சனி, 26 மே, 2018

பிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்

bharathegopu.blogspot.com

பிரதோஷம் என்றால் என்ன ?
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.
மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.
பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.
இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும்.
இனி பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம். இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.
எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் “சனிப் பிரதோஷம்” என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் “மஹாப் பிரதோஷம்” என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை.
பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.
நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?

பிரதோஷம் மகிமை
அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் என்ன என்று பார்போம்;

ஞாயிறு பிரதோஷம்:
சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
திங்கள் பிரதோஷம்:
பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.
செவ்வாய் பிரதோஷம்:
செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.
பலன்:
செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.
புதன் பிரதோஷம்:
புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.
வியாழன் பிரதோஷம்:
குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.
வெள்ளி பிரதோஷம்:
சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
சனி மஹா பிரதோஷம்:
சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.
கண்டிபாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள் :
வருடத்திருக்கு வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.
தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் :- மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அவர் அவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷம் :- கவலை தீரும்.

வியாழன், 24 மே, 2018

கேது காலம்

முழு யோகம் தரும் கேது காலம்!!!

ராகு காலம் நம் அனைவருக்கும் தெரியும்;ராகு காலத்தில் எந்த ஒரு சுபகாரியத்தையும் ஆரம்பிக்கக் கூடாது;அப்படி ஆரம்பித்தால்,அது வெற்றியைத் தராது;என்பது பல நூற்றாண்டுகளாக  நிரூபிக்கப்பட்ட ஜோதிட+ஆன்மீக உண்மை;
அதேசமயம்,ராகு மஹாதிசை ஒருவருக்கு நடைபெற்றால் அல்லது ராகுவுடன் ஒரு கிரகம் இணைந்திருந்து அந்தக் கிரகத்தில் திசை நடைபெற்றால் அல்லது ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை/சுவாதி/சதயம் நட்சத்திரங்களில் ஒரு கிரகம் நின்று திசை நடத்தினால் அவர்களுக்கு ராகு காலம் மிகுந்த யோகம் தரும் காலம் ஆகும்;(அனுபவம் பேசுகிறது);திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கும்;சுவாதி நட்சத்திரம் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கும்;சதயம் நட்சத்திரம் கும்பராசியில் பிறந்தவர்களுக்கும் ராகு காலம் யோக காலமாகவே இருக்கிறது;
சிலருக்கு இராகு முதல் 9 ஆண்டுகள் கெடுதியையும்,அடுத்த 9 ஆண்டுகளில் நன்மையையும் தருவதும் உண்டு;
ராகு மஹாதிசை பலருக்கு கோடீஸ்வர யோகத்தைத் தருகின்றது;அப்படி மகத்தான செல்வ வளம் வரும் போது,ஒரு போதும் அந்த ராகு மஹாதிசை நடைபெறும் நபரின் பெயரில் சொத்துக்கள் வாங்கக் கூடாது;மீறினால்,ராகு மஹாதிசையின் இறுதி மூன்று ஆண்டுகளில் அனைத்தையும் இழக்க வைப்பார்;
ராகுவுக்கு நேர் எதிர்க் கிரகம் கேது;
ராகு தனது மஹாதிசை 18 வருடங்களில் முதல் பாதியான 9 ஆண்டுகளில்  யோகங்களை அள்ளிக் கொடுப்பார்;அடுத்த பாதியான 9 ஆண்டுகளில் அந்த யோகங்களை முழுமையாக அனுபவிக்க விடாமல் தடுக்கவும் செய்வார்;அதனால் தான் ராகு கொடுத்துக் கெடுப்பார் என்ற ஜோதிட அனுபவ உபதேசம் நமக்குக் கிடைத்திருக்கிறது;
கேது தனது மஹாதிசை 7 வருடங்களில் முதல் பாதியான மூன்றரை ஆண்டுகளில் அது இருக்கும் இடத்தைக் கெடுப்பார்;பைத்தியம்,மரண பயம்,பேய் மற்றும் பிசாசு தொல்லை அல்லது அனாவசியமான உயிர் பயத்தைத் தருவார்;அடுத்த மூன்றரை ஆண்டுகளில் அதற்கு எதிரான சூழ்நிலையைத் தருவார்;அதாவது,சித்தர் தொடர்பு,கோவில் வழிபாடு,இறைசக்தியின் அருளைப் பெறுதல்,ஞானமார்க்க ஈடுபாடு போன்றவைகளில் கொண்டு போய்விடுவார்;சிலருக்கு இது மாறியும் நடைபெறும்;முதல் மூன்றரை ஆண்டுகளுக்கு ஞான மார்க்க ஈடுபாடு,சித்தர்த் தொடர்பு என்று இருக்க வைத்துவிட்டு,அடுத்த மூன்றரை ஆண்டுகளில் பைத்தியமான மனநிலை,மரண பயம்,பேய் மற்றும் பிசாசு தொல்லையைத் தருவதும் உண்டு;ஜோதிட அனுபவத்தில் கண்டறிந்தது இது;
கிழமைகள் 7! ஆனால் கிரகங்களோ 9!!
ராகுவுக்கும்,கேதுவுக்கும் கிழமைகள் இல்லை;அதற்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் ஒரு முகூர்த்தநேரம் வரை(90 நிமிடங்கள்) ராகு காலம் செயல்படுகின்றது;இந்த ஒன்றரை மணி நேரத்தில் ஜோதிட ஞானம் உள்ளவர்கள்,எந்த ஒரு முக்கியமான காரியத்தையும் செய்ய மாட்டார்கள்;எப்படி ராகு விஷமான கிரகமோ,அதே போல ராகு காலமும் விஷத்தன்மை நிரம்பிய நேரமாக செயல்படுகின்றது;இந்த உண்மையை இந்துக்களாகிய நாம் கடந்த 20,00,000 ஆண்டுகளாக அனுபவத்தில் கண்டிருக்கின்றோம்;வெறும் 2016 ஆண்டுகள் வயதுடைய கிறிஸ்தவத்தால் இதைப் புரிந்து கொள்ள முடியுமா?
ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை
திங்கட்கிழமை ராகு காலம் காலை 7.30 முதல் 9 மணி வரை
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மதியம் 3 முதல் 4.30 மணி வரை
புதன்கிழமை ராகு காலம் மதியம் 12 முதல் 1.30 மணி வரை
வியாழக்கிழமை ராகு காலம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை
வெள்ளிக்கிழமை ராகு காலை காலை 10.30 முதல் 12 மணி வரை
சனிக்கிழமை ராகு காலம் காலை 9 முதல் 10.30 மணி வரை
இதே போல,கேது காலம் என்று ஒன்று உண்டு;கேது காலமும் ஒரு முகூர்த்தகாலம் வரை செயல்பட்டு வருகின்றது;ராகு காலம் முழு விஷ காலமாக இருப்பதால்,கேது காலம் முழு யோகம் தரும் மற்றும் சுபக்காரியங்களுக்கு ஏற்ற காலமாக இருக்கின்றது;
ஞாயிற்றுக்கிழமை கேது காலம் இரவு 10.30 முதல் 12 மணி வரை
திங்கட்கிழமை கேது காலம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை
செவ்வாய்க்கிழமை கேது காலம் இரவு 9 முதல் 10.30 மணி வரை
புதன்கிழமை கேது காலம் மாலை 6 முதல் 7.30 மணி வரை
வியாழக்கிழமை கேது காலம் இரவு 7.30 முதல் 9 மணி வரை
வெள்ளிக்கிழமை கேது காலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை
சனிக்கிழமை கேது காலம் மதியம் 3 முதல் 4.30 மணி வரை
கேது ஒரு சுபக்கிரகம் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது;உங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய கேது காலத்தைப் பயன்படுத்துங்கள்;சகல வெற்றிகளையும் அடையுங்கள்;
ராகு காலம் பிரபலமாக இருப்பதைப் போல,கேதுகாலமும் பிரமடையும் என்பதை தமிழ் மொழியின் தந்தையும்,சித்தர்களின் தலைவரும்,சித்த மருத்துவத்தின் தலைமை மருத்துவருமாகிய அகத்தியமகரிஷி தெரிவித்திருக்கின்றார்;
ராகு காலத்தில் இருந்து சரியாக 6 மணி நேரம் அதிகப்படுத்தினால் வருவது கேது காலம் என்பதை உணருங்கள்;

வியாழன், 17 மே, 2018

திதி என்பது

ஒரு மாதம் என்பது சந்திரனின் 15 நாள் வளர்பிறை நாட்களையும்,15 நாள் தேய்பிறை நாட்களையும் கொண்டு கணக்கிடப்படுகிறது. அப்படியான ஒரு மாதத்தில் 14 நாட்கள் வளர்பிறைத் திதிகளும்,14 நாட்கள் தேய்பிறை திதிகளும் ஏற்படுகிறது மீதம் 2 நாட்கள் ஒன்று அமாவாசை, மற்றொன்று பவுர்ணமி ஆகிறது . அப்படியான இத்திதி தினங்களால் அனைத்து ராசியினருக்கு ஏற்படும் பலன்களும், எந்தெந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றியும் காண்போம்.
astrology
பிரதமை :
பிரதமைத் திதியில் பிறந்தவர்கள் சுக வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் பெண்கள் மீது சற்று அதிக மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இத்திதியில் சுபகாரியங்களான யாகங்கள், ஹோமங்கள் திருமணம், கிரஹப்பிரவேசம் போன்றவற்றைச் செய்யலாம். இத்திதிக்கான தேவதை அக்னி பகவான்.
மகரம், துலாம் ஆகிய ராசியில் பிறந்தவர்கள் இந்த திதி தினங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இத்திதியில் பிறந்தவர்கள் சிவ பெருமானை வழிபட்டு வர நன்மை பயக்கும்.
துவிதியை :
துவதியைத் திதியில் பிறந்தவர்கள் நேர்மைக் குணம் மிக்கவர்களாக இருப்பார்கள், இவர் எவ்வகைக் கருவிகளையும் திறம்பட கையாளும் திறமை மிக்கவர்களாக இருப்பார்கள்.இத்திதியும் கோவில் விசேஷங்கள், யாகங்கள் போன்ற சுபக் காரியங்களைச் செய்ய ஏற்றதாகும். இத்திதிக்கு அதிபதி பிரம்ம தேவன்.
தனுசு, மீன ராசிக்காரர்கள் இத்திதி தினங்களில் கவனமாக செயல்படுவது நலம். இத்திதி தினத்தில் அம்பிகையை வணங்க எல்லாம் சுபமாகும்.
astrology
திரிதியை :
திரிதியை இவர்களின் மனதில் தீமையான எண்ணங்கள் மேலோங்கும் சற்று முரட்டுக்குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இத்திதி தினத்தில் கல்வி பயிலுதல், வேதம் கற்றல், கலைகளைப் பயிலாத தொடங்குதல் போன்ற காரியங்களைச் செய்யலாம். இத்திதியின் அதி தேவதை சக்தி தேவி.
சிம்ம, மகர ராசிக்காரர்கள் இத்திதி தினங்களில் கவனமாக செயல் பட வேண்டும். அம்மனை துதிக்க அனைத்தும் நலமாகும்.
சதுர்த்தி :
சதுர்த்தி திதியில் பிறந்தவர்கள் தங்கள் செயல் பாடுகளில் ரகசியம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். பேராசை எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மிகவும் தந்திர சாலிகளாக இருப்பார்கள். இத்திதி தினங்கள் கடன்களை அடைக்க, நெடு நாள் பகையைச் சமரசம் செய்து கொள்ள, வேத சாத்திரங்களைக் கற்க ஏற்றதாகும்.இத்திதியின் அதி தேவதை எம தர்மன்.
ரிஷப, கும்ப ராசிக்காரர்கள் இத்திதி தினங்களில் எச்சரிக்கையுடன் செயல் படுவது அவசியம். விநாயகரை வழிபட வினைகள் நீங்கும்.
Pillayar
பஞ்சமி :
பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் பல நேர்மறையான குணங்களை பெற்றிருப்பார்கள். சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாகவும், நீண்ட ஆயுள் உடையவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக கோவில் சம்பந்தமான சுபக் காரியங்களைச் செய்ய ஏற்ற திதியாகும். ஜாதகத்தில் நாக தோஷம் கொண்டவர்கள் இத்திதியில் புற்றுள்ள கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தால், அவர்களின் நாக தோஷம் நீங்கும். இத்திதியின் தேவதை நாக தேவதைகள்.
மிதுன, கன்னி ராசிக்காரர்கள் இத்திதி தினங்களில் கவனமாக செயலாற்ற வேண்டும்.
சஷ்டி :
சஷ்டி திதியில் பிறந்தவர்கள் வீரம் மிக்கவர்களாக இருப்பார்கள். பணம், பொன் போன்றவற்றின் மீது அதிக ஆசைக் கொண்டவர்களாக இருப்பார்கள். உறவினர்களாலும், நண்பர்களாலும் அதிகம் விரும்பப்படுவார்கள். இதுவும் கோவில் சம்பந்தமான சுபக் காரியங்கள்,கோவில் குளங்கள் சீரமைத்தல் போன்ற செயல்களை செய்ய ஏற்ற திதியாகும். இத்திதிக்கான அதி தேவதை கார்த்திகேயன்.இத்திதியில் முருகனுக்கு விரதமிருந்து, அவரை வழிபட புத்திரப் பேறில்லாமல் தவிப்பவர்களுக்கு அப்பேறு கிட்டும்.
இத்திதிகளில் மேஷம், சிம்ம ராசிக்காரர்கள் கவனமாக செயலாற்ற வேண்டும்.
murugan manthiram
சப்தமி :
சப்தமி திதிகளில் பிறந்தவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள். கற்றோர்களையும், முதியவர்களையும் மதிக்கத் தெரிந்தவர்கள்.நற்குணங்கள் நிறைந்தவர்கள். வெளியூர்,வெளிநாடு,கோவில்களுக்கு தீர்த்த யாத்திரை போன்ற பயணங்கள் செல்ல ஏற்ற திதியாகும். இத்திதியின் அதி தேவதை சூரிய பகவான்.
கடக ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய திதியாகும். நாராயணரை வழிபட அனைத்தும் நலம் பயக்கும்.
astrology
அஷ்டமி :
அஷ்டமி திதியில் பிறந்தவர்கள் சிறந்த பேச்சாற்றலைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மனைவிக்கு கட்டுப்பாடு நடக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். கிருஷ்ணா பரமாத்மா அவதரித்த திதியாகும். புதிய கலைகள் கற்க, ஆயதப் பயிற்சி, போர்க் கலைகள் போன்றவற்றை கற்கத் தொடங்க ஏற்ற நாளாகும். இத்திதியின் அதி தேவதை சிவ பெருமான்.
கன்னி, மிதுன ராசிக்காரர்கள் கவனமாக செயலாற்ற வேண்டிய திதி. கிருஷ்ணா பரமாத்மாவை வணங்குங்கள்.
astrology
நவமி :
நவமி திதியில் பிறந்தவர்கள் தைரியமிக்கவர்களாக இருப்பார்கள். கலைகளில் அதிக ஈடுபாடு இருக்கும். தங்கள் எதிரிகளை ஒழிப்பார்கள். தீய பழக்க, வழக்கங்களை ஒழிக்க, பிறர் மீது மாந்திரிகம் பிரயோகிக்க ஏதுவான திதியாகும். இத்திதியின் அதி தேவதை துர்கை அம்மன் .
சிம்ம, விருச்சிக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய திதி. ஸ்ரீ ராமா பிரானை வழிபடவேண்டும்.
தசமி :
தசமி திதியில் பிறந்தவர்கள் விஞ்ஞான அறிவாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். தொழில்,வியாபாரங்களில் மிகுந்த செல்வம் ஈட்டுவார்கள். திருமணம்,பெயர்சூட்டல்,கோவில் குடமுழுக்கு போன்ற சுபக் காரியங்கள் செய்ய ஏதுவான திதியாகும். இத்திதியின் அதி தேவதை எம தர்மன்.
சிம்ம, விருச்சிகக் காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய திதி தினம். சக்தி தேவியை வணங்க அனைத்தும் நலமாகும்.
amman
ஏகாதசி :
ஏகாதசி திதியில் பிறந்தவர்கள் பெண்கள் மீது மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். தர்மம் மீறியச் செயல்களை செய்வார்கள். இதுவும் சுபக் காரியங்கள் அனைத்தும் செய்ய ஏற்ற திதி தினமாகும்இத்திதியின் அதி தேவதை ருத்திரன்.
தனுஷ் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய திதி.பெருமாளை வணங்குங்கள்.
துவாதசி :
துவாதசி திதியில் பிறந்தவர்கள் செல்வமிக்கவர்களாக இருப்பார்கள்.பெண்களால் அதிகம் விரும்பப்படுவார்கள்.
கோவில் சம்பந்தமான காரியங்கள்,சிற்பம் ஓவியம் போன்ற கலைகளைப் பயில ஏற்ற திதியாகும்.இத்திதியின் அதி தேவதை விஷ்ணு.
மகர, துலா ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய திதி. முருகனை வணங்க அனைத்தும் ஜெயமாகும்.
Lord Murugan
திரியோதசி :
இத்திதியில் பிறந்தவர்கள் நல்ல மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுற்றமும், நட்டோம் அதிகம் பெற்றிருப்பர். இதுவும் தெய்வீக,சுபக் காரியங்கள் அனைத்தும் செய்ய ஏற்ற திதியாகும். இத்திதியின் அதி தேவதை சிவ பெருமான்.
ரிஷப, கும்ப ராசிக்காரர்கள் கவனமுடன் செயலாற்ற வேண்டிய திதி. சிவனை வழி பட வேண்டும்.
சதுர்தசி :
இத்திதியில் பிறந்தவர்கள் நல்ல உடல், மன பலம் கொண்டவர்களாக இருப்பார்கள்.தங்கள் நினைத்ததை நடத்திக் காட்டுவார்கள். கல்வி கற்க தொடங்க, புதிய கலைகள் பயில ஏற்ற திதியாகும். இத்திதியின் அதி தேவதை காளி.



செவ்வாய், 15 மே, 2018

நவக்கிரக மந்திரங்கள்




 நவகிரக மந்திரங்கள்

ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனியாக மூல மந்திரம் உண்டு.

 அமைதியாகவும் தெளிவாகவும் ஆழ்ந்த கவனத்தோடும் ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய மந்திரங்களை குறைந்தபட்சம் மும்மூன்று முறைகள் உச்சரிக்க வேண்டும்.

ஒன்பது முறைகளும் உச்சரிக்கலாம். அவகாசம் இருப்பவர்கள் 27 முறைகளும், 54 முறைகளும், 108 முறைகளும் உச்சரிக்கலாம்.

குறைந்த அளவு உச்சரித்தாலும்கூட நிறைந்த ஈடுபாட்டையும், ஆழ்ந்த கவனத்தையும் செலுத்துவது அவசியமாகும்.

🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

🔯சூரிய மந்திரம்:

ஜபா குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்.

செம்பருத்திப் பூவின் நிறம் உடையவன்; காச்யபரின் புதல்வன்; மிகவும் பிரகாசம் உடையவன்; இருட்டின் பகைவன்; எல்லாப் பாவங்களையும் அழிப்பவன்; அப்பகலவனைப் பணிகிறேன்.

🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

🔯சந்திர மந்திரம்:

ததிசங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி சசினம் ஸோமம் சம்போர் மகுடம் பூஷணம்.

தயிர், சங்கு, பனி போன்று வெண்மையானவன்; பாற்கடலிலிருந்து தோன்றியவன். முயல் சின்னம் உடையவன். ஸோமன் என்று வேதத்தில் அழைக்கப் பெறுபவன். சிவனது ஜடாமகுடத்தின் அணிகலன். அச்சந்திரனைப் பணிகிறேன்.

🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

🔯செவ்வாய் மந்திரம்:

தரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத் காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்.

பூமி தேவியின் கர்ப்பத்தில் உதித்தவன்; மின்னலைப் போன்ற ஒளியினன்; குமாரன்; சக்தி ஆயுதம் தரிப்பவன். அந்த மங்களன் எனும் செவ்வாயைப் பணிகிறேன்.

🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

🔯புதன் மந்திரம்:

ப்ரியங்கு கலிகா ச்யாமம் ரூபேண அப்ரதிமம் சுபம்
ஸெளம்யம் ஸெளம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்.

ஞாழல் மொட்டுப்போன்ற ஒளியுடையவன். உருவத்தின் அழகில் உவமை அற்றவன். சந்திரனின் குமாரன். ஸெளம்யமானவன். அந்த புதனைப் பணிகிறேன்.

🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

🔯குரு மந்திரம்:

தேவானாம்ச ருஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகஸ்ய தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.

தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ஆசாரியன்; பொன்னன்; மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குபவன் அந்தப் பிருஹஸ்பதியை வணங்குகிறேன்.

🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

🔯சுக்கிர மந்திரம்:

ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்.

பனி, முல்லை, தாமரை நூல் போன்ற வெண்மையான நிறமுடையவன்; அசுரர்களின் குரு; எல்லாச் சாத்திரங்களையும் உரைப்பவன். பிருகுவின் புதல்வன்; அந்தச் சுக்கிரனை வணங்குகிறேன்.

🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

🔯சனி மந்திரம்:

நீலாஞ்ஜன ஸமானாபம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்சரம்

மை போன்று கறுத்தவன். சூரியனின் குமாரன். யமனின் தமயன். சூரியனுக்கும் சாயா தேவிக்கும் பிறந்தவன். மெதுவாகச் செல்லும் அந்தச் சனியை நமஸ்கரிக்கிறேன்.

🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

🔯ராகு மந்திரம்:

அர்த்த காயம் மஹாவீரம் சந்த்ராதித்ய விமர்த்தகம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்.

பாதி உடல் கொண்டவன்; பெரும் வீரன்; சந்திர சூரியர்களைப் பீடிப்பவன்; அகர ஸ்திரீயின் கர்ப்பத்தில் உதித்தவன். அந்த ராகுவைப் பணிகிறேன்.

🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

🔯கேது மந்திரம்:

பலாசபுஷ்ப ஸங்காசம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்.

புரசு மரத்தின் பூப்போன்ற செந்நிறம் கொண்டவன். நட்சத்திரங்கள், கிரகங்களில் தலையானவன். கோபி; கோபத்தின் உருவுடையோன்.

அந்தக் கேதுவைப் பணிகிறேன். இந்த மந்திரங்களை உச்சரிப்பது உங்கள் மனதில் தெளிவை ஏற்படுத்துவதற்காகவும், வாழ்க்கையில் நலம் உண்டாவதற்காகவும் தான் என்பதில் சந்தேகமில்லை.

இவற்றை உச்சரிப்பதோடு மட்டுமிராமல் ஒரு முக்கியத்துவம் கொடுத்து உங்களால் இயன்ற அளவுக்கு மற்றையோருக்கு நன்மைகளைச் செய்வதிலும், சங்கடப்படுகின்றவர்

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
🚩🔯⚜🕉பக்தி🕉⚜🔯🚩
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

திங்கள், 14 மே, 2018

யோனி பொருத்தம் என்றால்

முதலில் யோனி என்றால் என்ன? உடற்கூறு, தாம்பத்யம் பற்றி முழுமையாக நாம் அறிந்துகொள்ளவேண்டியது மிக மிக அவசியம். புதிய தலைமுறை உருவாக இந்த யோனி மிகவும் முக்கியம்.
பெண்ணின் அந்தரங்கமே “யோனி”. இதற்கேற்ப பொருத்தம் பார்க்கப்பட வேண்டும் என்பதே ஜோதிட விதி. ஜோதிட சாஸ்திரம்.
ஏன் இதை ஆணுக்குப் பார்க்கக்கூடாது? என்ன செய்ய! ஜோதிடம் கூறும் விதிமுறை அப்படி.
பெண்ணுக்குத்தான் ஆணின் ஜாதகப் பொருத்தம் பார்க்கப்படவேண்டும்.
ஆம், பெண்ணுக்குதான் ஆணின் பொருத்தம் பார்க்கப்பட வேண்டும்.
ஆணுக்கு பெண்ணின் ஜாதகம் பார்க்கக் கூடாது.
இதுல என்னங்க இருக்கு ரெண்டும் ஒண்ணுதானே...என்பவர்களுக்கு,
பெண்ணின் நட்சத்திரத்திற்கு ஆணின் நட்சத்திரம் 2 என வைத்துக்கொள்வோம். ஆனால் ஆணின் நட்சத்திரத்திற்கு அது 27 வது நட்சத்திரமாக வரும். இப்போது வித்தியாசம் புரிகிறது அல்லவா!
சரி, இப்போது யோனி பொருத்தம் ஏன் பார்க்கப்பட வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
“பசி வர பத்தும் பறந்து போகும்” - இது பழமொழி. நாம் நினைப்பதுபோல் இது வெறும் வயிற்று பசிக்கு மட்டுமல்ல, உடற்பசிக்கும் சேர்த்துத்தான் இது சொல்லப்பட்டிருக்கிறது.
ஆமாம்... நிறையாத வயிறு, நிறைவில்லாத மனம், திரும்பக் கேட்காத கடன், இறைக்காத கிணறு, சுரக்காத மடி, களை எடுக்காத வயல், கவனிக்கப்படாத பிள்ளை இவை அனைத்தும் பாழாகும் என்பது முன்னோர் வாக்கு.
சந்ததியை உருவாக்க முடியாதவர்கள், வாழ்க்கையானது விவாகரத்தில்தான் வந்து நிற்கும்.
சரி என்னதான் தீர்வு?
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு “யோனி” உண்டு அதன் படி இருவரும் இணைந்தால், நல்ல மணவாழ்வு ஏற்படும்.
அஸ்வினி:- ஆண் குதிரை
பரணி:- ஆண் யானை
கார்த்திகை:- பெண் ஆடு
ரோகிணி:- ஆண் நாகம்
மிருகசீரிடம்:- பெண் சாரை
திருவாதிரை:- ஆண் நாய்
புனர்பூசம்:- பெண் பூனை
பூசம்:- ஆண் ஆடு
ஆயில்யம்:- ஆண் பூனை
மகம்:- ஆண் எலி
பூரம்:- பெண் எலி
உத்திரம்:- பெண் எருது
அஸ்தம்:- பெண் எருமை
சித்திரை:- பெண் புலி
சுவாதி:- ஆண் எருமை
விசாகம்:- ஆண் புலி
கேட்டை :- ஆண் மான்
மூலம்:- பெண் நாய்
பூராடம்:- ஆண் குரங்கு
உத்ராடம்:- கீரி,மலட்டு பசு
திருவோணம்:- பெண் குரங்கு
அவிட்டம்:-பெண் சிங்கம்
சதயம்:- பெண் குதிரை
பூரட்டாதி:- ஆண் சிங்கம்
உத்ரட்டாதி:- பெண் பசு
ரேவதி:- பெண் யானை
இப்போது உங்கள் யோனி மிருகம் எது என அறிந்து கொண்டிருப்பீர்கள்.
இதில் எதை எதனுடன் இணைக்கலாம் என்பதை நான் கூறினால் பாடம் நடத்துவது போல ஆகிவிடும். எனவே எளிமையான வழி ஒன்றைச் சொல்லுகிறேன்.
தாவர உண்ணிகள், தாவர உண்ணிகளோடு சேர்க்கலாம், மாமிசபட்சினிகள், மாமிசபட்சினிகளோடு சேரலாம். அதேசமயம் , நாய்க்கு பூனை பகை, சிங்கம், புலிக்கு பசு, எருது, மான், ஆடு, குதிரை யானை பகை, பாம்புக்கு எலி பகை, எலிக்கு, கீரி பகை, குரங்குக்கு, ஆடு பகை.
சரி இது திருமண பொருத்ததிற்கு மட்டுமா என்றால்
அதற்கு மிக மிக முக்கியம். அதேசமயம் உங்கள் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் என பலவிஷயங்களுக்கும் முக்கியம்.
சரி... இந்தப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் நடந்தால் என்னாகும்?
சந்ததியை உருவாக்கும் “தாம்பத்யம்” மிக முக்கியம் அல்லவா. இதில் பகை மிருக அமைப்பு, தாம்பத்யத்தில் நாட்டம் இல்லாமலும், வெறுப்பு எண்ணமும் உண்டாக்கும்.
தாம்பத்ய திருப்தி என்பது மிகவும் அவசியம். பகை மிருக அமைப்பு ஒருவருக்கு திருப்தியும், மற்றவருக்கு ஏமாற்றத்தையும் தரும்.
இன்றைய காலகட்டத்தில் மணமுறிவும், தவறான தொடர்புகளும் அதிகரிக்க இந்த பொருந்தாத இணைப்பும் ஒரு காரணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
எனவே, திருமணப் பொருத்தத்தின்போது இந்த மிக முக்கிய பொருத்தங்களை மட்டுமாவது கவனமாகப் பாருங்கள் , அவை:- ரஜ்ஜுயோனி, கணம், இம்மூன்றும் மிகமிகமுக்கியம்.
ஆணுக்கு ஆண் யோனியும், பெண்ணுக்கு பெண்யோனியும் ... மிக அற்புதம்
பெண்ணுக்கு ஆண் யோனியும், ஆணுக்கு பெண்யோனியும் :-மனைவிக்கு அடங்கிப்போவார்கள்.
இருவரும் ஆண் யோனி :- அதீத முரட்டுத்தனம்
இருவரும் பெண் யோனி:- ஏமாற்றம்
எனவே ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது, இவற்றில் கவனம் செலுத்துங்கள். பொருத்தம் உடலிலும் வேண்டும்... புரிந்தவன் மணமாகவேண்டும் என்று கவியரசர் பாடியிருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஞாயிறு, 13 மே, 2018

நீர் தத்துவ ராசி

Wednesday, January 9, 2013

நீர் தத்துவ ராசிகளின் தன்மையும் , சுய ஜாதகத்தில் வலிமை பெரும் பொழுது தரும் நன்மையும் !



பொதுவாக கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கடகம் சர நீர் தத்துவ ராசியாகவும், விருச்சிகம் ஸ்திர நீர் தத்துவ ராசியாகவும் , மீனம் உபய நீர் தத்துவ ராசியாகவும் , இயற்கையால் வகை படுத்த படுகிறது , ஒருவருடை சுய ஜாதகத்தில் மேற்கண்ட நீர் தத்துவ ராசிகள் நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் .

சுய ஜாதக  ரீதியாக ஒருவருக்கு நீர் ராசிகளான கடகம் , விருச்சிகம், மீன ராசிகள் நல்ல நிலையில் இருந்தால் , ஜாதகர் நல்ல மனம் கொண்டவராகவும், பரந்த மனப்பான்மை உள்ளவராகவும் , தனது எண்ணத்தால் அனைத்ததையும் சாதிக்கும் பேராற்றல் கொண்டவராகவும் இருப்பார் , குறிப்பாக ஜாதகரின் மன நிலையை பற்றி தெளிவாக தெறிந்து கொள்ள இந்த பாவகங்கள் மிகுந்த உதவி புரியும் , சிறந்த ஆன்மீகவாதிகள் , தன்னம்பிக்கையாளர்கள் , மனோ தத்துவ நிபுணர்கள் , சிறந்த பேராசிரியார்கள் , கல்வியாளர்கள் , மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசு அதிகாரிகள் , அரசியல்வாதிகள் , சிறந்த தலைமை பொறுப்பை வகிக்கும் தலைவர்கள் போன்ற அமைப்பில் பெரிய பதவிகளை மேற்க்கண்ட ராசிகள் சுய ஜாதகத்தில் வலிமை பெறும் பொழுது , மிக எளிமையாக பெற்று தந்துவிடுகிறது .

கடகம் சர நீர் ராசி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் யோக பலன்கள் :

ஜாதகர் மிகுந்த யோகசாலி , பெருந்தன்மையான குணம் ஜாதகருக்கு சிறு வயது முதற்கொண்டே அமைந்து விடும் , தனது நடத்தையாலும் , செய்கையாலும் அனைவராலும் விரும்ப படும் குணத்தை பெற்று இருப்பார் , மேலும் ஜாதகர் மனதில் நினைக்கும் எண்ணங்கள் யாவும் எவ்வித தடையும் இல்லாமல் வெற்றி பெறும் , குறிப்பாக ஆய கலைகள் 64 லும் சிறந்து விளங்கும் ஆற்றல் இயற்கையாக அமைந்து விடும் .

 பூலோகத்தில் வாழ்வதற்கு உண்டான சொகுசு வீடு , வண்டி வாகனம் , நல்ல உணவு , மன மகிழ்விற்கு உண்டான வசதிகள் , நான்குகால் ஜீவன்கள் பெருக்கம் , குதிரை , செல்ல பிராணிகள் வாங்கும் யோகம் , மன திருப்தியுடன் செய்யும் காரியங்கள் , பொன் பொருள் சேர்க்கை , ஆடம்பர பொருட்களின் சேர்க்கை , போதும் என்ற மன நிலை , பொது மக்கள் நீடித்த ஆதரவு என சகல வழிகளிலும் , சகல வசதி வாய்ப்புகளையும் அள்ளித்தரும் ராசியாக கடகம் அமைகிறது , ஒருவருடைய சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டிய ராசிகளில் முதன்மை வகிப்பது இந்த கடக ராசியே என்றால் அது மிகையாகாது , ஆனால் சர லக்கினத்திற்கு இது பொருந்தாது .

விருச்சகம் ஸ்திர  நீர் ராசி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் யோக பலன்கள் :

 குடும்ப வாழ்க்கையில் ஜாதகர் நல்ல நிலையில் இருக்கவும் , இல்லறவாழ்க்கையில் இருந்து கொண்டே ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் அமைப்பை  தரும் , திருமண வாழ்க்கையில் நிறைவான மகிழ்ச்சியையும் , திருமணத்தின் மூலம் யோக வாழ்க்கையையும் தரும் ராசி இந்த விருச்சக ராசியாக கருதலாம் , விருச்சககத்தில் நீர் தத்துவம் நல்ல நிலையில் இருப்பின் , ஒன்று நல்ல இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும் அல்லது ஆன்மீக வாழ்க்கையில் மிக பெரிய வெற்றியை தரும் , மனித வாழ்க்கையின் சூட்சம விஷயங்களை புரிய வைக்கும் ராசி. 

மனதில் தெளிவையும் , மன உறுதியையும் , தார்மீக சிந்தனையும் , இறை நிலையின் புரிதலையும் தரும் , ஜாதகருக்கு இவை அனைத்தும் திடீர் எனவே நிகழும் , வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஜாதகருக்கு திடீர் திடீர் எனவே நிகழ்த்தும் , நேற்றுவரை சாமான்யவராக இருந்த நபர் , இன்று உலகம் போற்றும்  நபராக வளம் வரும் யோகம் உண்டாகும் , பொதுமக்கள் ஆதரவை அளவில்லாமல் பெற்று தரும் , இவரின் பேச்சுக்கு மக்கள் அனைவரும் கட்டுப்படும் தன்மை உண்டாகும் , வெளிநாடுகளில் இருந்து வெளி ஊர்களில் இருந்தும் ஜாதகருக்கு பெயரும் புகழும் உண்டாகும்  ஆனால் ஸ்திர லக்கினத்திற்கு இது பொருந்தாது .

மீனம் உபய நீர் ராசி  சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் யோக பலன்கள் :

வாழ்க்கையை வாழ பிறந்தவர்கள் , இவர்களின் மன நிலை எதையும் தாங்கும் தன்மை கொண்டது , சாதாரண மனிதனாக இருந்து வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளை படைக்கும் பேராற்றல் கொண்டவர்கள் , மேலும் தனது மன ஆற்றல் மூலம் புதிய பல கண்டுபிடிப்பை உலகிற்கு தரும் தன்மை கொண்டவர்கள் , இவர்களின் கண்டு பிடிப்பு , மக்களுக்கு அன்றாட தேவைகளை சிறப்பாக நிறைவேற்றி கொண்டு இருக்கிறது , எதற்கும் அஞ்சாதவர்கள் , தைரியம் , துணிவு , தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் , சுயநலம் பாராமல் பொது சேவையில் சிறந்து விளங்கும் தன்மை பெற்றவர்கள் .

ஆசிரிய பணிகளில் சிறந்து விளங்கும் யோகம் பெற்றவர்கள் , சமுதயத்தில் பல மாற்றங்களுக்கு அடிகோலும் நபர்கள் , மக்களின் சிந்தனையும் , நோக்கத்தையும்  எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் , இவர்களின் பேச்சும் , செயல்களும் அனைவருக்கும் நன்மையே வாரி வழங்கும் , குறிப்பாக பெண்களின் ஜாதகத்தில் இந்த ராசி நல்ல நிலையில் இருப்பது அவசியம் , இல்லை எனில் குடும்பத்தில் மன நிம்மதி என்பதே இருக்காது , போற்றுவார் போற்றட்டும் , தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் எல்லாம் கண்ணனுக்கே  என்ற எண்ணம் கொண்டவர்கள் , இருப்பதை வைத்து  நிறைவாக வாழும் தன்மை பெற்றவர்கள் ஆனால் உபய லக்கினத்திற்கு இது பொருந்தாது .

வெள்ளி, 11 மே, 2018

சாமி சிலை



இந்த மூன்று சிலைகளை பூஜை அறையில் வைத்தாலே போதுமானது !!
ஐஸ்வர்யம் கிடைக்க இந்த மூன்று சிலைகளை பூஜையறையில் வையுங்கள் !!


🌟 நாம் குடியிருக்கும் வீட்டில் இப்பொழுதெல்லாம் பூஜையறை என்றே தனியொரு அறையை கட்டி விடுகிறோம். அப்படி இல்லாத பட்சத்தில் செல்ப், கபோடு போன்ற அமைப்புகளை உருவாக்கி அதனுள் பூஜைறையை வைத்துக் கொள்கிறோம்.

🌟 பூஜையறை என்றால் அதில் அனைத்து தெய்வங்களின் படங்களும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பெரும்பாலான வீடுகளில் உள்ள பூஜையறைகள் பல தெய்வ சிலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பலரும் பல வித்தியாசமான மற்றும் அழகிய தெய்வ சிலைகளை வாங்கி வந்து பூஜையறையில் வைப்பார்கள். தெய்வ சிலைகள் வீட்டில் இருப்பது மிகவும் நல்ல விஷயமாகும்.

🌟 அதிலும் இந்த மூன்று தெய்வங்களின் சிலைகள் உங்கள் வீட்டில் இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டமும், ஐஸ்வர்யமும் கிடைக்கும்.

🌟 அதாவது, மஞ்சள் அல்லது தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர் சிலையை வைத்திருந்தால், வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கும்.

🌟 ஆலமரம், மாமரம் அல்லது வேப்ப மரத்தாலான விநாயகர் சிலையை பூஜையறையில் வைத்திருப்பது மிகவும் நல்லது. இத்தகைய சிலையை வீட்டில் வைத்திருந்தால், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சந்தோஷமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

🌟 பூஜையறையில் சிவபெருமான் தியானம் செய்வது போன்ற சிலையை வைத்திருப்பது மிகவும் நல்லது. ஆனால், சிவபெருமான் நடனம் ஆடுவது போன்ற சிலையை வைத்திருக்கக்கூடாது.

🌟 ஒன்றிற்கு மேற்பட்ட சிவனின் சிலைகள் பூஜையறையில் இருந்தால், அது வீட்டில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். எனவே, ஒரே ஒரு சிவனின் சிலையை மட்டும் வைத்து வணங்குங்கள்.





புதன், 2 மே, 2018

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் - அபூர்வ தகவல்கள்... 

து ஓர் அழகிய வனம். மூலிகைகளும் பெரும் விருட்சங்களும் அடர்ந்த அந்த வனத்தில் ரிஷிகள் பலர் வாழ்ந்து வந்தார்கள். தினமும் அவர்கள் செய்யும் வேள்விகளாலும், அவர்கள் எழுப்பும் வேதகோஷங்களாலும் பெரும் சாந்நித்தியம் அடைந்திருந்த அந்த வனத்தை ஒட்டி ஓடியது யமுனை!

ஒருநாள், ராஜகுமார்கள் சிலர், தங்கள் நண்பர் களுடனும் தாயாதிகளுடனும், உறவினர்களுடனும் அந்த வனத்தை ஒட்டிய யமுனை தீரத்துக்கு நீராட வந்தார்கள். சிலபல நாழிகைகள் நதியில் நீராடி மகிழ்ந்தபின் பலரும் கரையேறியபின்னர், இருவர் மட்டும் கடைசியாக கரைக்கு வந்தனர்.

மாமனும், மைத்துனனுமான அவர்கள் கரையேறும்போது, வயோதிக அந்தணர் ஒருவர் அவர்களை வணங்கி, “உங்களைப் பார்த்தால், கருணை நிறைந்தவர்களாகத் தெரிகிறது. எனக்கு பசிக்கிறது. உணவிடுவீர்களா?” என்று கேட்டார்.

அந்த இருவரில் ஒருவர் கிருஷ்ணன்; மற்றவன் அர்ஜுனன். வயோதிகரை உற்று நோக்கிய கிருஷ்ணன் அவரை இனம்கண்டு கொண்டார். பின்னர் புன்னகையுடன் அவரிடம் கேட்டார், “அக்னி பகவானே! உமக்கேன் இந்த வேடம்? வேண்டியதை எங்களிடம் நேரிடையாகவே கேட்டிருக்கலாமே?” என்றார்.

“பரம்பொருளே! உலகுக்கே படியளக்கும் உமக்குத் தெரியாததா? சுவேதசி மன்னருக்காக துர்வாச மகரிஷி தொடர்ந்து நூறாண்டுகள் தீ வளர்த்து யாகம் செய்தார் (12 ஆண்டுகள் எனவும் சில புராணங்கள் சொல்கின்றன). நூறாண்டுகள் தொடர்ந்து நெய்யையும் ஹவிஸையும் (வேள்வி யில் இடும் பொருட்கள்) உண்டதால், எனக்கு வயிறு மந்தமாகி, இயல்பான செயல்களைச் செய்யமுடியவில்லை. இதற்குத் தீர்வு,  மூலிகைகள் நிறைந்த இந்த காண்டவ வனத்தைச் சாப்பிடுவதுதான். ஆனால், அதை எரிக்கச் சென்றால், வருணன் வந்து என் தீ நாக்குகளை அணைத்துவிடுகிறான். என் பிணி தீர உதவுங்கள்” என வேண்டினார் அக்னி.

அக்னியே பிரதானம். அக்னி மந்தமானால் உலக வாழ்க்கை ஸ்தம்பிக்கும். பிரபஞ்சம் குளிர ஆரம்பித்தால் சிருஷ்டி முதல் அனைத்துக் காரியங்களும் தடைப்படும். கண்ணுக்குத் தெரியாத இழையால் பிணைக்கப்பட்ட அனைத்துமே ஒவ்வொன்றாக பாதிக்கப்படும். இதையெல்லாம் ஒரு விநாடியில் யோசித்த கிருஷ்ணர், கூடவே ஒரு தந்திரமும் செய்தார் அர்ஜுனனுக்காக.

“அக்னியே! நாங்கள் நீராடவே வந்தோம். எங்களிடம் ஆயுதம் ஏதுமில்லை. என்ன செய்வது?” என யோசிப்பது போல நடித்தார். 

உடனே, எடுக்க எடுக்க அம்புகள் குறையாத அம்பறாத் தூணியையும், காண்டீபம் எனும் வில்லையும் அர்ஜுனனுக்குக் கொடுத்தார் அக்னி பகவான். அப்புறமென்ன... காண்டீபத்தைக் கொண்டு வருணன் உள்ளே நுழையமுடியாத அளவுக்கு அம்புகளாலேயே பந்தலிட்டு (ஒரு சொட்டு நீர் கூட புகாத வண்ணம்), வனத்தை எரிக்க அக்னிக்கு உதவினான் அர்ஜுனன். முன்னதாக ரிஷிகள் முதலானோர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.மூலிகைகள் நிறைந்த அந்த வனத்தை 21 நாட்கள் எரித்து தீர்த்தார் அக்னி.
பத்ம ஹஸ்த பரம் ஜ்யோதி: பரேசாய நமோ நம:
    அண்டயோனே மஹாஸாக்ஷின் ஆதித்யாய நமோநம:
கமலாஸன தேவேச பானு மூர்த்தே நமோ நம:
    தர்மமூர்த்தே தயாமூர்த்தே தத்வமூர்த்தே நமோ நம:
ஸகலேசாய ஸூர்யாய சாயேசாய நமோ நம:
-  ஸ்ரீசூர்ய ஸ்தோத்ரம்


பிறகு ஸ்ரீகிருஷ்ணர், “பசியா, வாழ்வியலா என்றால், பசி போக்குவதே முதல் காரியம். அக்னி பசியாறுவது லோக கல்யாணம். இனி, உங்களுடைய தவபலத்தால் மீண்டும் காண்டவ வனத்தைப் புதுப்பிக்கும் சக்தியையும் வழங்கு கிறேன்” என்று காண்டவ வன ரிஷிகளுக்கு அருள்புரிந்தார்.

இந்த 21 நாட்களே அக்னி நட்சத்திரமாக இன்றளவும் தொடர்கிறது. பூமத்திய ரேகைக் கும், கடகரேகைக்கும் நடுவில் சூரியன் பயணிக்கும் காலம்; புவி மையக் கோட்பாட்டின் அடிப்படையில், பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் வரை சூரியன் பிரவேசிக்கும் காலம், அக்னிநட்சத்திர காலம் ஆகும்.

இந்த காலத்தில் கார்த்திகை நட்சத்திரத்தின் ஊடாக சூரியன் பயணிக்கும் காலம், ‘கத்ரி காலம்' என பண்டைய பாரத வானியலாளர்கள் கணித்துள்ளனர். சந்திரனும் பூமியும் சூரியனுக்கு அருகில் இருப்பதால் அக்னி நட்சத்திரத்தில் வெப்பம் அதிகம் என்பது விஞ்ஞானம்.

கார்த்திகையும் கத்திரியும்! 

தாரகாசுரனை அழிக்கவேண்டி அனைத்து தேவர்களும் மஹாதேவனான ஈஸ்வரனிடம் முறையிட்டனர். அவர்களின் இன்னல்களைக் கண்டு சினந்து, தனது நெற்றிக்கண்ணை திறந்தார் சிவனார். அப்போது ஆறு ஒளிப் பிழம்புகள் வெளிவந்தன. அவற்றின் பிரகாசத்தை அன்னை பார்வதியால்கூட தாங்க இயலவில்லையாம்! 

அந்த ஆறு ஒளிப் பிழம்புகளையும் வாயுவிடம் ஒப்படைத்தார். வாயு அவற்றைக் கொண்டு இமயமலையின் அடியில் உள்ள சரவணப் பொய்கையில் சேர்க்க, அங்கே தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாக, ஆறு  தாமரை மலர்களில் தவழ்ந்தன. அவர்களை கார்த்திகைப் பெண்கள் எடுத்துவளர்த்தனர். அவ்வேளையில் தீப்பொறிகளின் வெம்மை, அதாவது குழந்தைகளின் வெம்மை - உக்கிரம் தணிகிறது. கார்த்திகைப் பெண்களிடம் இந்த உஷ்ணம் (அக்னி) இடம்பெயர்கிறது. பின்னர், கார்த்திகைப் பெண்கள் உமையிடம் குழந்தை களைச் சேர்க்க, அவள் அவர்களை ஆனந்தத்தில் அணைக்க, ஆறு குழந்தைகளும் ஒன்றாகி ஆறுமுக னாக, அழகனாக, முருகனாக தோற்றம் தந்தனர். 

கார்த்திகைப் பெண்கள் கார்த்திகை நட்சத்திர மாக மாறும் பேறு பெறுகிறார்கள். மங்காத ஒளியுடன் அக்னியின் அம்சமாக மாறி ஜொலிக்கிறார்கள். கார்த்திகை நட்சத்திரத்துக்கு அக்னியே அதிபதி. கார்த்திகை நட்சத்திரத்தின் ஊடாக சூரியன் பிரவேசிப்பதே கத்திரி எனப் படும். கத்திரிக்கு முந்தைய காலம் முன்கத்ரி. பிந்தைய காலம் பின் கத்திரி. கத்ரியின் உக்ரம் தணிக்க தணிகைவேலனை வழிபடுவது சிறப்பு. (பவிஷ்யோத்ரபுராணம்).
அக்னி நட்சத்திரத்தில் ...

என்ன செய்யலாம்! என்ன செய்யக்கூடாது?

 சிவன், விஷ்ணு, அம்மன், குமரக்கடவுள் வழிபாடு செய்யலாம். குமரன், சிவன் அக்னியின் அம்சம். மேலும் சீதளா தேவியை வணங்குவதால் அம்மை போன்ற நோய்கள் நீங்கும். 

கோடையைத் தணிக்க வேப்பிலை, மஞ்சள் கொண்டு வீட்டை தூய்மைப்படுத்தவேண்டும். ஏழைகள், அந்தணர்கள் இயலாதவர்களுக்கு விசிறி, காலணி, குளிர்ந்த நீர், மோர், இளநீர், பானகம், தயிர்சாதம் கொடுப்பது விசேஷம். 

கோயில்களில் இறைவன், இறைவிக்கு திருமஞ்சனம், அபிஷேகம் செய்வதும் கண்குளிர காண்பதும் சிறப்பு.

விஷ்ணு கோயில்களில் வசந்த உற்சவங்கள் நடைபெறும். பகல் பத்து, ராப்பத்து உற்சவங் களும் நடைபெறும். பரணிக்கு உரிய துர்கை, ரோஹிணிக்கு உரிய பிரம்மா இருவருக்கும் சந்தனக்காப்பு செய்வது சிறப்பு. 

இந்த காலங்களில் உஷ்ணநோய் பாதிக்காமல் இருக்க, அரிசி மாவினால் சூரிய நவகிரக கோலமிட்டு, ‘அஸ்வத் த்வஜாய வித்மஹே! பாஸ ஹஸ்தாய தீமஹி! தன்னோ சூர்ய ப்ரசோதயாத்!’ என சூரிய காயத்ரீ சொல்லி வழிபடுவது சிறப்பு.

சிவாலயங்களில் சிவனின் மேல் உறி கட்டி அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலயத்தைத் தொங்கவிட்டு, அதற்குள் வெட்டி வேர், விளாமிச்சை வேர், பச்சிலை, ஜடாமஞ்சி, பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்த நீரை நிரப்புவார்கள். அந்த நீரின் துளிகள், கலயத்தின் துளை வழியாக லிங்கத் திருமேனியில் சொட்டு சொட்டாக விழும் வண்ணம் செய்வர். இப்படி, அனைத்து கோயில்களிலும் ஜல தாரை வைப்பதால் இயற்கை உபாதைகளோ, பூமி அதிர்வோ ஏற்படாது என்பது ஐதீகம்.

இந்த நாட்களில் செடி- கொடி மரங்களை வெட்டக்கூடாது, நார் உறிக்கக்கூடாது, விதை விதைக்கக் கூடாது, கிணறு, குளம், தோட்டம் அமைக்கக் கூடாது. நிலம் மற்றும் வீடு பராமரிப்பு 
பணிகளைச் செய்யக்கூடாது. அதேபோல்  நீண்ட தூர பிரயாணம், பூமி பூஜை, கிரகப் பிரவேசம், மொட்டை போடுதல் ஆகியவற்றையும் தவிர்க்கவேண்டும்.

அக்னி பூஜை!

இரண்டு முகம் கொண்டவன் அக்னி. யாகத் தீயில் ஆசார்யர், யஜமானர் இருவரும் இடும் ஹவிஸையும் ஏற்பதற்காக இரண்டு முகங்கள். தீ வளர்த்து ஹோமம் செய்பவர் பண்டிதர்.
அதன் பலனை அனுபவிப்பவர் யஜமானர்.

அக்னிக்கு இரு மனைவிகள் ஸ்வாஹா, ஸ்வதா. மங்கள காரியங்களுக்கு ஸ்வாஹா என்றும், பித்ரு காரியங்களுக்கு ஸ்வதா என்றும் கூறி மந்திரங்களை உச்சரிப்பார்கள்.

ரிக் வேதம் அக்னியைக் கொண்டே ஆரம்பிக்கிறது. அக்னியை கொண்டே முடிகிறது. முக்கிய குணம் - பிரகாசம், ரூபம் - ஹிரண்மயம் (தங்கத்தைப் போன்றது).

அக்னியே தேவதைகளுக்கும், ஹோமம் செய்பவர்களுக்கும் பாலமாக இருந்து, நாம் வழங்கும் ஹவிஸை (ஹோமத் தீயில் இடும்பொருட்களை) கொண்டு சேர்க்கிறார். அக்னி தேவனுக்கு ஏழு நாக்குகள். அதனால் ஏழு தினங்களுக்கு அவரை பூஜிப்பர். அதாவது, பூஜையறையில் செங்காவியால் அக்னியின் கோலத்தை வரைந்து வாசனை மலர்களால் அர்ச்சித்து தீபமேற்றி வழிபட வேண்டும்.  பிரசாதமாக முறையே ஞாயிறு - பாயசம், திங்கள் - பால், செவ்வாய் - தயிர் மற்றும் வாழைப்பழம், புதன் - தேன் மற்றும் வெண்ணெய், வியாழன் - சர்க்கரை மற்றும் நெய், வெள்ளி-வெள்ளை சர்க்கரை மற்றும் பானகம், சனி - பசுநெய் மற்றும் தயிர்சாதம் என நைவேத்தியம் படைத்து வழிபடவேண்டும். 

சூரியபகவானைப் போற்றுவோம்!

வானுலகமாகிய சுவர்க்கத்தில் சூரியன், இடைவெளியில் மின்னல், மண்ணுலகில் அக்னி என மூவுலகிலும் நிலைத்திருப்பது சூரியனே என்கின்றன ஞானநூல்கள்.

நமது பேரண்டத்தை ஒரு முட்டையைப் போல கற்பனை செய்யுங்கள். அதன் மேல் பகுதி: பூமி முதலான ஏழு உலகங்கள் (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜலலோகம், தபோலோகம், சத்தியலோகம்). கீழ்ப் பகுதி: அதல, சுதல, விதல, ரசாதல, தலாதள, பாதாள, மஹாதள லோகங்கள் ஆகும்.  

இவற்றுள், பூமியின் மத்தியில் மேரு பர்வதம் உள்ளது. அந்த மலைக்கு பொன்மயமான சிகரங்கள் நான்கு உண்டு. ஒவ்வொரு சிகரமும் ஆயிரம் யோசனை விஸ்தீரணம் கொண்டது. அவை: சௌமனஸம் - பொன் மயம், ஜோதிஷ்கம் - பத்மராகம் மயம், சித்துரம் - சர்வதாது மயம், சாந்திரமாசம் - வெள்ளி மயம். இந்த நான்கில் உத்தராயனத்தில் சௌமனஸம் எனும் சிகரத்தில் இருந்தும், தக்ஷிணாயனத்தின்போது ஜோதிஷ்கம் என்ற சிகரத்திலிருந்தும் உதயமாகிறார் சூரியன். விஷூக்களின்போது இரண்டுக்கும் நடுவிலிருந்து உதயமாகிறார்.

சூரியனை தேவாதிதேவர்களும் வழிபட்டு அருள்பெறுகிறார்கள். உதய நேரத்தில் இந்திரன், மதியப் பொழுதில் வாயு, அஸ்தமன நேரத்தில் வருணனும் சந்திரனும், அர்த்தஜாமத்தில் குபேரன், இரவின் முடிவில் மும்மூர்த்தியர் ஆகியோர் வழிபடுகிறார்களாம். அதேபோல் அஷ்டதிக்கிலும் அஷ்டதிக் பாலகர்கள் வழிபடுவதாகப் புராணங்கள் சொல்லும்.

இப்படி தேவர்களாலும், மும்மூர்த்திகளாலும் பூஜிக்கப்படும் சூரியனை நாமும் நாளும் வழிபட்டு வந்தால், பிணிகள் நீங்கும், ஆயுள் பெருகும். சரி! அவரை வணங்கும்போது என்ன சொல்லி வணங்கலாம்?
  அந்த ஸ்லோகங்கள்:

 ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
  ஸுவர்ணஸத்ரூசோ பானு: ஹிரண்யரேதா திவாகர:
   ஹரிதச்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர்மரீசிமான்
       திமிரோன்மதன: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்:

செவ்வாய், 1 மே, 2018

சினைப்பை நீர்க்கட்டி

சினைப்பைநீர்க்கட்டி:

பெண்ணுக்குமாதவிடாய்ச் சுழற்சி
ஒழுங்கற்று இருந்தால்,முதலில்
அதைச்சீராக்கசிறப்பு உணவு அவசியம். பெரும்பாலும் இன்று. சீரற்ற
மாதவிடாய்க்கு
சினைப்பைநீர்க்கட்டிதான் முதல்காரணமாக
இன்றுகற்பிக்கப்பட்டு உடனடியாக, இரத்த இன்சுலின் அளவைக் குறைக்கும்மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
சினைப்பைநீர்க்கட்டிகள்
(polycysticovary) குறித்த தேவையற்ற
அலாதிபயமும் உள்ளது. மாதவிடாய்
நாட்களின் ஒழுங்கின்மை தவிர வேறு பிரச்னைகள் சினைப்பை
நீர்க்கட்டிகளால் கிடையாது.
கருமுட்டையானது கருப்பையைப்பற்றும் நாள்தாமதப்படுவதுதான்
ஒழுங்கற்றமாதவிடாய்க்குக்காரணமே
தவிர, மலட்டுத்தன்மைக்கு சினைப்பைநீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது. ”பாலிசிஸ்டிக்ஓவரி”,என்று தெரிந்தால், செய்யவேண்டியது எல்லாம், உணவில் நேரடி இனிப்புப்பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்துநிறைய உள்ளகீரைகள், லோகிளைசிமிக்(Low Glycemic foods)உணவுகள்அ திகம்எடுத்துக்கொள்வதும்தான்.

இது தவிர பூண்டுக்குழம்பு, எள்ளுத்துவயல், கருப்புத்தொலி உளுந்துசாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்கஉதவிடும். சுடுசாதத்தில், வெந்தயபொடி1 ஸ்பூன் அளவில் போட்டு மதிய
உணவை எடுத்துக்கொள்வதும் நல்லது.

மாதவிடாய்வரும் சமயம் அதிகவயிற்று
வலி உள்ள மகளிர்எனில்
சோற்றுக்கற்றாழையின் மடலினுள் உள்ள, ஜெல்லிபோ ன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதம்சாப்பிட்டு
வரவேண்டும். சிறியவெங்காயம் தினசரி 50கிராம் அளவாவது உணவில் சேர்ப்பதும் pcod பிரச்சினையை போக்கிடஉ தவும்.

Opinion 2

சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால் பதறவோ அல்லதுபயப்படவோ வேண்டியதில்லை. உணவு, உடற்பயிற்சி,மருந்துகள் மூலம் சினைப்பை நீர்க் கட்டி பிரச்னைக்குமுழுமையாகத் தீர்வு காண முடியும். முழுமையாகக்குணப்படுத்த முடியும்.

பிரச்னைக்குக் காரணம் என்ன? சினைப்பை நீர்க்கட்டி பிரச்னைஉள்ள பெண்கள், முதலில் உடலின் எடையைக் குறைக்கவேண்டும். ஏனெனில் உடலின் கூடுதல் எடை, கபத்தின்அடையாளம். சித்த மருத்துவத்தின் அடிப்படையில் அதிக கபம்காரணமாக சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன.

நவீன மருத்துவமும் இதற்கு "ஹைப்பர்இன்ஸýலினிமியா'வைத்தான் காரணம் எனக் கருதி சர்க்கரைநோய்க்கான மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.

எடை குறைய...: தினமும் 3 கி.மீ. தொலைவுக்கு வேகமானநடை, பிராணாயாமப் பயிற்சி உள்ளிட்ட யோகாசன பயிற்சிஆகியவை உடல் எடையைக் குறைக்க உதவும். மூலிகைத்தைல பிழிச்சல், மூலிகைப் பொடிகள் மூலம் மசாஜ், பஞ்சகர்மாசிகிச்சை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

உணவு முறை என்ன?

பசியைப் போக்கும் தன்மை உடைய, அதே சமயம் உடல்எடையை அதிகரிக்காத உணவைச் சாப்பிடத் தொடங்கவேண்டும். அதாவது, ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாகவேஉயர்த்தும் உணவை ("லோ கிளைசமிக் ஃபுட்ஸ்') சாப்பிடவேண்டும். கைக்குத்தல் அரிசி, கீரை உள்ளிட்ட நார்ச்சத்துள்ளகாய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும். வெந்தயம்,பூண்டு, தொலி உளுந்து, சிறிய வெங்காயம்ஆகியவைசினைப்பை நீர்க்கட்டிகளை நீக்க இயல்பாகவே பெரிதும்உதவும்.

சோற்றுக் கற்றாழை, விழுதி, மலைவேம்பு மற்றும் அசோகுஆகிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்தமருந்துகள் சினைப்பை நீர்க்கட்டிகளைப் போக்க உதவும்.

மீசை வளர்வது ஏன்?

சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்களுக்கு, ஆண்ஹார்மோனாகிய டெஸ்டோஸ்டீரோன் அதிக அளவில்சுரக்கும்; இதனால்தான் தேவையற்ற இடங்களில் மீசைவளர்ந்து தர்மசங்கடம் ஏற்படுகிறது.

சினை முட்டை உடைவதில் ஏற்படும் தாமதமே,கருத்தரிப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்தி விடுகிறது.பிரச்னையைத் தீர்க்க தாற்காலிகமாக உதவும் அலோபதிமருந்துகளைக் காட்டிலும், சரியான உணவு - உடற்பயிற்சி -யோகா - சித்த மருத்துவ சிகிச்சை ஆகியவை மூலம்சினைப்பை நீர்க்கட்டி துன்பம் முற்றிலுமாக நீங்கும்

கோடை காலத்தில் கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள்...!
👓 கோடையினால் நமது உறுப்புகளில் மிகவும் முக்கியமானதாக விளங்கும் கண்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

👓 அதிக வெப்பத்தால் நம் உடலில் உள்ள நீர்ச்சத்து அதிகம் உறிஞ்சப்படுகிறது. இதனால் கண்களில் வறட்சித்தன்மையும், எரிச்சலும் ஏற்படுகிறது.

👓 கணினியில் பணிபுரிபவர்களுக்கு கண் பாதிப்புகள் ஏற்படுவது இயல்புதான் என்றாலும் கோடையில் அந்த பாதிப்பு அதிகமாகவே இருக்கும்.

👓 மேலும், நாம் அதிக அளவில் குளிரூட்டிகளை  பயன்படுத்தும்போது அதில் இருந்து வரும் குளிர்ச்சியான காற்று நேரடியாக நம் கண்களில் படும்பொழுது கண்களில் வறட்சி மற்றும் எரிச்சல் உண்டாகும்.

👓 கோடை காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வைரஸ் மற்றும் வீக்கம், கண்கள் சிவத்தல், கண்களில் எரிச்சல், நீர் வடிதல், கண்களில் அரிப்பு போன்றவை ஏற்படுகிறது.

கண்களை பாதுகாக்க :

👓 அதிக அளவு நீரை பருகுதல் வேண்டும்

👓 கண்ணிற்கு குளிர்ச்சியான கண்ணாடிகளை அணிதல்

👓 அதிகளவு பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் எடுத்துக் கொள்ளுதல்

👓 காற்று கண்களில் நேரடியாக படாதவாறு பார்த்துக் கொள்ளுதல்

👓 கண் பயிற்சிகள் மேற்கொள்ளுதல், அடிக்கடி கண்களை நீரால் கழுவுதல்

👓 வெள்ளரி துண்டுகளை கண்களில் வைத்தல்

👓 தலை சுத்தமாக இல்லையென்றாலும் கண் நோய்கள் வரும். எனவே, கோடை காலத்தில் வாரம் மூன்றுநாள் தலைக்கு குளிக்கலாம்.

👓 அவ்வப்போது உள்ளங்கைகளை இணைத்து தேய்த்து இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது இதமான சூட்டைக் கண்களுக்கு தரும்.

👓 கண்களை பாதுகாக்க ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

👓 அலுவலகம் செல்லும் போது கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிட கண்களுக்கு குளுமை பரவும்.

👓 கோடை காலத்தில் தினசரி 6 முதல் 8 மணிநேரம் உறங்குவது கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

👓 மேலும், கண்களில் ஏற்படும் மற்ற பார்வை குறைபாடுகளுக்கும், கண்நோய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும், அருகில் உள்ள கண் மருத்துவமனையை நாடுவதே சிறந்த வழியாகும்.