள், வலிப்பு நோயாளிகள் இவர்களுக்கு சிகிச்சை முறையாக பயிற்சி அளிக்கப்படுகின்றது.
* ‘ஓம்’ ஜபிப்பது உயர் ரத்த அழுத்தத்தினை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்து மத பிரிவினருக்கு யோகா பயிற்சி மூலம் ‘ஓம் நம சிவாய’ ஜபிக்க வைப்பது உயர் ரத்த அழுத்த சிகிச்சையாக அளிக்கப்படுகின்றது.
பொதுவில் நல்ல ஒலி சப்தங்கள் மூளை செயல்திறனை சீராக்குகின்றது.
* மந்திரம் ஜபிக்கும் (எந்த மதம், மொழி, எந்த மந்திரமாயினும்) மக்கள் ஆரோக்கிய இருதயத்துடன் இருக்கின்றார்கள்.
* நோய் கட்டுப்படுகின்றது.
மந்திரங்கள் பிரிவிலும், தனிப்பட்ட முறையிலும் ‘ஓம் நம சிவாய’ மிகுந்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது.
இத்தனை பெருமைகள் கூடிய, சக்தி கூடிய ‘சத்யம், சிவம், சுந்தரமாய்’ விளங்கும் சிவ பிரானை நாம் வழிபடுகின்றோம். உண்மையே இறை சொரூபமாய் கொண்ட அழகு சிவபிரானை நாம் வணங்குகின்றோம். பூரணத்துவம் கொண்டவரை நாம் வணங்குகின்றோம்.
இவரை அன்றாடம் நொடிக்கு நொடி சிந்தையில் கொண்டு வணங்குபவர்கள் இன்றும் ஏராளம். ஆயினும் ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை, கார்த்திகை சோமவாரம் இவையெல்லாம் அனைத்து இந்துக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. சிவராத்திரியை பொறுத்த மட்டில் மாத சிவராத்திரி என ஒவ்வொரு மாதமும் சிறப்பு பெற்றாலும் மகா சிவராத்திரி விழா வருடந்தோறும் மிக மிக சிறப்பாக நமக்குத் தெரிந்து பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகின்றது.
மகா சிவராத்திரி பற்றி பல புராண குறிப்புகள் உள்ளன. குறிப்பாக ஸ்கந்த புராணம், லிங்க புராணம், பத்ம புராணம் இவைகளைக் கூறலாம். இந்த குறிப்பிட்ட நாளன்று சிவ பிரானின் இறை நடனம் நிகழ்வதாகக் கூறப்படுகின்றது. வட மாநிலங்களில் இந்நாளை சிவ, பார்வதி திருமண நாளாகக் கொண்டாடுகின்றனர். ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என நாம் பக்தியின் காரணமாக நம்மோடு இறைவனை வைத்துக் கொண்டாலும், பாரதம் முழுவதிலும் மற்றும் பாரத தேசத்தினைத் தாண்டியும் சிவ வழிபாடு அதே பக்தியோடு நடைபெறுகின்றது. ‘சிவ ராத்திரி’ இருளையும், அறியாமையும் விட்டு வெளி வருதல் என்று பொருள் கூறப்படுகின்றது.
ஒரே ஒரு நாள் விழா என்றாலும் அது எத்தனை சிறப்பு பெற்று விளங்குகின்றது. எத்தனை முக்கியத்துவம், பெறுகின்றது என்று பார்ப்போம். சிவராத்திரி அன்று காலை பொழுதிலிருந்தே பழமோ, பாலோ மட்டும் எடுத்துக் கொண்டு விரதத்தினை அனுஷ்டிப்பவர்கள் அநேகர். காலையிலேயே சிவன் கோவிலுக்குச் சென்று அபிஷேக பூஜையில் கலந்து கொள்வர்.
பால், பன்னீர், சந்தனம், தயிர், தேன், சர்க்கரை, வில்வ இலை, நெய் என தன்னால் இயன்றவைகளை அளிப்பர். பூஜை செய்து வீடு வந்து அன்றைய இரவு பூஜைக்குத் தயார் செய்வர். சுத்த மண்ணால் லிங்கம் செய்து நெய்யால் அபிஷேகம் செய்பவர்களும் உண்டு. முதலில் சிவ வழிபாடு பற்றின சங்கல்பம் செய்து பிள்ளையார் பூஜை செய்ய வேண்டும். இவை செய்யும் பொழுது சாமி அறையில் கோலமிட்டு விளக்கேற்றி, ஊதுவத்தி, சாம்பிராணி காட்டி, சந்தன, குங்குமம் இட்டு, பூ, மாலை சாற்றி வெற்றிலை, பாக்கு, தேங்காய், முடிந்த பழங்கள் வைத்து பூஜிக்க வேண்டும்.
கணபதி பூஜை முடித்த பின்பு நந்தி பூஜை செய்யுங்கள். அதன் பின்னரே சிவ பூஜை ஆரம்பிக்கு. கோவில்களில் கால பூஜை நடக்கும். வீடுகளில் சிவ புராணம், சிவநாமம் ஜெபிப்பர். வீட்டில் பூஜை செய்பவர்கள் இருக்கும் அனைத்து சாமி படங்களுக்கும் சிறிது பூ வைத்து சந்தன, குங்குமம் இட்டு அனைத்து தெய்வங்களுக்கும் நைவேத்தியம் செய்யுங்கள். அதுவே முறை. இரவு முழுவதும் விழித்திருந்து செய்வர். இவை அனைத்தும் அவரவரர் பொருளாதார நிலை, உடல்நிலை, மனநிலையினை பொறுத்ததே. அமைதியாய் தியானத்தில் அமர்ந்து ‘ஓம் நமசிவாய’ நாமத்தினை மனதினுள் உச்சரிப்பதும் மிக உயர்ந்தது. உன்னதமானது.
இத்தனை உயர்வால் நாம் செய்யும் சிவ பூஜையினை லிங்க வடிவில் வழிபடுவதினையே மிகவும் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிதம்பர நடராஜ நடன வடிவமும் சிறப்பாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ரூபம் என்பது முக்கியமல்ல. ரூபத்தினால் அவரை வசபடுத்த முடியாது. எங்கும் எதிலும் நிறைந்திருக்கும், முதலும், முடிவும் இல்லாத பிரபஞ்சத்தை தன்னுள் கொண்ட சக்தி. சக்தியின் ஒரு பாதி என்றாலும் சக்தியே சிவன்தான். இந்த எல்லையிலா சக்தியே சிவம் என்பதால்தான் சிவ வழிபாடு மிக உயர்ந்ததாகப் போற்றப்படுகின்றது.
சிவபிரான் நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கை பாடங்களாக சில செய்திகள் கூறப்படுகின்றன. சிவபிரானை ‘ஆதியோகி’ என வழிபடும் முறையும் இங்குள்ளது.
* சிவபெருமான் அழிப்பவர். தீயவைகளை அழிப்பவர். எது வந்தாலும் தீமைகளை சகிக்காதே.
* எப்பொழுதும் அமைதியாய் இரு.
* உலகில் நிலையற்ற பொருள் மீது ஆசைவைக்காதே. அவரது ஆடை, தோற்றமே இதனைக் கூறிவிடும். நிச்சயமற்ற இந்த உடல் மீதும், பொருட்கள் மீதும் பற்று வைக்காதே.
அவை உன்னிடம் இருக்கலாம்.
நீ அவைகளிடம் இருக்காதே.
* அழிவுப் பூர்வமானவைகளை கட்டுப் படுத்தி வைக்கத் தெரிய வேண்டும். கொடும் வி‌ஷத்தினையே தன் தொண்டையில் காலத்திற்கும் கட்டுப்படுத்தி வைத்திருப்பவர் அல்லவா.
* தனது வாழ்க்கைத் துணைக்கு சம உரிமை கொடுங்கள். அர்த்தநாரீஸ்வரர் தோற்றம் சொல்லும் உண்மை இதுவே. ஆக ஆசைகள் இன்றி இருத்தலே சிறந்தது. ஆசை அழிவினைத்தரும்.
* அகங்காரத்தினை அடக்குவதே திரிசூலம்.
* தவமும், தியானமும் கர்ம வட்டத்திலிருந்து நம்மை நீக்கி உயர்த்தும்.
மேலும் சிவபிரானின் அவதாரங்களாக 19 அவதாரங்கள் கூறப்படுகின்றன.
* பிப்பலாத் அவதாரம்: தாதிஷி முனிவருக்கு மகனாய் பிறந்தார். இவரது தந்தை இவர் பிறக்கும் முன்பே வீட்டை விட்டு வெளியேறுகிறார். பிப்பலாத் வளர்ந்த பின் சனிதோ‌ஷம் தன் தந்தை வெளியேற காரணம் என்று அறிந்து சனிபகவானை சபித்தார். பின்னர் அவரே 16 வயது வரையுள்ள சிறுவர்களை சனிபகவான் எந்த தொந்தரவும் செய்யகூடாது என கூறி அருளினார். எனவேதான் பிப்லாத் ரூப சிவனை வழிபட்டால் சனிதோ‌ஷம் நீங்கும் என்பர்.
* நந்தி அவதாரம்: சிவ பிரான் நந்தி பகவானாக இந்தியாவின் பல இடங்களில் வழிபடப்படுகின்றார்.
* வீரபத்ர அவதாரம்: அன்னை சதி தீயில் குதித்தபின் சிவபிரான் மிகுந்த கோபம் கொண்டார். அவரது தலையிலிருந்து வீரபத்திரரும், ருத்ர காளியும் தோன்றினர். வீரபத்திரர் கோபமான கண்களும் மண்டை ஓடு மாலையும், பயங்கர ஆயுதங்களும் கொண்டவர். தக்‌ஷன் தலையினை கொய்தவர்.
* பைரவர் அவதாரம்: பிரம்மனின் தலையை கொய்த அவதாரம். பிரம்மனின் தலையை கையில் கொண்டு 12 ஆண்டுகள் பிக்ஷாந்தேஷியாக இருந்தார். அனைத்து சக்தி பீடங்களையும் காத்தார்.
* அஸ்வத்தாமா: துரோணச்சாரியாரின் மகனாகப் பிறந்தவர்.
ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு புராண செய்தி இருப்பதால் ஒரு சில அவதாரங்களை கோடிட்டு மட்டுமே காட்டியுள்ளோம்.
* சிவன், இந்துக்களின் மிக முக்கிய பொக்கி‌ஷ தெய்வம். சைவத்தின் உயர்நிலை. தீயதினை அழிப்பவர். சிவபிரானின் உயர் நிலை உருவமற்றது. எல்லையற்றது. ஆழ்நிலை கொண்டது. என்றும் மாறாதது. சுத்தப் பிரம்மம். எங்கும் நிறைந்த ஆதியோகி. கைலாயமலையில் இருப்பவர். எல்லாம் இவருள் அடக்கம்.
இவரை இந்த சிவராத்திரி நன்னாளில் வணங்கி நல்லன பெறுவோம்.
நன்றி.


வியாழன், 29 நவம்பர், 2018

மேஷம்
வீர பராக்கிரமம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே... இது நாள் வரை உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் இருந்த ராகு 3ம் இடத்திலும் 10ம் இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் இடப்பெயர்ச்சி அடைய உள்ளனர். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார்.
"ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும். காரியங்களுண்டாம்,அன்னதானங்களுண்டாம்.வாகு மதி மணமுண்டாம்,வரத்து மேல் வரத்துண்டாம்" என்ற ஜோதிட பாடல் படி ராகு இப்பொழுது யோகத்தை வழங்க போகிறார். கடந்த ஓன்றறை ஆண்டுகளாக வரன் தேடியும் அமையாத திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும்.
செய்யும் தொழிலிலோ பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும்.புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். இது வரை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள்.செல்வாக்கு உள்ள பிரமுகர்கள் தொடர்பு கிடைக்கும்.அதனால் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும்.குடும்பத்தில் நீண்ட நாள் பிரச்சனைகள் திரும்.
மனிதர்களுக்கு மோட்சத்தை கொடுக்க கூடிய கேது 9ல் வருவதால் உங்களுடைய பிரச்சனைகளுக்காக கோயில் பூஜை பரிகாரம் செய்தும் நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டிர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய வருமானமும் கிடைக்கும். பெண்களுக்கு புத்திர ஸ்தானம் 9ம் பாவம், அந்த 9ம் இடத்திற்கு கேது வருவதால் புத்திர பாக்கியமும் அதனால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் உற்றார் உறவினர் பகை மறந்து சந்தோசமாக இணையலாம். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு அவசியம்.

திங்கள், 26 நவம்பர், 2018

மேஷம்
விடா முயற்சியே விஸ்வரூப வெற்றி என்பதை உணர்ந்து கொண்ட மேஷ ராசிக்காரர்களே. இந்த ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. சுப கிரகமான குருபகவான் எட்டாம் வீட்டில் இருந்தால் அவர் பார்க்கும் வீடுகள் உங்களுக்கு பணவரவையும் லாபத்தையும் தரும். மார்ச் மாதம் முதல் அவர் அதிசாரமாக தனுசு ராசிக்கு செல்கிறார். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அரசாங்க விஷயங்கள் அனுகூலமாக முடியும். தந்தை ஆதரவாக இருப்பார். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.10.4.19 முதல் 8.8.19 வரை வக்ரகதியிலும் செல்வதால், அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டாகும்.
அக்டோபர் மாதம் நிகழ உள்ள குருப்பெயர்ச்சி அதி அற்புதமான யோகங்களை தரப்போகிறது. பாக்கிய ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் சஞ்சாரத்தினால் நீங்கள் வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. பொருளாதார நிலை படு சூப்பராக இருக்கும் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை காலி செய்ய பல வழிகள் இருந்தாலும் அதை சுப விரைய செலவாக மாற்றி விடுங்கள்.
ராகு கேது பெயர்ச்சியினால் நன்மைகள் நடைபெறும். 3ம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். பெண்களுக்கு புத்திர ஸ்தானம் 9ஆம் பாவம், இந்த இடத்திற்கு கேது வருவதால் புத்திர பாக்கியமும் அதனால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாதித்தியம் கிடைக்கும்

சனி, 24 நவம்பர், 2018

தெரிந்து கொள்வோம்

Google.com/+bharathegopu

கப்கேக், ஓரியோ, ஜெல்லி பீன் போன்றவை ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். சரி அப்படியென்றால் ஸ்டாக் ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு ஒன், ஆண்ட்ராய்டு கோ என அழைக்கப்படுபவை என்ன? என்பதுதான் பலருக்கும் குழப்பமாக இருந்திருக்கும். எளிமையாகச் சொல்லவேண்டுமானால் ஓரியோ, ஜெல்லி பீன் போன்றவை உணவுப்பொருள்கள் என்று எடுத்துக்கொண்டால் ஸ்டாக் ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு ஒன், ஆண்ட்ராய்டு கோ ஆகியவற்றை அவற்றின் சுவையாக எடுத்துக்கொள்ளலாம். இந்தச் சுவைகளில் இருக்கும் வித்தியாசங்கள் என்னவென்று பார்ப்பதற்கு முன்பு எப்படி நம் மொபைல்களுக்கு ஆண்ட்ராய்டு மென்பொருள் வந்துசேருகிறது என்பதைப் பார்ப்போம்.

ஸ்டாக் ஆண்ட்ராய்டு
கூகுள் தனது ஆண்ட்ராய்டு வெர்ஷன்களின் Source Code-களை பொதுவெளியில் வெளியிடும். இவை Open source Project என்பதால் இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளமுடியும். மொபைல் நிறுவனங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு தோற்றத்திலும் வசதிகளிலும் மட்டும் சிறுசிறு மாற்றங்களைச் செய்து தங்கள் மொபைல்களில் அவற்றைச் செயல்படுத்தும். சாம்சங்கின் டச் விஸ், HTC-யின் சென்ஸ், ஒன்ப்ளஸ் ஆக்சிஜன்OS என மொபைல்களில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்களின் UI மென்பொருள்கள் இப்படித்தான் தயாராகிறது. ஆனால், இப்படி மாற்றங்கள் செய்து வெளியிடுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் பெர்ஃபார்மன்ஸ் குறையலாம், பாதுகாப்பில் பிரச்னைகள் வரலாம், அப்டேட்கள் உடனடியாகக் கிடைக்காது. சில சமயங்களில் தயாரிப்பு நிறுவனங்கள் தரும் UI-க்களே மோசமாக இருக்கும்.

இதனால் கூகுள் சில மாற்றங்களுடன் தங்களது ஆண்ட்ராய்டு ஒன் மற்றும் ஆண்ட்ராய்டு கோ எடிஷன்களை வெளியிடத் தொடங்கியது. இவை என்னவென்று பார்ப்போம்.

ஸ்டாக் ஆண்ட்ராய்டு

மாற்றங்கள் எதுவுமே செய்யப்படாமல் கூகுள் எப்படி வெளியிடுகிறதோ அப்படியே இருப்பதுதான் ஸ்டாக் ஆண்ட்ராய்டு. இதில் இருக்கும் முக்கியமான நன்மையாகப் பார்க்கப்படுவது கூகுள் ஏதேனும் அப்டேட் வெளியிட்டாலோ, பாதுகாப்பு வசதிகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்தாலோ இந்த மொபைல்களுக்கு உடனடியாக  அவை கிடைத்துவிடும். மற்ற மொபைல்களில் வாங்கும்போதே தேவையில்லாத செயலிகள் சில இருக்கும், இவற்றை சில நேரங்களில் அன்இன்ஸ்டால் செய்யவும் முடியாது. நேரடியாக வருவதால் ஸ்டாக் ஆண்ட்ராய்டில் அப்படி ஒன்றுகூட இருக்க வாய்ப்பில்லை. நெக்சஸ் மற்றும் பிக்ஸல் மொபைல்கள் கூகுளிடமிருந்து வருவதால் இந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டுதான் அவற்றில் இருக்கும். இதைத்தவிர வெகுசில மொபைல்கள் மட்டும் ஸ்டாக் ஆண்ட்ராய்டுடன் வரும். ஆனால் ஓரளவு நல்ல ஹார்டுவேர் கொண்ட மொபைல்களில்தான் இது இலகுவாக இயங்கும். மற்ற போன்கள் இதில் இயங்கச் சற்றுத் திணறும்.

ஆண்ட்ராய்டு ஒன்

2014-ல் அறிமுகமான இது ஆரம்பவிலை மொபைல்களுக்கும் இந்தக் கலப்படமில்லாத ஆண்ட்ராய்டு சேவையை வழங்கும் நோக்கில் கூகுளால் வடிவமைக்கப்பட்டது. ஆனால், இன்று அதைத்தாண்டி மிட்-ரேன்ஜ் மொபைல்கள் வரை வளர்ந்துள்ளது ஆண்ட்ராய்டு ஒன். இதன்மூலம் பிரீமியம் மொபைல்கள் மட்டுமன்றி சாதாரண விலை மொபைல்களுக்கும் ஆண்ட்ராய்டு முழுமையாகக் கொண்டுசெல்ல வழிவகை செய்யப்பட்டது. இதிலும் அப்டேட்கள் உடனுக்குடன் கிடைக்கும். ஸ்டாக் ஆண்ட்ராய்டுக்கும் இதற்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் இது கூகுளின் `ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் ப்ராஜெக்ட்'-டில் வராது. ஒப்பந்தத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும்தான் இந்த ஆண்ட்ராய்டு ஒன் சேவை. இதிலும் தேவையில்லாத செயலிகள் மற்றும் தோற்ற மாற்றங்கள் பெரிதாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ளும் கூகுள்.

Android One
ஆண்ட்ராய்டு கோ

இதுவும் ஆண்ட்ராய்டு ஒன் உருவாக்கப்பட்ட அதே நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுதான். எப்படி ஃபேஸ்புக் செயலுக்கு மாற்றாகக் குறைந்த அளவு டேட்டாவைச் செலவழிக்கும் ஃபேஸ்புக் லைட் செயலி இருக்கிறதோ அதே போன்றுதான் `ஆண்ட்ராய்டு கோ'வும். குறைந்த விலை மொபைல்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இது 512 MB அல்லது 1 GB RAM-மிலும் எந்த ஒரு பிரச்னையுமின்றி இயங்கவல்லது. மேலும் கூகுள் செயலிகளின் லைட் வெர்ஷன்கள் ஆண்ட்ராய்டு கோ மொபைல்களுக்குக் கிடைக்கும். இவை 5 MB முதல் 10 MB தான் இருக்கும். ஆனால் முழு வசதிகளையும் இதில் எதிர்பார்க்கமுடியாது. ஸ்டோரேஜை முடிந்த அளவு சேமிப்பதே இதன் முக்கியக் குறிக்கோள். இப்போது ஆண்ட்ராய்டு ஒன், மிட்-ரேன்ஜ் மொபைல்களின் மீது முழுவதுமாக தன் கவனத்தைத் திருப்பிவிட்டநிலையில் ஆண்ட்ராய்டு கோ முழுவதுமாக குறைந்த விலை மொபைல்களில் மட்டும் கவனம் செலுத்தும்.

Android Go
இதில் எது பெஸ்ட் என்ற கேள்விக்குச் சரியான பதிலே இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மொபைல் வகைக்கேற்ப மாற்றியமைக்கப் பட்டிருக்கும். இதுதவிர வரும் மொபைல்களுடன் வரும் மற்ற ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள் எல்லாம் அந்தந்த நிறுவனங்களால் Customize செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு OS-களே!

வெள்ளி, 2 நவம்பர், 2018

பொருத்தம்

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போதே, பெண்ணின் ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கையை வைத்து குடும்பத்திற்கு சரிப்பட்டு வருமா என்று கேட்கின்றனர். பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை கூடவே ராகு இருந்தால் அந்த பெண்ணையே வேண்டாம் என்று ஒதுக்கும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள்.


ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற நிலை யாருக்கு அமையும், செகண்ட் சேனல், கள்ளத் தொடர்பு யாருக்கு ஏற்படும் என்பதை ஜாதகத்தில் கிரகங்களின் நிலையை வைத்து அறிந்து கொள்ளலாம். பெண்ணின் கற்பை ஜாதகத்தில் பார்க்கும் ஜோதிடர்கள், ஆணின் கற்பு நிலை பற்றி கண்டு கொள்வதில்லை.


திருமணத்துக்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிப்பார்கள். ஒன்று செவ்வாய் தோஷம், மற்றொன்று ராகுகேது தோஷம். செவ்வாய் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12ல் இருந்தால் தோஷம். ராகுகேது லக்னம், 2, 7, 8ல் இருந்தால் தோஷம். இந்த இடங்கள் எல்லாம் காதல் சுகத்தையும், குடும்ப தாம்பத்ய சுகத்தையும், இல்லற வாழ்க்கையையும் குறிக்கும் இடங்களாகும். எனவேதான் தோஷம் உள்ள ஜாதகமாக பார்த்து சேர்த்தார்கள். அப்படி பார்க்காமல் சேர்ப்பதால்தான் நிர்மலா தேவி போலவோ, கல்யாண மன்னன் போலவோ கணவன், மனைவி அமைந்து வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுகிறது.


பாவிகளுடன் இணைந்த சுக்கிரன்

லக்னம், ராசி, மூன்றாமிடமாகிய போகஸ்தானம், ஏழாமிடமாகிய களத்திரஸ்தானம், பன்னிரெண்டாம் இடமாகிய அயனசயன ஸ்தானம் ஆகிய ஒன்றில் சுக்கிரன் இருந்து பாவிகளாகிய சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன் இணைவதோ அல்லது பார்வை பெறுவதோ ஒருவரின் காம உணர்வை அதிகமாக்கி விடும்.

தடம் மாறும் உறவுகள்

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனோடு சனி இணைந்து இருந்தால் மாறுபட்ட நிலையில் உறவு முறை கொள்வார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணி இருந்தாலும் ஒரு கிரகத்தின் தசா புத்தி நடக்கும் போது இது போன்ற கள்ளத் தொடர்புகள் எற்படுகின்றன. கள்ளக்காதலின் வேகத்தில் கணவனை மனைவியோ, மனைவியை கணவனோ கொலை செய்யும் நிலை கூட சிலருக்கு ஏற்படுகிறது.

மரணத்திற்கு காரணம்

ஒரு ஆணின் ஜாதகத்தில் மனைவியை குறிக்கக் கூடிய லக்னத்திற்கு ஏழாம் இடத்து அதிபதியும், மனைவிக்கு காரகம் வகிக்கும் சுக்கிரனும் ஆயுள் ஸ்தானத்திற்கு விரைய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இடத்தில் இருந்தாலோ, இந்த வீட்டுக்கு அதிபதியான கிரகங்களுடன் தொடர்பு பெற்று இருந்தாலோ அந்த ஜாதகனின் ஆயுள் முடிவதற்கு மனைவியே காரணம் ஆவாள்.

பெண்ணின் ஜாதகம்

பெண்ணின் ஜாதகத்தில் நான்காம் இடம் என்பது கற்பு நிலையை குறிக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும்.

கிரகங்களின் சேர்க்கை

ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், ராகுகேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், ஒழுக்க குறைபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். ஏழாம் வீட்டில் சூரியன் புதன் சேர்க்கை, ஏழாம் அதிபதி சுக்கிரன் ஆறாம் வீட்டில் சனி, குரு உடன் சேர்ந்து இருப்பது. 4 ஆம் வீட்டில் ராகு இருப்பது அந்தந்த தசா புத்தி காலத்தில் தடுமாற்றத்தை தரும்.

எல்லை மீறும் காமம்

ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தால் அந்த தசாபுத்தி காலத்தில் தடுமாற்றம் ஏற்படும். ஒருவருக்கு சுக்கிரதிசை நடக்கும் போது காம உணர்ச்சி அதிகமா இருக்கும். ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். அதே ராசியில் சுக்கிரன் இருந்தால், காமம் எல்லை மீறும். விருச்சிகத்தில் சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். எந்த எல்லைக்கும் போக தயங்கமாட்டார்கள். இப்படி கிரக சேர்க்கை அமைந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அம்பாளையும், செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடலாம். கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.

திங்கள், 15 அக்டோபர், 2018

இமை துடிப்பு

வலது புருவம் துடித்தால் பணவரவு ஏற்படுவதன் அறிகுறி.

வலது கண் துடித்தால் நீங்கள் நினைத்தது நடக்கப் போவதாக அர்த்தம்.

வலது கண் இமை துடித்தால் சந்தோஷமான செய்தி உடனே வரும் என்பதற்கான அறிகுறி.

வலது கண் கீழ் பாகம் துடித்தால் மன கஷ்டம் மற்றும் மற்றவர்களின் பழியை சுமக்க நேரிடும்.

இடது புருவம் துடித்தால் ஏதாவது கவலை வருவதன் அறிகுறி.

இடது கண் துடித்தால் குடும்பத்தை பிரிந்திருத்தல் மற்றும் கவலைக்கான அறிகுறி.

இடது கண் இமை துடித்தால் கவலை மற்றும் சோர்வுக்கான அறிகுறி.

இடது கண் கீழ் பாகம் துடித்தால் செலவு உண்டாகப் போவதன் அர்த்தம்.

புருவத்தின் மத்தியில் துடித்தால் உங்களுக்கு பிரியமானவருடன் நீங்கள் இருகிறீர்கள் என்று அர்த்தம்.

கண் நடுபாகம் துடித்தால் மனைவியை பிரிந்திருக்க நேர்வதாக அர்த்தம்.

சனி, 29 செப்டம்பர், 2018

பிரசன்னா

ப்ரசன்ன ஜோதிடம்


            பிற ஆருட முறைகளில் ஜோதிடர் பலன் கூறினால் தெய்வீக ஆருடத்தில் தெய்வமே பலன் கூறும். அப்படி பட்ட தெய்வீக ஆருட முறையான தேவ ப்ரசன்னத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

            முன்பு ஒரு காலத்தில் படைக்கப்பட்டு, இறைவனால் அருளப்பட்டு, ரிஷிகளால் காகப்பட்ட இந்த தெய்வீக முறை பலரின் கைகளில் மாட்டி மறைந்து கிடைக்கிறது. தேவப்பிரசன்னம் என்பதில் இரண்டு வார்த்தைகள் உண்டு. முதல் வார்த்தை தேவம் மற்றது ப்ரசன்னம். தேவம் என்றால் தெய்வீகம் என அர்த்தப்படுத்தலாம். தெய்வீகம் என்ற சொல்லை விளக்குவதை விட உணர்ந்தால் மட்டுமே புரியும். ப்ரசன்னம் என்ற வார்த்தையை விளக்குவது எளிது.

ப்ரசன்ன என்ற வடமொழி சொல்லுக்கு கேள்வி என அர்த்தம். விடை தெரிய முற்படும் கேள்விக்கு ப்ரசன்ன என மொழி பெயர்க்கலாம். வேதத்தில் உள்ள ஒரு உபநிஷத்தின் பெயர் ப்ரசன்ன உபநிஷத். கேள்விகளால் தூண்டப்பட்டு இறை உண்மை விளக்கப்படுவதால் உபநிஷத் இப்பெயர் பெற்றது.

ஒருவர் தன் வாழ்வில் குழப்பத்துடன் நம் முன் வரும் பொழுது “என்னப்பா உனக்கு பிரச்சனை” என பேச்சு வழக்கில் கேட்பார்கள் அல்லவா? அதுபோல வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை ஜோதிடர்களிடம் கூறும் பொழுது அக்கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரகங்களை கொண்டு பலன் சொல்லும் ஜோதிட சூட்சமத்திற்கு பிரசன்னம் என பெயர்.

பிறந்த நேரம் கொண்டு ஜாதகம் கணித்து வாழ்க்கையின் அனைத்து பலன்கள் பார்ப்பது போல இல்லாமல், ஒரு கேள்வி அக்கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரகத்தை வைத்து ஒரு ஜாதகம் பார்ப்பது என்பதே ப்ரசன்ன ஜோதிடம் என்பதாகும்.

ஒரு கேள்விக்கு ஒரு ஜாதகம் என்றேன் அல்லவா? அடுத்த கேள்வி கேட்கும் பொழுது முன்பு இருந்த ஜாதகத்தை விட்டு புதிய கேள்வி கேட்ட நேரத்தில் மீண்டும் ஜாதகம் கணிப்பார்கள். ஆக கேள்வி வர வர ஜாதகம் மாறும்..!

பிறந்த நேரத்தை கொடுத்தாலே ஜாதகம் கணித்து பதில் சொல்லலாமே ஏன் ஒவ்வொரு கேள்விக்கு ஜாதகம் போட வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம். வெளிப்படையாக கூறவேண்டுமானால் அனைத்து கேள்விக்கும் பிறப்பு ஜாதகத்தில் பலன் கூற முடியாது. ஆம் இது முற்றிலும் உண்மை. உதாரணம் கூறுகிறேன் கேளுங்கள்.

நான் வீடு வாங்குவேனா என கேட்டால் பிறப்பு ஜாதகத்தில் கூறிவிடலாம். ஆனால் நான் கும்பகோணத்தில் வாங்குவேனா இல்லை கோளப்பாக்கத்தில் வாங்குவேனா என கேட்டால் ப்ரசன்னம் தான் ஒரே வழி.

எனக்கு பதவி உயர்வு கிடைக்குமா என கேட்டால் பிறப்பு ஜாதகம் போதும், இதுவே எனக்கு பதவி உயர்வு உதவி மேலாளராகவா அல்லது கிளை மேலாளராகவா என கேட்டால் பிறப்பு ஜாதகம் வழி கூறாது. பிரசன்ன ரீதியாகவே பார்க்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேலே கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றிப்பெறும் என கேள்வி எழுந்தால் இரு அணியில் விளையாடும் 22 நபர்களின் ஜாதகத்தை கணித்தா பலன் கூற முடியும்? அவ்வாறு செய்தால் மேட்சே முடிந்துவிடும். இதெற்கெல்லாம் பயன்படுவது பிரசன்ன ஜோதிடமே ஆகும்.

இன்னும் எளிமையாக கூற வேண்டுமானால் பிரசன்ன ஜோதிடத்தில் கூற முடியாததே எதுவும் இல்லை,அனைத்துக்கும் ஜோதிட பலன் கூற முடியும்.

பிறப்பு ஜாதகத்தில் பிறந்த நேரம் தவறாக இருக்கலாம். நமக்கும் துல்லியமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் பிரசன்னம் என்பது நீங்கள் ஜோதிடரிடம் கேள்வி கேட்கும் நேரம் என்பதால் இந்த நேரத்தை துல்லியமாக கூற முடியும். அதனால் பலனும் துல்லியமாக வரும்.

மின்சாரம் எப்பொழுது வரும்? கையில் மறைத்து வைக்கப்பட்ட பொருள் என்ன? நாணயத்தை சுண்டினால் தலை விழுமா பூவா? இவை எல்லாம் பிரசன்னத்தில் முன்பே கூற முடியும். அதுவும் பொதுவாக இல்லை. மிக மிக துல்லியமாக, மைக்ரோ அளவில் கூற முடியும்.

பிரசன்ன ஜோதிடம் பல ஜோதிடர்களுக்கு தெரியாது. இதனால் ஜோதிடத்தில் முழுமை பெறாமல் இருக்கிறார்கள். கேரள ஜோதிடம் புகழ்பெற்று இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு பிரசன்ன ஜோதிடம் மட்டும் தான் தெரியும்...!

பிரசன்ன ஜோதிடத்தின் துல்லியம் வேறு எந்த ஜோதிட முறைகளிலும் கிடையாது. பராசரர், வராஹ மிஹிரர், காளி தாசர் இவர்கள் எல்லாம் பிரசன்ன ஜோதிடத்தில் திறன்மிகுந்தவர்களாக இருந்தவர்கள்.

இப்படிப்பட்ட மிக சக்தி வாய்ந்த பிரசன்ன ஜோதிடத்துடன் இறை சக்தி இணைந்தால் அதன் பெயர் தேவப்பிரசன்னம்...!

தேவப்பிரசன்னம் எப்படி பார்க்கப்படுகிறது?

கோயில் திருவிழாவிற்கு முன் ஒவ்வொரு வருடமும் தேவப்பிரசன்னம் பார்க்கும் முறை வழக்கத்தில் உண்டு. இன்றும் பல கோவில்களில் பார்க்கப்படுகிறது. தேவப்பிரசன்னம் மூலம் ஜோதிடர்கள் பல்வேறு விஷயங்களை மக்களுக்கு இறையாற்றல் மூலமாக கணித்து சொல்லி இருக்கிறார்கள்.

தேவப்ரசன்னத்தின் தன்மையை உணர ஓர் உண்மை சம்பவத்தை கூறுகிறேன். தமிழக கேரளா எல்லையில் உள்ள ஒரு பிரபல கோவிலில் விசித்திரமான விஷயம் நடந்து கொண்டிருந்தது. அங்கே திருவிழாவிற்கு முன் கொடி ஏற்றம் நடைபெறும் சமயம் கொடி ஏற்றுபவர் சுருண்டு விழுந்து இறந்துவிடுவார்...!

இதனால் திருவிழா நடக்காமல் தடைபடும். அடுத்த சிலவருடம் கழித்து மீண்டும் முயற்சி செய்வார்கள். அவ்வாறே கொடி ஏற்றுபவர் இறந்துவிடுவார். ஒன்று அல்ல இரண்டு அல்ல நான்கு மரணம் பார்த்த பிறகு அந்த கோவிலுக்குள் செல்லவே அனைவரும் பயந்து ஒதுங்கினார்கள்.

பதினைந்து வருடங்களுக்கு பிறகு அந்த ஊர் மக்கள் மீண்டும் திருவிழா கொண்டாட முன் வந்தார்கள். அதற்கு முன் சிலரின் வழிகாட்டுதலில் தேவப்பிரசன்னம் பார்த்துவிடுவது நல்லது என முடிவு செய்தார்கள். தெய்வம் தங்கள் மேல் கோபமாக இருக்கிறது போல என நினைத்து அதற்கு பிராயச்சித்தம் என்ன என தெரிந்துகொள்ளவும் ஆர்வமாய் இருந்தார்கள்.

தேவப்பிரசன்னம் பார்க்கும் நாளும் வந்தது. தேவப்பிரசன்னம் பார்த்து விட்டு அந்த ஜோதிடர்கள் குழு தலைவர் சொன்னார் “ அடுத்த மாதம் திருவிழா வைக்கலாம். நானே கொடி ஏற்றுகிறேன்..!”

கிராம மக்கள் திகைத்தார்கள். உங்களை போல....

“அடுத்த மாதம் திருவிழா வைக்கலாம். நானே கொடி ஏற்றுகிறேன்..!” என அந்த ஜோதிடர் கூறியவுடன் ஊர் மக்கள் திகைத்தார்கள்.

நீங்கள் வெளியூரை சேர்ந்தவர் கொடி ஏற்றும் பொழுது ஏதேனும் விபரீதம் நடந்தால் எங்கள் ஊருக்கு அது அவப்பெயராக ஆகிவிடும். மேலும் சாஸ்திரம் கற்ற உங்களுக்கு விபரீதம் நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ஊர் முக்கியஸ்தர்கள் கூறினார்கள்.

“நானாக இம்முடிவை எடுக்கவில்லை. ஜோதிட சாஸ்திரத்தை பயன்படுத்தியே நான் இந்த முடிவுக்கு வந்தேன். மேலும் இறைவனின் சன்னிதியில் நடக்கும் இறப்புக்கு ஒரு விடையை நாம் கண்டறிய வேண்டும். என்னை கொடியேற்ற அனுமதியுங்கள்” என ஜோதிடர் கூறினார்.

திருவிழா கொடியேற்றும் நாளும் வந்தது. கோவில் புதுபொலிவுடன் காட்சியளிக்கப்பட்டது. ஊர் மக்கள் பக்தியுடனும் ஒருவித பய உணர்வுடன் குழுமி இருந்தனர். கோவிலின் உள்ளே கொடி பூஜை செய்யப்பட்டது. செண்டை மேழம் முழுங்க, துந்துபிகளும் கொம்பும் ஒலிக்க கொடி கோவிலின் பலிபீடம் அருகே கொண்டு வரப்பட்டது.

கொடியேற்றும் தருணம் வந்தது. மேழம் உச்ச நிலையில் வாசிக்கப்பட்டது. கொடிமரத்தையும் கொடியையும் ஜோதிடர் விழுந்து வணங்கினார்.

வணங்கி எழுந்தவர் கொடியேற்றாமல் திடிரென செண்டை மேழம் வாசிக்கும் குழுவில் இருந்த ஒரு முதியவரின் இரு கைகளை பிடித்துக் கொண்டார். மங்கள ஒலியுடன் இருந்த கோவில் திடீரென நிசப்தமாகியது.

என்ன நடக்கிறது என மக்கள் புரியாமல் பார்க்க.. ஜோதிடர் அந்த முதியவரை பார்த்து கேட்டார், “ஏன் இப்படி செய்கிறீகள்? இறைவன் சன்னிதிக்கு முன் ஏன் இந்த விபரீதம்? உண்மையை இறைவன் முன்னால் கூறுங்கள்”

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த முதியவர் பெருங்குரல் எடுத்து அழுதார். சில நிமிடங்களுக்கு பிறகு அந்த முதியவர் உண்மையை கூறத் துவங்கினார். 

“இக்கோவிலில் சிறுவயது முதல் நான் மேழம் வாசிக்கிறேன். என் பன்னிரெண்டு வயது முதல் செண்டை மேழம் கற்று வந்தேன். செண்டை தாளத்தில் ஒருவிதான வாசிப்பு முறையை என் குருவிடம் கற்றேன். . செண்டை வாசிக்கும் பொழுது எந்த நிகழ்ச்சிக்கு வாசிக்கிறோமோ அந்த நிகழ்ச்சியின் தலைவருக்கு (கர்த்தா) இரத்த நாளங்களில் ஒருவித தாளம் ஏற்பட்டு இறுக்கம் அடைந்து முடிவில் இருதயம் செயல் இழந்து இறந்து விடுவார். இசையின் மூலம் தற்காப்பு கலையை ரகசிய பயிற்சியாக கற்றுக்கொண்டேன். என் சிறிய வயதில் அதை சோதிக்க எண்ணி இக்கோவில் கொடியேற்றத்தில் பயன்படுத்தினேன். என் வாசிப்பால் ஒரு விளைவு ஏற்படுவதை கண்டு எனக்குள் ஒருவித பெருமிதம் அடைந்தேன்.

யாரும் இதை கண்டு பிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் மீண்டும் மீண்டும் இங்கே செய்து பார்த்தேன். என் வாசிப்பே பலரது மரணத்திற்கு காரணமாக இருந்தது. இனி இதுபோல செய்ய மாட்டேன், இனிவரும் காலத்தில் யாருக்கும் இம்முறையை கற்றுக்கொடுக்க மாட்டேன். இறைவனும் ஊர்மக்களும் என்னை மன்னிக்க வேண்டும். ” எனக் கூறு ஊர் மக்கள் முன்னிலையில் தரையில் விழுந்து வணங்கினார்.

அவரை தவிர்த்து பிறர் வாசிக்க, கொடியேற்றப்பட்டது. திருவிழா துவங்கியது. ஜோதிடரின் திறமையை அனைவரும் பாராட்டினார்கள். இது எப்படி சாத்தியம் என வியப்புடன் ஜோதிடரிடம் கேட்டார்கள்.

“தேவப்பிரசன்னம் வைக்கும் பொழுது சத்ருஸ்தானம் மற்றும் அபஸ்தானம் என்னும் இடத்தில் மாந்தியுடன் சனி என்ற கிரகம் அமர்ந்து கேடு பலனை அளித்து வந்தது. சனி அமர்ந்த ராசி காற்று ராசி இவைகளை முடிவு செய்து பார்க்கும் பொழுது முதிய வயதுடைய(சனி) மேழம்(காற்று-ஒலி) வாசிக்கும் ஒருவரால் அமங்கலம் ஏற்படுகிறது என்பதை கண்டுகொண்டேன். உதய லக்னத்திற்கு சனி நான்காம் இடத்தில் இருந்தது என்பதையும் குறித்துக் கொண்டேன்.

கொடியேற்றும் நாளில் பலிபீடத்தின் அருகே நின்று வாசித்தவர்களில் ஒரு முதியவர் நான்காவது நபராக நின்று வாசித்துக் கொண்டிருந்தார். அவர் இச்செயலுக்கு காரணம் என பிரசன்ன ரீதியாக முடிவு செய்து கண்டறிந்தேன்” என்றார்.

பதினைந்து வருடத்திற்கு பிறகு ஊர்மக்கள் மகிழ்ச்சியுடன் திருவிழாவை கொண்டாடினார்கள்.

தேவப்பிரசன்னம் என்பது ஒரே ஒரு ஜோதிடர் மட்டும் பார்க்கப்படும் ஜோதிடம் அல்ல. குறைந்தபட்சம் ஐந்து ஜோதிடர்களாவது இருப்பார்கள். மேலும் அந்த ஜோதிடர்கள் எல்லாம் மிகப்பெரிய ஜோதிடர்களாகவும் சாஸ்திரம் நன்கு கற்றவர்களாகவும் இருப்பார்கள். இக்குழு ஜோதிடர்கள் தவிர அவர்களுக்கு உதவியாளர்கள், அவ்வுதவியாளர்களுக்கு உதவியாளர்கள் என ஜோதிட பட்டாளமே இணைந்து ஒரு கோவிலுக்கு தேவப்பிரசன்னம் பார்க்கும்.

இக்குழுவுக்கு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்து அவர் முன்னிலையில் பிரசன்ன ஜாதகத்தில் கண்ட விஷயங்களை நான்கு நாட்கள் விவாதிப்பார்கள் பிறகே கருத்துக்களை வெளியிடுவார்கள்.

தேவப்பிரசன்னம் பார்க்கும் முறை மிகவும் வித்தியாசமானது. பல்வேறு வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் தழுவி பார்க்கப்படும் ஜோதிட முறையாகும். சாதாரண மனிதனுக்கே ஜோதிடம் பார்க்க ஜோதிடர் எத்தனையோ சூத்திரங்களை பயன்படுத்த வேண்டி இருக்கிறது அல்லவா? அப்படிப் பார்த்தால் கடவுளுக்கே ஜோதிடம் பார்க்க எவ்வளவு ஆற்றலுடன் பார்க்க வேண்டும் என யோசித்துப் பாருங்கள்.

ஜோதிடரிடம் நாம் ஆருடம் பார்க்க செல்லும் பொழுது நாம் வரும் நேரத்தை கொண்டு அவர் கிரகங்களை கணிப்பார். நாம் அவரின் இடம் விட்டு அகன்றதும் ஜோதிடர் நம்மை பற்றிய விஷயங்களை விட்டு அடுத்தவருக்கு ஜோதிடர் பார்ப்பார்.

ஆனால் தேவப்பிரசன்னம் பார்க்கும் ஜோதிடர்கள் ஜோதிடத்தை கோவில்களில் வைத்து தான் பார்க்க வேண்டும் என்பதி நியதி. எளிமையாக சொல்லுவதானால் மனிதன் ஜோதிடரை தேடி செல்ல வேண்டும், தேவப்பிரசன்னத்தில் ஜோதிடர் கடவுளை தேடிப்போக வேண்டும்...!

கோவிலை நோக்கி பிரசன்னம் பார்க்க வீட்டை விட்டு கிளம்பும் நேரம், அச்சமயம் நடக்கும் சம்பவங்கள் (நிமித்தம்) துவங்கி கோவிலில் பிரசன்னம் பார்த்துவிட்டு, வீடு வந்து சேரும் வரை ஜோதிடர் அனைத்தையும் குறிப்பு எடுத்துக்கொள்வார். அவர் வீடு முதல் வீடு வரை நடந்த நிகழ்வுகள் கோவிலில் ஏற்பட்ட ஆருடம் இவை அனைத்தையும் ஒன்றினைத்து அடுத்த நாள் ஆய்வு செய்து முடிவு செய்வார்கள்.

இதில் மிக ஆச்சரியமான விஷயம் என்னவெனில் தேவப்பிரசன்னம் குழுவாகத்தான் பார்ப்பார்கள் என்றேன் அல்லவா? அவ்வாறு குழுவில் இருக்கும் அனைத்து ஜோதிடர்களும் வீடு முதல் வீடு வரை நிகழ்வுகளை கவனிப்பார்கள். வெவ்வேறு ஊரில் இருந்து வந்து செல்லும் ஜோதிடர்களுக்கு, அடுத்த நாள் அனைவரும் கூடி விவாதிக்கும் பொழுது எல்லோருக்கும் நடந்த சம்பவம் மிகச்சரியாக ஒன்று போலவே இருக்கும். அனைவரும் பார்த்தது, கேட்டது, பேசியது என ஏதோ புரோக்கிராம் செய்தது போல இருக்கும்...!

நிமித்த அடிப்படையில் அனைவருக்கும் ஒன்றுபோலவே இருப்பதை கொண்டு இயற்கை அனைவருக்கும் பொதுவாக ஏதோ ஒரு கருத்தை கூற விரும்புகிறது என கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளுவார்கள்.

கோவிலுக்கு செல்லும் பொழுது நடக்கும் நிகழ்வுகள் இறந்தகாலத்தையும், கோவிலில் கிடைக்கும் பிரசன்னம் நிகழ்காலத்தையும், கோவில் முதல் வீடு வரை வரும் நேரம் நடக்கும் நிகழ்வுகள் எதிர்காலத்தையும் குறிக்கும் என்பது தேவப்பிரசன்னத்தின் அடிப்படை சூத்திரமாகும்.

உதாரணமாக கோவிலுக்கும் செல்லும் நேரத்தில் அசிங்கமான அருவெறுப்பான விஷயங்களை காண நேர்ந்தால் கோவிலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது அவமானங்கள் நடந்து உள்ளது என்று குறித்துக்கொள்வார்கள். கோவிலில் கிடைக்கும் பிரசன்னத்தின் விடை முன்பு நடந்த செயலால் தற்சமயம் இறைநிலை பாதிக்கப்பட்டு உள்ளதா அல்லது எவ்வாறு இருக்கிறது என்பதை உணர முடியும். பின்பு வீட்டிற்கு வரும் சூழல் நடக்கும் சம்பவங்கள் இனிவரும் காலத்தில் இறை நிலை கோவிலில் எவ்வாறு மேம்படுத்த முடியும் அல்லது நிலைபடுத்த முடியும் என்பதை காட்டும்.

தேவப்பிரசன்னம் பார்க்கும் நாள் பிறகு இரு நாட்கள் எடுத்துக்கொண்டு ஜோதிட குழு விவாதம் செய்யும். பிறகு அவர்கள் செய்த ஆய்வை பொதுமக்கள் முன்னிலையில் மட்டுமே வெளியிட வேண்டும் என்பது நியதி. கோவில் நிர்வாகத்திடமோ அல்லது கோவில் சார்ந்த ஆட்களிடமோ பிரசன்ன பலன்களை தனியே கூறக்கூடாது. அவர்களையும் பொதுமக்களுடன் நிற்க சொல்லியே கூற வேண்டும் என்பது தேவப்பிரசன்னம் கூறும் நியதியாகும்.

ஜோதிடர்கள் குழு கூறும் பலன்களை பொதுமக்களுக்குள் அமர்ந்திருக்கும் ஜோதிடம் தெரிந்தவர்கள் குறுக்கு விசாரணை செய்வார்கள். அதற்கு ஜோதிட குழு தக்க பதில் கூற வேண்டும்.

நாங்கள் தேவப்பிரசன்னமே பார்க்கும் ஆற்றல் கொண்டவர்கள் என ஆணவம் இல்லாமல், பொதுமக்கள் கேட்கும் கேள்விக்கு மிகப்பணிவுடன் பதில் கூற வேண்டும்.

லக்னத்தில் இவ்வாறு கிரகம் இருந்ததற்கு இன்ன பலன் என நீங்கள் கூறுகிறீர்கள் ஏன் இப்பலன் இவ்வாறு இருக்கக்கூடாது என ஒருவர் கேள்வி எழுப்பினால், ஏன் அவ்வாறு செயல்படாது என மிகவும் தன்மையாக விளக்க வேண்டும்.

ஜாதக சக்கரத்தில் பன்னிரெண்டு வீடுகள் இருப்பது நீங்கள் பார்த்திருக்கலாம். மனிதனுக்கு பன்னிரெண்டு வீடுகளில் ஏற்படும் பலன்களை ஜோதிடர் ஆய்வு செய்வார். லக்னம், தனம், தைரியம், சுகம் என பல்வேறு தன்மைகளில் ஜோதிடம் மனித வாழ்க்கையை பன்னிரெண்டு வகையான அடிப்படையில் பிரிக்கிறது.

தேவப்பிரசன்னம் செய்ய முதலில் யாகங்கள் செய்து, ஜாதக சக்கரத்தை கோவிலின் வடக்கு பகுதியில் வரைந்து கொள்வார்கள். பிறகு இறைவனை ஜாதக சக்கரத்தின் மையத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அச்சமயம் கோவில் கருவறையை பூட்டிவிடுவார்கள். இறை ஆற்றல் ஜாதக சக்கரத்தில் இருக்கும் அதனால் கருவறையை மூடிவிடும் சம்ப்பிரதாயம் உண்டு.

ஓம் என ஒரு பக்கம் எழுதப்பட்ட தங்கத்தால் ஆன ஒரு காசு, சில பூக்கள் மற்றும் அக்‌ஷதை இவற்றை ஒரு குழந்தையின் கையில் அளிப்பார்கள். கூட்டத்தில் உள்ள 11 வயதுக்கு உட்பட்ட குழந்தையாக தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் கையில் கொடுத்து 12 ராசி கட்டங்களில் ஏதேனும் ஒரு ராசிகட்டத்தில் வைக்க சொல்லுவார்கள். மூன்று முறை ராசி கட்டத்தை வலம் வந்து அந்த குழந்தை எந்த ராசியில் கையில் உள்ள காசை

வைக்கிறதோ அதுவே லக்னம் என கொள்ளப்படும்.

காசு இருக்கும் ராசி முதல் வீடாக கொண்டு பண்ணிரண்டு ராசிகளின் பலன்களை கிரகிப்பார்கள். இச்செயலை ஒரு பல ஜோதிடர்கள் கொண்ட குழு செய்வார்கள்.

கேரளாவில் இன்றளவும் பல்வேறு இடங்களில் தேவப்பிரசன்னம் சிறப்பாக செயல்படுகிறது. பிரபலமான கோவில் என்றால் குருவாயூரை உதாரணமாக கூறலாம்